search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harassment of student"

    • சுந்தர் சீனு ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார்.
    • காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் எஸ்.எரிப்பாளையம் கிரா மத்தை சேர்ந்தவர் சுந்தர் சீனு (வயது 23). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம் சென்று, அவரை காதலிப்ப தாகவும், தன்காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். தனக்கு படிப்பில்தான் விருப்பம் இருப்பதாகவும், காதலிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறி காதலை ஏற்க அந்த மாணவி மறுத்துள்ளார்.

    ஆனாலும் சுந்தர் சீனு தொடர்ந்து அந்த மாண வியை பின்தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து  வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்சீனுவை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    ×