என் மலர்
கடலூர்
- கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நெய்வாசல் பகுதியைச் சேர்ந்த இளையபெருமாள் மகன் பாலமுருகன் (வயது 23) சென்னை பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
அரியலூர் மாவட்டம் சுண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார் (24) நெய்வாசலில் தனது பாட்டி வீட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். பாலமுருகன், சதீஷ்குமார் இருவரும் நண்பர்கள். இந்நிலையில் நெய்வாசல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்னையில் இருந்து பாலமுருகன் வந்தார். இன்று காலை சதீஷ்குமார், பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் நெய்வாசலில் இருந்து திட்டக்குடி நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை சதீஷ்குமார் ஓட்டிசென்றார்.
ஆவணங்குடி-பட்டூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் வந்தபோது மோட்டார் சைக்கிளின் முன்னாள் சென்ற தனியார் கல்லூரி பஸ்சை முந்தி செல்ல முற்பட்டனர். மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் எதிரே வந்த டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து சதீஷ்குமார், பாலமுருகன் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் இறந்தார். இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சதீஷ்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு வந்த இடத்தில் டிராக்டர் மோதி 2 வாலிபர்கள் இறந்தது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
- போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
- சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இன்று காலை மாற்றுத்திறனாளி இளைஞருடன் அவரது குடும்பத்தினர் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து தங்கள் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
அங்கு இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கினர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பண்ருட்டி அடுத்த வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது தாய், மனைவி, மாற்றுத்திறனாளி மகன், சிறுவன் உள்பட 5 பேர் வந்திருந்தது தெரிய வந்தது.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சரவணன் வீட்டையும், காரையும் அடித்து உடைத்து தீ வைத்து கொளுத்தி விட்டனர். மேலும் இந்த ஊருக்குள் வரக்கூடாது என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தும், பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய பிறகு, சம்பந்தப்பட்ட ராஜ்குமார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் வீரசிங்ககுப்பத்திற்கு சரவணனின் மனைவி சென்றபோது, அங்குள்ள ஒரு சிலர் நீயும் உனது கணவரும் ஊருக்குள் வரக்கூடாது. இதனை மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து இது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி சரவணன், நாங்கள் ஊருக்கு செல்லும் போது மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி மனு கொடுத்தார். கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மகனுடன் குடும்பத்தினர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜலிங்கம் தாலி செயினை அரசு வங்கியில் அடகு வைத்தார்.
- வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோயில் அருகே சம்பவ ராயபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மனைவி செல்வம் (வயது 60). இவர் 3 சவரன் தாலி செயினை காட்டுமன்னார் கோவிலில் உள்ள அரசு வங்கியில் அடகு வைத்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அடகுவைத்த தாலி செயினை மீட்பதற்காக மூதாட்டி வங்கிக்கு சென்றார். பின்னர் தாலி செயினை வாங்கி மூதாட்டி கொண்டுவந்த கைப்பையில் வைத்து வெளியே வந்தார். இதனையடுத்து மூதாட்டி செல்வம் சந்தேகத்தின் பேரில் பையை திறந்து பார்த்தார்.
அப்போது பையில் வைத்திருந்த நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி வங்கி ஊழியர்களிடம் இதுகுறித்து தெரிவித் துள்ளார். இதனை கண்டு கொள்ளாத வங்கி ஊழி யர்கள் அவரை வங்கியை விட்டு வெளி யேற்றிதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டி காட்டு மன்னார் கோயில் போலீஸ் நிலை யத்தில் புகார் ெகாடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன நகை சுமார் 1.5 லட்சம் மதிப்பு ஆகும். பகல் நேரத்தில் வங்கியில் இருந்த மூதாட்டியின் நகை காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்களும் பெற்றோர்களும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.
கடலூர்:
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை மற்றும் அனல் காற்று வீசியதால் பொது மக்கள் அனைவரும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் மாணவர்கள் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை இன்று 12 -ந் தேதியும் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நாளை மறுநாள் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மாணவர்களும் பெற்றோர்க ளும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தந்ததோடு மாண வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கூடுதலாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகள் என 2200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றது. இதில் இன்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 800-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறந்ததை முன்னிட்டு கடந்த சில தினங்களாக பள்ளி வளாகங்கள் மற்றும் கழிவறைகள் சுத்தம் செய்யும் பணி, வர்ணம் பூசும்பணிகள், வகுப்பறைகளில் டேபிள்கள் வைக்கும் பணி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
இன்று காலை 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ - மாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் காலை முதல் முக்கிய சாலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து விட்டு சென்றதை காண முடிந்தது. அப்போது ஒரு சில மாணவ, மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. பள்ளிகளில் செயல்படும் விடுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் விதமாக இரும்பு பெட்டிகள் மற்றும் தங்களுக்கு தேவையான உடைமைகளை பெற்றோர்களுடன் எடுத்து வந்ததையும் காண முடிந்தது. முன்னதாக பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் பன்னீர் தெளித்து ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர். காலை முதல் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்த காரணத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் போலீசார் போக்குவரத்து சரி செய்தனர்.
