என் மலர்
கடலூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து உடைத்து சூறையாடினர்.
இது தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சதித்திட்டம் தீட்டியதாக கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று புதுவைக்கு சென்று கொண்டிருந்தது.
திருவதிகை அருகே சென்ற போது மர்ம மனிதர் ஒருவர் அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவதிகையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் வார்டு செயலாளர் சக்தி என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி மணிநகரை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாபு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தின் காலனி சுடுகாடு அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த உடல் அரை நிர்வாணமாக இருந்தது.
அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை யாரேனும் கொலை செய்து இங்கு உடலை வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது செம்மேடு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காலனிசுடுகாடு அருகே கெடிலம் ஆற்றங்கரையோரம் 37 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில், அரை நிர்வாணத்துடன் பிணமாக கிடந்தார். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசுக்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் குமரய்யா, தாசில்தார் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை பார்வையிட்டனர்.
பிணமாக கிடந்த வாலிபரின் தலை நசுக்கப்பட்டிருந்தது. கையில் அரிவாள் வெட்டு இருந்தது. வலது கையில் ஸ்வஸ் த்திக் என்று பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது உடல் முழுவதும் என்ஜீன் ஆயில் ஊற்றப்பட்டிருந்தது. பிணமாக கிடந்தவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
போலீஸ்சூப்பிரண்டு விஜயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினார். முதற்கட்ட விசாரணையில் வாலிபர் தலையில் கல்லைபோட்டு, அரிவாளால் வெட்டி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கொலையை மறைப்பதற்காக உடலில் என்ஜின் ஆயில் ஊற்றி எரிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.
செம்மேடு சுடுகாடு அருகே இதற்கு முன் ஏற்கனவே வெளியூரை சேர்ந்த ஒருவரை கொலை செய்து இங்கு வந்து போட்டுவிட்டு தப்பிய சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போதும் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. எனவே அந்த நபரை யாரேனும் கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவரா? அல்லது உள்ளூரை சேர்ந்தவரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செம்மேடு பகுதியில் மணல் திருட்டு அடிக்கடி நடைபெறுகிறது. எனவே மணல் கடத்தலில் ஏற்பட்ட தகராறில் யாரேனும் வாலிபரை கொலை செய்தனரா? எனவும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த கொலை தொடர்பாக செம்மேடு மற்றும் ஏரிப்பாளையம் பகுதிகளை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களின் விபரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்.
இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
நெய்வேலி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-17, கோவில் சாலையை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 55). இவர் என்.எல்.சி.யில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி அசோக்குமார் வேலைக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த உறவினர்கள் அசோக்குமாரை பல இடங்களில் தேடினர். அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அசோக்குமாரின் அண்ணன் சதீஷன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அசோக்குமாரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 19 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். அசோக்குமாரின் நண்பர் சுரேஷ்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அசோக்குமாரை அவரது நண்பர் சுரேஷ்குமார் மற்றும் வடலூரை சேர்ந்த ராஜேஷ் (36), நெய்வேலியை சேர்ந்த காமராஜ் (32) ஆகியோர் கடத்தி சென்று கொலை செய்து உடலை புதைத்திருப்பது தெரியவந்தது.
மேலும் இந்த சம்பவத்தில் குறிஞ்சிப்பாடியை அடுத்த சித்தாலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் (45) என்பவரும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.
அதன்படி போலீசார் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனுக்கு சொந்தமான மீன் குட்டையில் புதைக்கப்பட்டிருந்த அசோக்குமாரின் உடலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து சுரேஷ்குமார், ராஜேஷ், மீன் குட்டை வைத்திருந்த இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட காமராஜை தேடிவருகின்றனர்.
என்.எல்.சி. அதிகாரி கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
என்.எல்.சி. அதிகாரி அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் தனது நண்பர்கள் சுரேஷ்குமார், ராஜேஷ், காமராஜ் ஆகியோருடன் அடிக்கடி மது குடித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது.
