என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
    • போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    கடலூர்:

    குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

    விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.
    • இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது.

    கடலூர்:

    வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38). இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி ராதிகா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்தார். இதையடுத்து இவரது பிள்ளைகள் ராதிகாவின் பெற்றோரிடம் வளர்ந்து வருகின்றனர். சிங்கப்பூரில் பணி செய்து வந்த ரமேஷ் கொரோனா காலத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அது முதல் இங்கேயே தனியாக வசித்து வருகிறார்.

    இவரது தந்தை கருப்பையாவிற்கு 2 மனைவிகள், முதல் மனைவியின் மகன் ரமேஷ். தற்போது இவரது தந்தை 2-வது மனைவி, 2 பிள்ளைகளுடன் அதே ஊரில் தனியாக வசித்து வருகிறார். இதனால் ரமேஷ் தனியாக வசித்து வந்தார். இதனால் தனியாக வசித்து வரும் ரமேஷ், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சில நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவார் என்று தெரிகிறது. இவர் 2 முறை சாலை விபத்தில் சிக்கியுள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியில் சென்ற ரமேஷ், இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். இன்று அதிகாலை ரமேஷ் வீட்டின் வாசலில் இரத்தம் சிந்திக் கடந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் வீட்டினுள் இரத்த வெள்ளத்தில் ரமேஷ் கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்ற கிராம மக்கள் வேப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த இன்ஸ்பெக்டர் ராமச்ச ந்திரன் தலைமையிலான போலீசார் வீட்டிற்குள் சென்று ரமேஷின் உடலை கைப்பற்றினர். அதில் ரமேஷின் மார்பு பகுதியிலும், தலையில் பலத்த காயங்கள் இருப்பதைக் கண்டனர்.

    மேலும், அவரின் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவு வரையில் இரத்தம் சிந்தி இருந்தது. இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களையும், கடலூரில் இருந்து மோப்ப நாயினையும் வரவழைத்து வேப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தனியாக வசித்து வந்த ரமேஷினை முன்விரோதம் காரணமாக யாராவது கொலை செய்தனரா? சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட் கலெக்டர் பாலசுப்ர மணியம் விடு த்துள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பா ட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 31 ந்தேதி (செவ்வாய் கிழமை) புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும். கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டி ற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணிமுதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம் இக்குறைகளுக்கு சம்மந்த ப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    • புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது.

    சேத்தியாத்தோப்பு;

    என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை கிராமங்களுக்குள் வரவிடாமல் தடுத்து வருகின்றனர். இதையடுத்து என்.எல்.சி. நிர்வாகம், கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் குடும்பத்திற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை, ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு, மாற்று இடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்கிராமங்களில் நடைபயணம் மேற்கொண்டார். என்.எல்.சி. நிர்வாகம் தனியாரிடம் விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, இந்த நிர்வாகம் கடலூர் மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோஷத்துடன் நடைபயணத்தை நடத்தி சென்றார்.

    இந்நிலையில் புவனகிரி ஒன்றியம் மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு கடந்த காலங்களில் என்.எல்.சி. நிர்வாகத்தால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போது ஏக்கர் ஒன்றுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. இவர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று நள்ளிரவு கிராமங்களின் பொது இடங்களிலும், 300-க்கும் மேற்பட்டோர் வீடுகளிலும் கருப்பு கொடியேற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

    தகவலறிந்து இன்று விடியற்காலையில் புவனகிரி டி.எஸ்.பி தீபன்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இன்று நாடு முழுவதும் குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே, பொது இடங்களில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது என்று கிராம மக்களிடம் அறிவுறுத்தினார். இதையேற்ற கிராம மக்கள் பொது இடங்களில் இருந்து கருப்பு கொடியை அப்புறப்படுத்தினர். அதே வேளையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி பறந்து வருகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார்.
    • விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (வயது50) விவசாயி. இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார். அப்போது சாலையை கடந்த போது அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தினர். இதுகுறித்து குறிஞ்சி ப்பாடிதீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர், இது பற்றி வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொ ண்டனர். 

    • விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது.
    • விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் 2023ஆண்டுக்கு தனியார் நெல்அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டுமென்ற விவசா யிகளின் கோரிக்கையினை ஏற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்புக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் விவசா யிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்டறி ந்ததன் அடிப்படையில் தனியார் நெல் அறுவடை எந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்துகடலூர், மாவட்டக லெக்டர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி 2023 ஆண்டுக்கு சம்பா நெற்பயிர்களை அறுவடை செய்ய , பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,400 , டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நெல் அறுவடை எந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயிகளின் அறுவடை பணிகளுக்கு ஒத்துழைப்புவழங்கிட வேண்டும். 

    தவறும் பட்சத்தில் கூடுதல் வாடகை கோரும் எந்திர உரிமையாளர்கள் மீதுசம்மந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர்கள், வேளாண்மைப் பொறி யியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பாலசு ப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்ப ட்டுள்ளது.

    • வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது
    • 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்தி, பாண்டுசட்டி போன்ற உபகரண ங்களுடன் வரப்பில் சாகுபடி செய்ய உளுந்து விதைகள், ஜிப்சம், ஜிங்க்சல்பேட், தார்ப்பாய்கள் போன்ற வேளாண்மை இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது என பண்ருட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ளநடப்பு வருடத்தில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண்மை இடுபொருட்கள் மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில் கடப்பாரை, மண்வெட்டி, களைக் கொத்தி மற்றும் பாண்டு சட்டி உள்ளிட்ட வேளாண் கருவிகள் கொண்ட தொகுப்புகள் 357 விவசாய குடும்பங்களுக்கு ஒரு தொகுப்பு ரூ.1500 மானியத்தில் வழங்கப்படுகிறது. 

    மேலும் 622 ஏக்கர் நிலத்தில் வரப்பில் சாகுபடி செய்யக்கூடிய வகையில் உளுந்து விதைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ என்ற அளவில் 50 சத மானியத்தில் 75 டன்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 374 ஏக்கர் நிலப்பரப்பில் இடக்கூடிய வகையில் ஏக்கர் ஒன்றுக்கு பத்து கிலோ ஜிங்சல்பேட் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. 104 தார்பாய்கள் ஒரு தார்ப்பாய் ரூ.830 மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்து பராமரிக்க கூடிய வகையில் பண்ருட்டி வட்டத்தில் 30,000 மரக்கன்றுகள் ஒரு மரக்கன்று ரூ.15 வீதம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

    இதில் தேக்கு, மகாகனி,குமிழ் போன்ற மர வேலைக்கு தகுதியுடைய மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி உழவன் செயலில் பதிவு செய்து பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் பெற்று பயனடைய பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குனர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

    • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
    • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

    அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • பண்ருட்டியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யபட்டார்.
    • இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,சரண்யா, புஷ்பராஜ், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பண்ருட்டி அம்பேத்கர் நகரில் பாலாஜி (வயது24) கஞ்சாவிற்பனையில்ஈடுபட்டதுதெரியவந்தது இதனை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

    • வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை இன்று காலை எட்டியது.
    • வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்தது.

    மேலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.

    இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை இன்று காலை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    • சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை சென்றது. இந்த பஸ் பண்ருட்டி அருகே பணிக்கண்குப்பம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்மீது மோதியது. மோதிய வேகத்தில் பஸ் அந்த பகுதியில் உள்ள கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராமதாஸ், ஆறுமுகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் விசாரிக்கிறார். 

    • மகேந்திரனுக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது.
    • பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    கடலூர்:

    சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் மகேந்திரன் (வயது 57) சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தார். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வழக்கம் போல சிதம்பரம் மேல ரதவீதி, கீழ ரத வீதிகளில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு படபடப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக போலீஸ் நிலையம் திரும்பினார். அங்கிருந்த காவலர்களிடம் சம்பவத்தை கூறும் பொழுதே மயங்கிய நிலையில் போலீஸ் நிலையத்தில் உள்ள பெஞ்சில் சாய்ந்து விட்டார்.

    பணியில் இருந்த போலீசார் அவரை சிதம்பரம் அரசு மருத்துவ மனைக்கு ஜீப்பில் அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். பணியில் இருக்கும் போதே இறந்து போன சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ஒரு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ், உதவி சுப்பிரண்டு ரகுபதி, சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் உட்கோட்ட போலீசார்கள் உயிரிழந்த மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    ×