search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாலிபர் முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்: கத்தியை அகற்ற முடியாமல் டாக்டர்கள் திணறல்
    X

    வாலிபர் முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்: கத்தியை அகற்ற முடியாமல் டாக்டர்கள் திணறல்

    விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிளை எடுக்கும் தகராறில் வாலிபரின் முதுகில் கத்தியால் குத்திய இளம்பெண்ணின் செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 20). கூலி தொழிலாளி.

    அதே தெருவில் அவரது மாமா சக்திவேல் வசித்து வருகிறார். இவரது மனைவி பொன்னி (30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சக்திவேல் வெளிநாடு சென்று விட்டார்.

    இன்று காலை அன்பரசன் தனது மாமா சக்திவேல் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அன்பரசன் எடுக்க முயன்றார். அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த பொன்னி மோட்டார் சைக்கிளை எடுக்கக்கூடாது என்றார்.

    இதைத்தொடர்ந்து அன்பரசனுக்கும், பொன்னிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன்னி சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து அன்பரசனின் முதுகில் குத்தினார். பின்னர் அந்த கத்தியை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

    கத்தி குத்தில் காயம் அடைந்த அன்பரசன் கூச்சல் போட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ரத்தம் சொட்ட சொட்ட அன்பரசனை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவர் முதுகின் விலா எலும்பில் குத்தி இருந்த கத்தியை எடுக்க முடியாமல் திணறினர். கத்திய அகற்ற ஆஸ்பத்திரியில் போதிய உபகரணங்கள் இல்லை.

    இதனை தொடர்ந்து அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ஆபரே‌ஷன் மூலம் அந்த கத்தியை அகற்ற முயற்சி நடந்து வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×