அசோக்குமாருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சுரேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் வேலை எதுவும் பார்க்காமல் சுற்றி திரிந்தனர். அசோக்குமாருடன் ஏற்பட்ட நட்பால் அவரிடம் அடிக்கடி பணம் கடன் வாங்கி உள்ளனர்.
அப்போது அசோக் குமார் தான் கடனாக கொடுத்த பணத்தை அவர் களிடம் கேட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அசோக் குமாரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர்.
மேலும் அசோக்குமாரின் வங்கி கணக்கில் அதிக அளவில் பணம் இருப்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது. அதனை அப கரிக்கவும் அவர்கள் திட்ட மிட்டனர். இதற்காக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அசோக்குமாரை அங்கு அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தனர்.
மது போதையில் இருந்த அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டு அபகரித்து, ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டனர். அதன் பின்னர் மது மயக்கத்தில் இருந்த அசோக்குமாரை தாக்கினர்.
மேலும் அசோக்குமாரின் முகத்தை செல்லோ டேப்பால் ஒட்டினர். இதனால் மூச்சுத்திணறி அவர் இறந்து விட்டார். பின்னர் அவரின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அப்போது அவர்கள் சித்தாலிக்குப்பத்தைச் சேர்ந்த இளங்கோவனிடம் தொடர்பு கொண்டனர். அவர் உடனே எனக்கு சொந்தமான மீன் குட்டை உள்ளது. அங்கு அசோக்குமாரின் உடலை புதைத்தால் யாருக்கும் தெரியாது என்றார். அதன் பேரில் இளங்கோவன் காரை எடுத்து கொண்டு அங்கு வந்தார்.

பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த காரில் அசோக்குமாரின் உடலை ஏற்றி பெத்தான்குப்பத்தில் உள்ள மீன் குட்டைக்கு கொண்டு சென்றனர். அங்கு 12 அடி ஆழத்தில் குழி தோண்டி அசோக்குமாரின் உடலை புதைத்தனர். இதில் யாருக்கும் சந்தேகம் அடையாமல் இருக்க மீன் குட்டையை சுற்றிலும் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் போட்டு மூடினர். அதன் பின்னர் அவர்கள் ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சுரேஷ்குமார், ராஜேஷ், இளங்கோவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று மாலை நெய்வேலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கைதான 3 பேரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள பேரூர் பகுதியை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது62). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு உள்ள சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக அருள்நாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்நாதன் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக் காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்கமால் அருள்நாதன் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து சோழத் தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் அரசு மணல் குவாரி யாடு உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்டமங்கலத்தை சேர்ந்த பால முருகன் (வயது 37) மற்றும் பாலச்சந்திரன் (36) ஆகிய 2 பேர் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஆபாசமாக பேசி, தகராறில் ஈடுபட்டனர். பணியில் இருந்த காட்டு மன்னார்கோவில் தலைமை காவலர் சண்முக சுந்தரம், ஏன் இங்கு நின்று கொண்டு தகராறில் ஈடுபடுகிறீர்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்றார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த பாலமுருகன், பால சந்திரன் ஆகியோர் சேர்ந்து தலைமை காவலர் சண்முகசுந்தரத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காட்டு மன்னார் கோவில் போலீசில் சண்முகசுந்தரம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் வழக்குபதிவு செய்து போலீசுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகன், பாலசந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
காட்டுமன்னார் கோவிலை அடுத்த ருத்திரசோலை கிராமத்தை சேர்ந்தவர் அருலரசு (வயது 39). இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (33). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கணவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் 2 மகள்களுடன் விஜயலட்சுமி ருத்திரசோலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் இருந்து விஜயலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள், உறவினர்கள் பல இடங்களில் விஜயலட்சுமியை தேடினர். எங்கும் அவர் இல்லை.
இதுகுறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் வழக்குபதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார். 2 மகள்களின் தாய் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40) டெய்லர் . இவரது மனைவி புவனேஷ்வரி(34). இவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவரை பணியில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் புவனேஷ்வரி மன வேதனை அடைந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார். மயங்கி நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சையில் இருந்தப்போது புவனேஷ்வரி கூறியதாவது,
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தப் போது நோயாளியுடன் வந்த அட்டண்டர் ஒருவர் கொடுத்த டீயை குடித்ததற்காக பணியில் இருந்து நீக்கி விட்டார்கள். மன்னிப்புக் கடிதம் கொடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் நீக்கியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கி விட்டு வேறு ஒருவரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்துள்ளார்கள். என்னை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறினேன்.
