என் மலர்tooltip icon

    சென்னை

    • துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
    • தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.

    * அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.

    * துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.

    * இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

    * தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை

    * தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    * ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    சென்னை:

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் மதவாத எதிர்ப்பு சக்திகள் இருப்பதாக வானதி கூறியிருக்கிறார். எப்படி? எங்கு இருக்கிறது? என கூற வேண்டும்.

    * பொத்தாம் பொதுவாக பேசினால் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

    அப்போது பேசிய சபாநாயர் அப்பாவு, இந்தியாவில் மத பயங்கரவாதம் இருக்கிறது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறினார்.

    தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

    * பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது என வானதிக்கே தெரியும். பிரதமர் கூட சென்று பார்க்கவில்லை.

    * தமிழ்நாட்டை பொறுத்தவரை மதவாதம் உள்ளே நுழைய முடியாது.

    * கோவையில் கோவில் அருகில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * காஷ்மீர் மாதிரி இங்கே நடக்கக்கூடாது என வானதி பேசி உள்ளார், அப்படி தமிழகத்தில் நிச்சயமாக நடைபெறாது.

    * காஷ்மீர் விவகாரம் தெரிந்தவுடன் நீங்கள் எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையாக இருந்தாலும் உறுதுணையாக இருப்போம் என்று கூறினேன்.

    * காஷ்மீர் பிரச்சனையில் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

    * வானதி சீனிவாசன் பா.ஜ.க. தலைமையிடம் பேசி தமிழகத்திற்கு வர வேண்டிய நிதியை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.

    * தமிழகத்திற்கான நிதியை பா.ஜ.க.விடம் இருந்து பெற்று தர தயவு செய்து தமிழக பா.ஜ.க.வினர் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
    • காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    தமிழக சட்டசபையில் 'பெண்கள் பாதுகாப்பு' தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், அவை முன்னவர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.

    நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த அவை முன்னவர் துரைமுருகன், வாரணாசியில் 23 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    ராமாயணத்திலே பெண்ணை தூக்கிச் சென்றனர். எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள் என்று கூறினார்.

    எனக்கு அச்சம் உள்ளது என வானதி கூறியவுடன் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை என சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.

    இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.

    • தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
    • காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.

    சென்னை:

    சட்டசபையில் காவலர்களுக்கு அளிக்கப்படும் வார விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது:

    * தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    * உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 67,233 நபர்களுக்கும் வார விடுமுறை வழங்கப்படுகிறது.

    * முக்கியமான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு காலங்களில் மட்டும் வார விடுமுறை வழங்க முடிவதில்லை.

    * காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
    • மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * நிதி நிறுவனங்களில் பணம் செலுத்தி பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    * பொதுமக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் தி.மு.க. ஆட்சியில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    * மோசடி நிறுவனங்களிடம் இருந்து அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.103 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

    * தி.மு.க. ஆட்சியில் ரூ.319 கோடி சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.
    • காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது.

    * காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    * காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    * பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்.

    சட்டசபை உறுப்பினர்களின் கோரிக்கையை அடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் கலைஞர் பல்கலைக்கழகம் சட்ட முன்வடிவை சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வேந்தராக கொண்டு கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைகிறது. கலைஞர் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் இருப்பார். 17 கல்லூரிகள் கலைஞர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் சட்டமுன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது.
    • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 22-ந்தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.74,320-க்கு விற்பனையானது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இனி, தங்கம் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மறுநாளே அர்ந்தர் பல்டி அடித்தது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.2,200-ம், ஒரு கிராம் ரூ.275-ம் ஏறிய வேகத்திலேயே சரிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகிறது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,005-க்கும் சவரன் ரூ.72,040-க்கும் விற்பனையாகிறது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.71 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.8,940-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.111-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    1 கிலோ பார் வெள்ளி ஆயிரம் ரூபாய் குறைந்து ரூ.1 லட்சத்து 11ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    26-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    25-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    24-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,040

    23-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-04-2025- ஒரு கிராம் ரூ.112

    26-04-2025- ஒரு கிராம் ரூ.112

    25-04-2025- ஒரு கிராம் ரூ.111

    24-04-2025- ஒரு கிராம் ரூ.111

    23-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
    • அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

    தமிழ்நாடு சட்டசபையில் இன்றைய நிகழ்வு தொடங்கியது. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஈட்டிய 15 நாள் விடுப்புக்கான பணப்பலனை மீண்டும் பெறலாம்.

    * அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

    * ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர்கள், ஆசிரியர்களின் பிள்ளைகளின் கல்விக்காக தரப்படும் கல்வி முன்பணம் உயர்த்தி வழங்கப்படும்.

    * தொழில்நுட்ப கல்விக்கான முன்பணம் ரூ.1 லட்சமாகவும் கலை, அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் படிப்பு முன்பணம் ரூ.50,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

    * அரசு பணியாளர், ஆசிரியருக்கான மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக உயர்த்தப்படும்.

    * மகப்பேறு விடுப்பு காலத்தை பதவி உயர்வுக்கு தகுதி காலமாக எடுத்துக்கொள்ளப்படும்.

    * பழைய பென்சன் திட்டம் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பர் 30-க்குள் அறிக்கை அளிக்க அறிவுறுத்தி உள்ளார்.

    • இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.
    • கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது.

    சென்னை:

    தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 4-ந்தேதி முதல் 28-ந்தேதி வரையிலான 25 நாட்களுக்கு 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்திரி வெயில்' காலம் கணக்கிடப்பட்டு வருகிறது.

    கோடை காலத்தையொட்டி வரும் கத்திரி வெயில் காலத்தில் இயல்பைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவம் ஆடும். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் பல இடங்களில் உச்சபட்ச வெயில் பதிவாகும்.

    அந்தவகையில் நடப்பாண்டில் கோடைகாலம் கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்தே வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்து வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உணரமுடிகிறது.

    இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஆங்காங்கே வெப்ப சலனத்தால் கோடை மழை ஓரளவுக்கு வெப்பத்தில் இருந்து தப்பிக்க வழி செய்கிறது. அதுவும் வருகிற 30-ந்தேதிக்கு பிறகு ''குட்-பை'' சொல்ல இருக்கிறது.

    இப்படி இருக்கும் சூழலில் வெயிலின் உக்கிரத்தை கக்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்தே பல இடங்களில் வெயிலின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

    வீடுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சில நிமிடங்கள் மின் விசிறி நிறுத்தப்பட்டாலே வியர்த்து கொட்டும் அளவுக்கு அசவுகரியத்தை உணருகிறோம். அப்படி பார்க்கையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயிலின் உக்கிரம் எப்படி இருக்குமோ? என்பது பலருடைய ஆவலாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர்களிடம் கேட்டபோது அவர்கள், 'லா-நினோ மற்றும் ஐ.ஓ.டி. என்று கூறப்படும் கடல் அமைப்புகள் சமநிலையில் இருப்பதால், கடல் சார்ந்த அலைவுகள் முற்றிலுமாக வலுவிழந்து, மழைக்கான சாதகமான சூழல் எதுவும் ஏற்படாத நிலை இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் வெப்பம் சற்று உயர்ந்தே காணப்படும். இருப்பினும் வெப்ப அலை வீசும் அளவுக்கு இருக்காது என்பது ஆறுதல் வார்த்தையாக இருந்தாலும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதத்தால் உணரும் வெப்பநிலையின் தாக்கம் இருக்கும். இதனால் அசவுகரியத்தை நாம் உணருவோம்' என்றனர்.

    கடந்த ஆண்டு (2024) அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானதுதான் அந்த ஆண்டின் உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெயில் பதிவாகாது என்ற வானிலை ஆய்வாளர்களின் பதில் ஆறுதலை கொடுக்கிறது. ஆனாலும் கடல் சார்ந்த அலைவுகள் தொடர்ந்து அதே நிலை நீடித்தால், நிலைமை எப்படி இருக்கும்? என்பது அப்போதுதான் தெரியும்.

    • நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது.
    • இதில் 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது:

    ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. நல்ல பிளேயர்களை வாங்குவதற்கு போதுமான பணம் இருந்தும் அந்த பிளேயர்களை வாங்க சிஎஸ்கே ஏன் ஆர்வம் காட்டவில்லை? கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சிஎஸ்கே வாங்கவில்லை?

    இந்த ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு.

    தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சி.எஸ்.கே. அணிக்காக கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என தன்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அணியில் இருக்கும் மற்ற பிளேயர்கள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும்.

    என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

    • ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!
    • ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி! மக்களாட்சிக்கும் – மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி.

    ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்து உச்சநீ்திமன்றம் வழங்கிய தீர்ப்பு மக்களாட்சி, மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றுத்தந்த வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    இதுகுறித்து நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-

    இந்த விழாவை பாராட்டு விழா என்று சொல்வதைவிட, வெற்றி விழா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்! இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் எந்த மாநிலமும் எப்போதும் பெற்றிடாத இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட வழக்கறிஞர்களைப் பாராட்டி எல்லையில்லாத மகிழ்ச்சியோடு நாமெல்லாம் கூடியிருக்கிறோம்!

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை – ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு,போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற காலத்தில், மிக முக்கியமான இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாண்பமை பர்த்திவாலா, மாண்பமை மகாதேவன் அமர்வு வழங்கிய தீர்ப்பு – தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல; மக்களாட்சிக்கும் – மாநில சட்டமன்றங்களின் உரிமைகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி!

    ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்தது மிகப்பெரிய வெற்றி!

    அரசியல் சாசன பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்படுகிறது" – "இந்த மசோதாக்கள் அனைத்தும் உடனே சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது" என்று மாண்பமை நீதியரசர்கள் தீர்ப்பளித்தபோது, ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களும் தலைநிமிர்ந்து உச்சநீதிமன்றத்திற்கு வணக்கம் செலுத்தியது!

    ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வில் மாநில அரசுகளின் உரிமைகளை எக்காலத்திலும் பாதுகாத்திடும் வரலாற்று சாசனமாக இந்த தீர்ப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். இன்னும் பெருமையோடு சொல்கிறேன். இது இந்திய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தால் பெற்றுத்தந்திருக்கக்கூடிய மாபெரும் விடுதலை!

    இந்த அரசியல் உரிமையை - சட்டபூர்வமான வாதங்களின் மூலமாக தமிழ்நாடு அரசு முன்வைத்து வாதாடியது. அந்த அறிவார்ந்த வாதங்களுக்குச் சொந்தக்காரர்களான வழக்கறிஞர்கள்தான் இன்றைக்கு நம்மோடு இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

    உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அவர்களால் இந்த விழாவிற்கு வர இயலவில்லை. அவர் இங்கு இல்லையென்றாலும் தமிழ்நாடு அரசின் சார்பில் என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

    உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் - அபிஷேக் சிங்வி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் - ராகேஷ் திவேதி அவர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் - மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் அவர்களைத் தமிழ்நாடு அரசின் சார்பில் நான் பாராட்டுகிறேன்.

    அறிவிற்சிறந்த வழக்கறிஞர் பெருமக்களே.....

    உங்களின் வாழ்க்கையில் எத்தனையோ பெரிய பெரிய வழக்குகளைப் பார்த்திருப்பீர்கள். வெற்றியும் பெற்றிருப்பீர்கள். தனிநபர்கள் – அமைப்புகள் – ஏன், தனியொரு மாநிலம் கூட அந்த வழக்குகளில் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், இந்த வழக்கின் வெற்றி என்பது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் – அனைத்து மாநில மக்களுக்கும் – மக்களாட்சிக்கும் கிடைத்திருக்கும் வெற்றி!

    இந்த மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரைக்கும், இந்த வழக்கும் – வலுவான வாதங்களை வைத்த நீங்களும் பேசப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்! வழக்குத் தாக்கல் செய்த தமிழ்நாடும் - வாதிட்ட நீங்களும் - தீர்ப்பளித்த நீதியரசர்களும் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருப்போம் என்பது உறுதி!

    இந்த தீர்ப்பு கொடுத்திருக்கும் புத்துணர்ச்சி மற்றும் நம்பிக்கையோடுதான் மாநில சுயாட்சிக் குழுவை நாம் உருவாக்கியிருக் கொடுத்ததுதான் "மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி" என்ற இலக்கு!

    அந்த இலக்கை வென்றெடுக்க இந்தத் தீர்ப்பு வழிகாட்டி இருக்கிறது! மாநில சுயாட்சியைப் பெறுவோம்! கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×