search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bus glass broken"

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் கண்டக்டரை தாக்கி பஸ் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சின்னசேலத்திற்கு நேற்று இரவு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் 30-க்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் கண்டக்டராக ஆத்தூர் அருகே உள்ள பெரியேரிச் சேர்ந்த ரமேஷ் (வயது 28) என்பவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கூட்டுரோடு என்ற இடத்தில் பஸ்வந்து நின்றது.

    அப்போது செல்வராஜ் (வயது 50) சின்னசேலம் வானக்கோட்டை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (32) சின்னசேலம் காந்திநகரை சேர்ந்த முருகன் (32) ஆகியோர் பஸ்சில் ஏறினர். அவர்கள் 3பேரும் பஸ்சின் படிகட்டில் நின்று பயணம் செய்துகொண்டு இருந்தனர்.

    அப்போது கண்டக்டர் ரமேஷ் ஏன்? படிக்கட்டில் நிற்கிறீர்கள் என்றார்.

    ஆனால் அவர்கள் அப்படிதான் நிற்போம் என்று கூறி கண்டக்டரிடம் தகராறு செய்தனர்.

    இரவு 10 மணியளவில் அந்த பஸ் சின்னசேலம் சென்றது. பஸ்சில் இருந்து செல்வராஜ், தேவேந்திரன், முருகன் ஆகியோர் கீழே இறங்கினர்.

    பின்பு அவர்கள் கண்டக்டர் ரமேஷிடம் தகராறு செய்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்பு அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்.

    அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்த கற்களை எடுத்து பஸ் மீது வீசினார்கள். இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    இதையறிந்ததும் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். உடனே கண்டக்டர் ரமேஷ் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பஸ்நிலையத்திற்கு விரைந்து சென்று அங்கு தப்பி ஓடிய முருகன், தேவேந்திரன், செல்வராஜ் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி பண்ருட்டியில் 2 பஸ்களின் மீது கல்வீசி கண்ணாடி உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சுங்கச்சாவடியை அடித்து உடைத்து சூறையாடினர்.

    இது தொடர்பாக வேல்முருகனை போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவர் நெய்வேலியில் நடந்த கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வேல்முருகனை விடுதலை செய்யக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    மேலும் பல்வேறு இடங்களில் பஸ்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூரில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    வேல்முருகனை விடுதலை செய்யக்கோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சதித்திட்டம் தீட்டியதாக கடலூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் ஒன்று புதுவைக்கு சென்று கொண்டிருந்தது.

    திருவதிகை அருகே சென்ற போது மர்ம மனிதர் ஒருவர் அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவதிகையை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் வார்டு செயலாளர் சக்தி என்பவரை கைது செய்தனர்.

    இதேபோல் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி மணிநகரை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த பாபு (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #Thoothukudifiring
    நெல்லை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பஸ்கள் கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ் நெல்லையை அடுத்த சிவந்திபட்டி அருகே விட்டிலாபுரம் பகுதியில் வந்தபோது அங்கு மறைந்துநின்ற மர்ம நபர்கள் திடீரென பஸ்சை நோக்கி கல்வீசினர்.

    இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இதுபற்றி சிவந்திபட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல நாசரேத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு ஒரு தனியார் பஸ் சென்றது. பஸ் சிவந்திபட்டி அருகே சென்றபோது அந்த பஸ் மீதும் மர்ம கும்பல் கல்வீசியது.

    இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் சிவந்திபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் வழியாக வீ.கே.புதூருக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    பஸ் மேலமெஞ்ஞானபுரம் அருகே வந்தபோது அங்கு மறைந்து நின்ற மர்ம நபர்கள் பஸ்சை நோக்கி கல்வீசினர். இந்த சம்பவத்தில் பஸ் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

    இதுபற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்ப‌ட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Thoothukudifiring
    ×