search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
    X

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு

    • வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.
    • கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறிந்தார்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அவரை பெருந்துறை டி.எஸ்.பி. ஜெயபால், சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெ க்டர் சரவணன் மற்றும் சப்-இன்ஸ்பெ க்டர்கள், போலீ சார்கள் வரவே ற்றனர்.

    இதனை யடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கு குறித்த பதிவேடுகளை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆய்வு செய்தார்.

    அப்போது கடந்த 3 தினங்க ளுக்கு முன்பு ஈங்கூரில் தனியார் நிறுவன ஊழியரை கடத்தி சென்று ரூ.23 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்தும் போலீசாரிடம் கேட்டறி ந்தார்.

    அதேபோல் சென்னி மலை அருகே உப்பிலி பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வீட்டு வாசலில் தூங்கி கொண்டி ருந்த விவசாயி மற்றும் அவரது மனைவி ஆகி யோரை மர்ம நபர்கள் தாக்கி நகைகளை கொ ள்ளை யடித்து சென்றனர்.

    இதில் விவசாயி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இந்த கொலை யாளிகள் குறித்து ஒரு வருடம் ஆகியும் போலீசா ருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    அதனால் சம்பவம் நடந்த இடத்திற்கும் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வை யிட்டார்.

    Next Story
    ×