என் மலர்
மேற்கு வங்காளம்
- வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்.
மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது.
இது குறித்த அறிவிப்பில், "வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்."

"பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை தெரிவித்துக் கொள்கிறோம்."
"வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும்," இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
- 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன.
- சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவரை 196 குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கொல்கத்தா ஐகோர்ட்டில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
'இதுகுறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி' கொல்கத்தா ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
மேற்கு வங்காள மாநில சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த இல்லங்களில் ஆயிரக்கணக்கான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள். இதுவரை 196 குழந்தைகள் சிறையில் பிறந்துள்ளன. எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தலைமை நீதிபதி டி.எஸ். சிவஞானம், நீதிபதி சுப்ரதிம் பட்டாச்சார்யா தலைமையிலான டிவிஷன் பெஞ்சில் இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேற்குவங்காள மாநிலத்தில் உள்ள சிறைகளில் பெண் கைதிகள் அதிக அளவில் கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
- அப்போது பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்ய இது இடமில்லை பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
எதிர்க்கட்சிக்கு ஏதேனும் கருத்து இருந்தால் பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம். கருத்து தெரிவிக்க இங்கு சுதந்திரம் உள்ளது.
எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்ய இது இடமில்லை. நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. பா.ஜ.க.வின் இந்த கேவலமான அரசியலை கண்டிக்கிறோம். அவர்கள் மாநிலத்திற்கு எதிரானவர்கள், நல்லதை விரும்பவில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் இருப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கருத்தை பேச்சில் சொல்லலாம். இது ஒன்றும் உங்கள் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அல்ல. இது சட்டசபை.
பா.ஜ.க. 147 எம்.பி.,க்களை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தாலும், நாங்கள் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதை எதிர்த்துப் போராடுவோம். தைரியம் இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேசுங்கள், அதற்கு முன் பேசவேண்டாம் என தெரிவித்தார்.
#WATCH | As BJP MLAs create ruckus in the State Assembly, West Bengal CM Mamata Banerjee says, "If the Opposition has any opinion, they can discuss it after the completion of the Budget. They have the freedom to express their opinion but this is not a BJP party office. This is… pic.twitter.com/nA8v7x2aBq
— ANI (@ANI) February 8, 2024
- பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?
- விவசாயிகள் தற்கொலைகளை பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?
பிரமதர் மோடி நேற்று பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்திற்கு பதில் அளித்து பேசினார். அப்போது டிஜிட்டில் பண பரிவர்த்தனை, ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுத்தல், பொருளாதாரத்தில் இந்தியாவின் இடம் குறித்து பேசினார். மேலும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக மேற்கு வங்காள மாநில மந்திரி சாஷி பஞ்சா கூறுகையில் "எதிர்மறை வாக்குகளை பெற்று பா.ஜனதா வெற்றி பெற விரும்புகிறதா? இதுதான் எங்களுடைய கேள்வி.
பணவீக்கம் பற்றி பிரதமர் மோடி பேச முடியுமா?. அதை குறைப்பதற்கு அவர்கள் பணியாற்றி கொண்டிருக்கிறார்களா?.
விவசாயிகள் தற்கொலைகளை தடுத்து நிறுத்த பணியாற்றி கொண்டிருக்கிறார்களா? அது பற்றி பிரதமர் மோடியால் பேச முடியுமா?.
நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது, நாட்டு மக்கள் மேலும் என்ன விரும்புகிறார்கள் என்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சிகள் மீது தவறுகளை கண்டு பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
பா.ஜனாதா எதிர்மறை வாக்குகளாலும், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை அமைப்புகளாலும் வெற்றி பெற முடியும் என பிரதமர் நினைக்கிறார்" என்றார்.
- பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.
- பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது, காங்கிரசுக்கு ஒன்றுமில்லை என்று பா.ஜ.க. சொல்கிறது.
பா.ஜ.க.வுக்கு எதிரொலியாக காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தாலும் போதும் என மம்தா பானர்ஜி கூறுகிறார்.
பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். மம்தா பானர்ஜியும் அதையே சொல்கிறார்.
பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள்? உங்களுக்கு (மம்தா பானர்ஜி) மாநிலம் பின்னர், ராகுல் காந்திக்கு நாடு முதலில், மற்ற அனைத்தும் பின்னர் என தெரிவித்தார்.
- அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
- மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.
கொல்கத்தா:
மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று பிற்பகலில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், பிரதமந்திரி ஆவாஸ் யோஜனா உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேணடிய பல கோடி ரூபாய் நிதி நிலுவையில் உள்ளது. அந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரி மத்திய அரசுக்கு எதிராக அவர் கொல்கத்தா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்டார். குளிருக்கு மத்தியில் இரவு முழுவதும் தொடர்ந்து. தர்ணா நடைபெற்று வரும் இடத்திலேயே இரவில் தங்கினார் .
அவர் இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவர் 2-வது நாள் போராட்டத்தில் குதித்தார். மம்தா பானர்ஜியின் 48 மணி நேர தர்ணா நாளை வரை நீடிக்கும்.
- பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
- இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார்.

இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிலுவை தொகையை விடுவிக்க கோரி தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா கூறினார்.
- அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதிகள் விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மத்திய அரசால் நடத்தப்படும் பல திட்டங்களுக்கு மாநிலத்தின் பாக்கிகள் 7,000 கோடி ரூபாய் எனவும், இதற்கான நிதிகளை மத்திய அரசு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி 2-ம் தேதி தர்ணாவில் ஈடுபட உள்ளேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் , "கொல்கத்தா ரெட் ரோடு பகுதியில் உள்ள மைதானத்தில் இன்று மதியம் தர்ணா போராட்டம் தொடங்கும். எங்கள் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி போராட்டத்துக்கு தலைமை தாங்குவார். இதில் கட்சியின் பிற மூத்த தலைவர்களும் கலந்து கொள்வார்கள்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தா ரெட் ரோட்டில் மைதான பகுதியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து தர்ணாவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று தொடங்கினார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
- காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
- பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்ட யாத்திரையான "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை" கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார்.
பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் குறிக்கோள் நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூக நீதியை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் நடந்த யாத்திரையின்போது முர்ஷிதாபாத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களை ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, பீடி தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | West Bengal: Congress MP Rahul Gandhi interacts with 'beedi' workers as Bharat Jodo Nyay Yatra reaches Murshidabad. pic.twitter.com/8hczudEaNZ
— ANI (@ANI) February 1, 2024
- பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை வழங்காமல இழுத்தடிக்கிறது என மம்தா குற்றச்சாட்டு.
- மாநில அதிகாரிகளும் மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து இது தொடர்பாக பேசினர்.
மேற்கு வங்காள மாநிலத்திற்கு மத்திய அரசு சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைத்தார்.
உடனடியாக நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 1-ந்தேதிதான் கடைசி நாள் என மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்திருந்தார் மம்தா பானர்ஜி.
இந்தநிலையில் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக விடுவிக்காவிடில் நாளை முதல் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறுகையில் "மத்திய அரசுக்கு பிப்ரவரி 1 வரை (இன்று) காலக்கெடு விதித்திருந்தேன். இன்றைக்குள் நிலுவைத் தொகையை விடுவிக்காவிடில் நாளையில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன். அவர்கள் நிலுவைத் தொகையை விடுவிக்கவில்லை என்றால், அதை எப்படி பெற வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
இந்த தர்ணா போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எல்லோருடைய ஆதரவையும் விரும்புகிறேன்" இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட முடிவு.
- பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும் என மம்தா அறிவிப்பு.
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிட போவதாக அக்கட்சியின் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்தார்.
இரு மாநில முதலமைச்சர்களின் இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு முறிவு தொடர்பாக மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார்.
இதுகுறத்து அவர் கூறியதாவது:-
மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை.
காங்கிரஸோ அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்டனர். இப்போது நான் ஒரு சீட் கூட அவர்களுக்கு கொடுக்கப் போவதில்லை.
பாஜகவுடனான எங்கள் போராட்டம் தொடரும். தனித்து போராடுவோம். பாஜகவை தோற்கடிக்க எங்களால் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
- இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.
கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.
இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






