என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் செந்துறை, நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.இதன் காரணமாக மின்சாரம் தடைப்பட்டதோடு, பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று மாலை 3 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து பெய்தது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லும் முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை குளிர்ச் சியை ஏற்படுத்தியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் போதிய அளவு மழை பெய்யாததால் அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால் ஆழ் குழாய் கிணறுகளிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை முதல் மாலை வரை கறம்பக்குடி பகுதியில் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இந்த மழை மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கரூர் தாந்தோணி மலை, சுங்கவாயில், திருமாநிலையூர், லைட்ஹவுஸ் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் குளித்தலை பகுதியில் மழை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை லேசான தூரலுடன் மழை பெய்தது.#tamilnews
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள திருமழபாடியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதையொட்டி மடத்துவீதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 250-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் முட்டியதில் கோவண்டாகுறிச்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 35), திருமழபாடியை சேர்ந்த கார்த்திக் (23), லால்குடியை சேர்ந்த சுரேஷ் (22), மெலட்டூரை சேர்ந்த கதிரேசன் (25) உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கிய வீரர் களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் நாற்காலி, கட்டில், சில்வர் பாத்திரங்கள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ஜெயங்கொண்டம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு போட்டியை கண்டு களித்தனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக் கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருமழபாடி பொதுமக்கள் செய்திருந்தனர்.
காடுவெட்டி குரு மரணமடைந்ததையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டும், பேருந்துகளும் ஓடாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். KaduvettiGuru
வன்னியர் சங்க தலைவர் குரு மரணமடைந்ததை தொடர்ந்து, அவருடைய உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் குரு மரணமடைந்ததையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் உள்ள அரசு பணிமனைக்கு சென்ற 3 அரசு பஸ்களை வழிமறித்த மர்மநபர்கள் பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி ஓடினர்.
இதேபோல் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு பஸ்சை பொன்னேரியிலும், ஜெயங்கொண்டத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்சை கல்லாத்தூரிலும் வழிமறித்த மர்ம நபர்கள் கண்ணாடிகளை உடைத்து விட்டு சென்றனர். திருச்சி-சிதம்பரம் சாலையில் சூரியமணலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும், ஜெயங்கொண்டம் மார்க்கெட் கமிட்டி அருகே 2 பஸ்களின் கண்ணாடியையும், வாரியங்காவலில் ஒரு பஸ்சின் கண்ணாடியையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.
ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அரியலூரிலும் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. இன்று (ஞாயிற்றுக் கிழமை) முகூர்த்த நாள் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே பொருட்கள் வாங்குவதற்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஆண்டிமடம் கடைவீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் ஆண்டிமடம் 4 ரோடு சந்திப்பில் போலீசாரால் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கம்பிகளை எடுத்து சாலையின் குறுக்கே போட்டு, அதன்மேல் டயர்களை போட்டு எரித்து கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் அந்த கும்பலை எச்சரித்தனர்.
ஆனாலும் அந்த கும்பல் போலீசாரை கண்டுகொள்ளாமல் 4 ரோடு சந்திப்பு மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ரோட்டில் உள்ள போலீஸ் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்தது. அங்கிருந்து அண்ணாசிலை வரை உள்ள வணிக வளாகங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது.
தனியார் கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள், டீக்கடை பெஞ்ச், தள்ளுவண்டி போன்ற பொருட்களை உடைத்தும், உடைத்த பொருட்களை நடுரோட்டில் போட்டும் எரித்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக கனரக, இலகுரக வாகனங்கள், செல்லவில்லை. மேலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் பகுதியில் முற்றிலும் பஸ்கள் இயக்கப்படவில்லை. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 13 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து போலீசார் அரியலூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடு பட்டு வருகின்றனர். #KaduvettiGuru

இன்று காலை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் காடுவெட்டிக்கு நேரில் சென்று குருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு காடுவெட்டி குரு உடல் இன்று அடக்கம் செய்யப்படும். #KaduvettiGuru #Ramadoss #PonRadhakrishnan
ஜெயங்கொண்டம்:
பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.
காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.
குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 80). இவருக்கு பரமசிவம் (55) என்ற மகனும், வளர்மதி (52) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி அவருக்கு சொந்தமான சொத்துக்களை வளர்மதிக்கு எழுதி வைத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் பரமசிவத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்றிரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பரமசிவம் , கிருஷ்ணமூர்த்தியை தாக்கி காலால் மிதித்தார். இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பரமசிவத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews






