search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hay"

    • திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.
    • சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அடுத்த அணைக்கரை மதுசா லையில் வசிப்பவர் பாஸ்கர் (வயது 40) விவசாயி. இவர் தனது வீட்டின் வளர்க்கும் மாடுகள், கன்றுகளுக்காக வயலில் அறுவடை செய்த வைக்கோலை சுமார் 100 கட்டுக்கும் மேலாக அடுக்கி வைத்து போராக அமைத்து வைத்திருந்தார்.

    இந்நிலையில் திடீரென வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவி டைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வின்சென்ட் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அப்பகுதியில் குப்பை களை கொளுத்தி யதால் காற்றில் தீ பரவியதில் வைக்கோல் போர் எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரூ.20 ஆயிரம் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

    • வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரி மூலம் எடுத்து செல்கின்றனர்.
    • விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை கிடைக்கிறது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம், மெலட்டூர், திருக்கருகாவூர் அதனை சுற்றுள்ள பகுதியில் சம்பா தாளடி பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களை தற்போது அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்து வருகின்றனர்.

    அறுவடை செய்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை அரியலூர், பெரம்பலூர், மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெளியூர் வியாபாரிகள் வந்து வைக்கோல்களை மொத்தமாக விலைபேசி மிஷின் வைச்சு வைக்கோலை சூருட்டி கட்டு கட்டாக கட்டி லாரிமூலம் எடுத்து செல்கின்றனர்.

    வைக்கோல்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரைக்கும் கிடைக்கிறது என்பதால் விவசாயிகள் வைக்கோல்களை சேதமின்றி அறுவடை செய்து வயல்களில் வைக்கோல்களை பாதுகாத்து வருகின்றனர்.

    • அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.

    அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

    • கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார்.
    • விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (வயது50) விவசாயி. இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார். அப்போது சாலையை கடந்த போது அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தினர். இதுகுறித்து குறிஞ்சி ப்பாடிதீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர், இது பற்றி வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொ ண்டனர். 

    ×