search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stores closed"

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததால் மயிலாடுதுறை மற்றும் சுவாமிமலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மயிலாடுதுறை:

    பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்து வந்தவர் காடுவெட்டி குரு (வயது 57).

    இவர் கடந்த 12-ந் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் காடுவெட்டி குரு மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த காடுவெட்டி குரு, கடந்த 2001-ம் ஆண்டில் ஆண்டிமடம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டில் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பா.ம.க. நிர்வாகிகள், கட்சியினர், மற்றும் கிராம மக்கள் காடுவெட்டி உட லுக்கு அஞ்சலி செலுத் தினர்.

    இந்த நிலையில் காடுவெட்டி குரு மரணம் அடைந்த செய்தியை அறிந்து பா.ம.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மயிலாடுதுறை பகுதியில் இன்று அதிகாலை அரசு பஸ்சை கல்வீசி கண்ணாடிகளை தாக்கி உடைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் சிவபிரியா நகர் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், அரசு பஸ்சை உடைத்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை நகரில் இன்று காலை 10 மணியளவில் திடீரென வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். காடுவெட்டி குரு மரண மடைந்ததையொட்டி கடை அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பதட்டமான நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் அருகே சுவாமி மலை பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

    சுவாமிமலை சன்னதி தெருக்கள், மற்றும் திருவையாறு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் சுவாமிமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. 9 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஜெயங்கொண்டம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலை வரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஜெ. குரு நுரையீரல் காற்றுப்பை திசு பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றிரவு குருவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் அவர் மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த ஜெ. குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காடுவெட்டிக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. ஜெ.குருவின் உடலுக்கு பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    மரணம் அடைந்த ஜெ.குரு 2001ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ம் ஆண்டு ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.

    காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன் சுருட்டி, அரியலூர், உடையார் பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நேற்றிரவு பொன்னேரி, கல்லாத்தூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கி உடைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. இதனால் அவரது கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டிகுரு என அழைக்கப்பட்டார். அவருக்கு ஹேமலதா என்ற மனைவியும், விருதாம்பிகை என்ற மகளும், கனல் அரசு என்ற மகனும் உள்ளனர்.

    குருவின் உடலுக்கு இன்று காலை பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார். நாளை காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    அரியலூர் மாவட்டம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டதாலும், அரசு பஸ்கள் இயங்காததாலும் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பஸ் நிலையங்கள் மற்றும் முக்கிய பஜார்கள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    ×