search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaduvetti guru death"

    குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் தொடர்புடைய 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விழுப்புரம்:

    பா.ம.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் இறந்தார்.

    குருவின் மறைவையொட்டி கடலூர்- விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பல்வேறு இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, மரக்காணம், திண்டிவனம், திருநாவலூர், கள்ளக் குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் தனியார் பஸ்கள் உள்பட 20 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன.

    மேலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி போன்ற பகுதிகளில் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்றன.

    நேற்று மாலையில் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில், கடலூர், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், ரெட்டிச் சாவடி உள்பட பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்கள் கல்வீசி தாக்கியதில் 16 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    மேலும் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, போன்ற பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.

    விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பஸ்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததால் மயிலாடுதுறை மற்றும் சுவாமிமலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    மயிலாடுதுறை:

    பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்து வந்தவர் காடுவெட்டி குரு (வயது 57).

    இவர் கடந்த 12-ந் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு உடல்நிலை மோசமானதால் காடுவெட்டி குரு மரணம் அடைந்தார்.

    மரணம் அடைந்த காடுவெட்டி குரு, கடந்த 2001-ம் ஆண்டில் ஆண்டிமடம் தொகுதியிலும், 2011-ம் ஆண்டில் ஜெயங்கொண்டம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    காடுவெட்டி குருவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பா.ம.க. நிர்வாகிகள், கட்சியினர், மற்றும் கிராம மக்கள் காடுவெட்டி உட லுக்கு அஞ்சலி செலுத் தினர்.

    இந்த நிலையில் காடுவெட்டி குரு மரணம் அடைந்த செய்தியை அறிந்து பா.ம.க. வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் மயிலாடுதுறை பகுதியில் இன்று அதிகாலை அரசு பஸ்சை கல்வீசி கண்ணாடிகளை தாக்கி உடைத்தனர்.

    மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி பகுதியில் சிவபிரியா நகர் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஒரு அரசு பஸ் வந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் திடீரென அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

    பின்னர் அங்கிருந்து மர்ம கும்பல் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், அரசு பஸ்சை உடைத்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை நகரில் இன்று காலை 10 மணியளவில் திடீரென வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். காடுவெட்டி குரு மரண மடைந்ததையொட்டி கடை அடைக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மயிலாடுதுறை பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பதட்டமான நிலை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கும்பகோணம் அருகே சுவாமி மலை பகுதியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.

    சுவாமிமலை சன்னதி தெருக்கள், மற்றும் திருவையாறு மெயின் ரோடு பகுதிகளில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் சுவாமிமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காடுவெட்டி குரு மரணம் அடைந்ததையொட்டி சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    ×