இது குறித்து தனியார் ஒப்பந்த நிறுவன சூப்ரவைசரிடம் கேட்டதற்கு, புவனேஷ்வரி மீது லஞ்ச புகார் வந்ததால் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அசோக்குமார். (வயது 55). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் என்.எல்.சி. மனித வளத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக கூறி சென்ற அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் அசோக்குமாரின் அண்ணன் சப்ஷன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் போது மாயமான அசோக்குமாரின் வங்கி கணக்கில் இருந்து 15 லட்சம் ரூபாய் வரை எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
அவர் மாயமான பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்திருப்பது தொடர்பாக அசோக்குமாரின் நண்பர்களான நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் (38), வடலூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) ஆகிய 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனே அவர்களை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
அசோக்குமாரை கடத்தி கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார். அசோக்குமாரின் உடலை குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தான்குப்பத்தில் உள்ள இளங்கோ என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள மீன்குட்டையில் புதைத்துள்ளதாக கூறினார்.
மேலும் அசோக்குமாரின் ஏ.டி.எம். கார்டை எடுத்து அதன் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு அவரது வங்கி கணக்கில் பணம் எடுத்ததையும் ஒப்புக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சுரேஷ், ராஜேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.அதன் பின்னர் சுரேசை அழைத்து கொண்டு அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு இன்று சென்றனர்.
அங்கு சென்றதும் அசோக்குமார் உடல் புதைக்கப்பட்ட இடத்தை சுரேஷ் அடையாளம் காட்டினார். அதன் பின்னர் வருவாய் அதிகாரிகள் அனுமதியுடன் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அசோக்குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்தது.
பின்னர் அந்த உடலை புதுவை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
என்.எல்.சி. அதிகாரி கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி.
அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்று விட்டார்.
இன்று காலை அன்பரசன் தனது மாமா சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அன்பரசன் எடுக்க முயன்றார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பொன்னி மோட்டார் சைக்கிளை எடுக்கக்கூடாது என்றார்.
இதைத்தொடர்ந்து அன்பரசனுக்கும், பொன்னிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன்னி சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அன்பரசனின் முதுகில் குத்தினார். பின்னர் அந்த கத்தியை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.
கத்தி குத்தில் காயம் அடைந்த அன்பரசன் கூச்சல் போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தம் சொட்ட சொட்ட அன்பரசனை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் முதுகின் விலா எலும்பில் குத்தி இருந்த கத்தியை எடுக்க முடியாமல் திணறினர். கத்திய அகற்ற ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை.
இதனை தொடர்ந்து அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் மூலம் அந்த கத்தியை அகற்ற முயற்சி நடந்து வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்து உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
மேலும் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கிலும் வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
வேல்முருகன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வேல் முருகனை விடுதலை செய்யக்கோரி கடலூரில் அனைத்துக்கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகே அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஒன்று திரண்டனர்.
பின்னர் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திருமால்வளவன் தொடக்கவுரையாற்றினார்.
இதில் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் பெசவான்பாகவி, முன்னாள் எம்.பி. விசுவநாதன்,
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து, திராவிடர் விடுதலை கழகம் தலைவர் குளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல்சமது, மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர் செல்வன், மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவனர் ஏகாம்பரம் ஆகியோர் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. அமைப்பு செயலாளர் வந்தியதேவன், விடுதலை சிறுத்தை கட்சி அமைப்பு செயலாளர் திருமார்பன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மண்டல செயலாளர் திருமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்த், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவாசகம்.
ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் ஷேக் தாவூத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வேல்முருகனை விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
முடிவில் தி.மு.க. நகர செயலாளர் ராஜா நன்றி கூறினார்.






