search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கம்பியில் உரசியதால்   வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ விபத்து
    X

    மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டரில் தீ விபத்து

    • கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார்.
    • விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.

    கடலூர்:

    வடலூர் அருகே உள்ள கருங்குழியைச் சேர்ந்தவர் பாபு (வயது50) விவசாயி. இவர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள சொந்தநிலத்தில் நெல் அறுவடை செய்த பின்பு அதன் வைக்கோலை கருங்குழியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் டிராக்டரில் எடுத்து க்கொண்டு சென்றார். அப்போது சாலையை கடந்த போது அந்த வழியே மின்இணைப்புக்கு செல்லும் மின்சார வயரில் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதில் டிராக்டரில் ஏற்றி சென்ற வைக்கோல் கட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் சத்தம் போட்டு டிராக்டர் நிறுத்தினர். இதுகுறித்து குறிஞ்சி ப்பாடிதீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் உடனே விரைந்து வந்து தீ மேலும் மேலும் தீ பரவாமல் தடுத்தனர், இது பற்றி வடலூர் போலீஸ் விசாரணை மேற்கொ ண்டனர்.

    Next Story
    ×