search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்தது
    X

    தீப்பிடித்து எரிந்து சேதமான லாரி.

    வைக்கோல் ஏற்றி சென்ற லாரி தீப்பிடித்தது

    • அறுவடையான வைக்கோல்கள் வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம், பாப நாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் தற்பொழுது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அறுவடையான வைக்கோல்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்ப ப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கும்பகோணம் அருகே திருப்புரம்பியம் என்ற இடத்தில் இருந்து நேற்று இரவு 165 வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல்லுக்கு கைலாசம் என்பவர் லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக லாரி கொந்தகை அருகே சாலையில் உள்ள மின் கம்பியில் உரசி உள்ளது .இதில் வைக்கோலும், லாரியும் எரிந்து முற்றி லும் சேதமானது.

    அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் கும்பகோணத்தில் இருந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

    சேதத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு வருகிறது.

    Next Story
    ×