இதேபோல் விருத்தாசலம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் மகிழ்ச்சியாக பள்ளிக்கு சென்றனர். இதில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு தலைமை யாசிரியர் செல்வகுமாரி , உதவி தலைமைஆசிரியர் கலைவாணி உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்து மற்றும் சாக்லேட்டுகள் கொடுத்து மாணவிகளை வரவேற்றனர். மேலும் தமிழக அரசின் உத்தரவின்பேரில் பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்று பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இதேபோல் பண்ருட்டி யிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின் இன்று 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் நாளில் பாடப்புத்த கங்கள், நோட்டுகள் உள்பட இலவச கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான ஏற்பாடு கள் தீவிரமாக நடந்து வரு கிறது.இதனைமுன்னிட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில் பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ள பட்டது.
- அரசு அலுவலர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
- கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதலமடைந்து பயனற்ற நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சி நிலையம் அருகே புதிய கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பணிகள் தொடர்பாகவும், கோரிக்கை மனுக்கள் அளிப்பது தொடர்பாகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் பல்வேறு அரசு அலுவ லர்கள் கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக் கிழமை விவசாயிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.
இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடலூர் கலெக்டர் அலு வலகத்திற்கு வந்து செல்லும் நிலையில் கடலூர் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செல்லக் கூடிய பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடலூர் கலெக்டர் அலுவல கத்திற்கு பேருந்தில் செல்லும் போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல் செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருவ தோடு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் புகார் தெரிவித்தும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது மட்டும் இன்றி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குளிர்சாதன வசதி யுடன் அமைக்கப்பட்ட பஸ் நிறுத்தம் முழுவதும் சிதல மடைந்து பயனற்ற நிலை யில் இருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். மேலும் அதிகாரி களிடம் புகார் தெரிவிக்கும் சமயத்தில் டிரைவர்கள் பேருந்து நிறுத் தத்தில் நிறுத்தி செல்கின்ற னர். பின்னர் வழக்கம் போல் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்து களை நிறுத்தி செல்லாமல் ஆல்பேட்டை சோதனை சாவடி நிறுத்தம் வரை அனைவரும் சென்று அங்கிருந்து ஆட்டோ மூலம் தங்கள் பணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் ஏதேனும் பிரச்சனைகள் மற்றும் குறைகள் இருந்தால் கடலூர் கலெக்டர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆனால் கடலூர் கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லாமலும், அதனை மீறி நிறுத்தி சென்றால் பொது மக்களுக்கும் நடத்துனருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதன் பிறகு அவசர அவசர மாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடும்போது பல்வேறு விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகி யுள்ளது. ஆகையால் கடலூர் கலெக்டர் அலுவலகம் வழி யாக செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட போக்கு வரத்து துறை அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பார்களா? என பார்ப்போம்.
- வசந்தகுமார் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார்.
- கருணா மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கொக்குபாளையத்தை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது 18). இவர் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்துள்ளார். அதே ஊரை சேர்ந்த கருணா (28), வசந்தை மது குடிக்க அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் நேற்று மது பாட்டில்கள் வாங்கிக்கொண்டு விழுப்புரம் அருகே உள்ள திருப்பாச்சனூருக்கு சென்று மதுஅருந்தினர். போதையில் லாரி டிரைவரான கருணா அந்த வழியே சென்றவர்களிடம் வம்புச் சண்டையிழுத்தார்.
