search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
    X

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    அரசு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

    • காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்கு மார் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட செயலாளர் வெங்கிடு முன்னிலை வகி த்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்த லைவர் மகாவிஷ்ணன் தொடக்க உரையாற்றினார்.

    தேர்தல் வாக்குறுதிப்படி சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பண பலன்களை மீண்டும் வழங்க வேண்டும்.

    அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கும் அதே நாளில் அதே விகிதத்தில் வழங்க வேண்டும். இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் அரசாணைகள் 115 ,139, 152-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    வருவாய் கிராம உதவியா ளர்களுக்கு அலுவலக உதவியாளர்க ளுக்கு இணையாக ரூ.15,700 ஊதியம் வழங்க வேண்டும். 4 மாத பணி நீக்க காலத்தை ஓய்வூதியத்திற்கு பொருந்தும் வகையில் அரசாணை வழங்க வேண்டும்.

    எய்ட்ஸ் கட்டு ப்பாட்டு திட்டத்தில் உள்ள பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    காப்பீட்டு திட்டத்தை அரசை ஏற்று நடத்த வேண்டும். காலி பணியிட ங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாரபட்சத்தை கைவிட்டு 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிபுரியும் சமையலர் உதவியாளர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட ங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

    Next Story
    ×