இதில் கருணாவை சமாதானப்படுத்த வசந்த் முயற்சித்தார். கருணா சமாதானம் ஆகாததால் அவரை அங்கேயே விட்டுவிட்டு, கருணாவின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வசந்த் வீடு திரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த லாரி டிரைவர் கருணா வசந்த் வீட்டுக்கு வந்தார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வசந்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வசந்த் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்தத புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரிடிரைவர் கருணாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- இந்திரா இவரது 2 மகள்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
- மகாதேவன் உடலை கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை ) மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். இந்த நிலையில் புவனகிரி வட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த இந்திரா (வயது 48). இவரது 2 மகள்கள், உறவி னர்கள் மற்றும் மீனவம் காப்போம் மக்கள் இயக்கம் நிர்வாகி செந்தாமரை செல்வம் ஆகியோர் நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் (56). சவுதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி மகா தேவன் உடன் பணி புரிந்து வந்த நபர்கள் தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொண்டு எனது கணவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதனை கேட்ட இந்திரா அதிர்ச்சி அடைந்தார். மேலும் எனது கணவர் மகாதேவன் உடலை சவுதி அரேபியாவில் இருந்து எங்கள் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் இறந்த நிலை யில் எங்களது குடும்பத் திற்கு அரசு உதவிகள் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் மனு அளிக்க கலெக்டர் அலுவல கத்தில் இருந்த இறந்த மகாதேவன் மகள் மதுமிதா என்பவர் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததால் திடீரென்று மயக்கம் அடைந்தார். பின்னர் மயக்கம் அடைந்த மது மிதாவை அங்கு இருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் பாதுகாத்தனர். இதனைத் தொடர்ந்து மனைவி மற்றும் மகள்கள் கண்ணீர் மல்க இறந்த மகாதேவன் உடலை மீட்டு தர வேண்டி கோரிக்கை விடுத்தனர். இதன் காரண மாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன.
- 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
கடலூர்:
தமிழகத்தில் நடைபெற இருக்கும் குருவைப் பட்ட சாகுபடிக்காக மங்களூர் துறைமுகத்தில் இருந்து விருத்தாசலம் ெரயில் நிலையத்திற்கு உர மூட்டைகள் வந்தன. பொட்டாஷ் 1080 மெட்ரிக் டன் உர மூட்டைகளும் , 253 மெட்ரிக் டன் கலப்பு உரங்களும் சரக்கு ெரயில் மூலம் வந்து இறக்கப்பட்டது. பின்னர் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கடலூர், அரியலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது.
- இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
- வேல்முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி சீனிவாச அவென்யூவில் வசித்து வருபவர் வேல்முருகன் (வயது 62). ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர்.
இவர் நேற்று சென்னையில் இருந்த தனது மனைவியை அழைத்து வர சென்றார். இன்று காலை மீண்டும் கணவன், மனைவி இருவரும் நெய்வேலியில் உள்ள வீட்டிற்கு வந்தனர்.
வீட்டின் முன்பக்க கதவு உடைந்து திறந்து கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைந்து திறந்து இருந்தது.
பீரோவில் உள்ள பாதுகாப்பு அறையை பார்த்தபோது, அதிலிருந்த 20 பவுன் நகை, 1/4 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
இத்தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
- நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல்
- மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஊ.மங்கலத்தை சேர்ந்த வர் மணிவேல் (வயது 42). இவர் என்.எல்.சி. முதலா வது சுரங்கத்தில் தொழி லாளியாக வேலைபார்த்து வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிவேலுக்கு உடல்நலம் பாதிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து அவர் என்.எல்.சி. பொது மருத்துவ மணையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு திருச்சி யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மணிவேல் உயிரிழந்தார்.
அவர் மாரடைப்பால் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மணிவேல் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஊ.மங்கலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இறுதி சடங்கு நடைபெற இருந்த நிலையில் ஊ.மங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மணி வேலின் சாவு குறித்து யாரா வது தகவல் தெரிவித்தி ருக்கலாம் அதனால்தான் போலீசார் உடலை பிரேத பரிசோதகை்காக அனுப்பி வைத்தது தெரியவந்தது.
- வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
- நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு வில் தனியார் மருத்துவ மனைகள், கல்வி நிறுவ னங்கள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் மழைக்காலங்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி யை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் தற்போது கழிவுநீர் முழுவதும் சாலை யில் பெருக்கெடுத்து ஓடி குட்டை போல் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம் எதிரில் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 14-ந்தேதி பள்ளி கள் திறக்க உள்ள நிலை யில் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது மட்டும் இன்றி சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருவதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் மீது செல்வதால் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளித்து துர்நாற்றம் வீசுவதோடு உடல் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.
ஆகையால் கடலூர் மாந கராட்சி நிர்வாகம் பாதி யில் நிறுத்தப்பட்ட வடி கால் வாய்க்கால் பணி களை உடனடியாக கட்டி நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதி முழு வதும் தண்ணீர்சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகை யால் இதனை உடனடியாக கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






