search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal assembly"

    • மேற்கு வங்காளத்தில் பட்ஜெட் தாக்கலின்போது பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • அப்போது பேசிய மம்தா பானர்ஜி, அரசியல் செய்ய இது இடமில்லை பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என்றார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    எதிர்க்கட்சிக்கு ஏதேனும் கருத்து இருந்தால் பட்ஜெட் முடிந்த பிறகு விவாதிக்கலாம். கருத்து தெரிவிக்க இங்கு சுதந்திரம் உள்ளது.

    எதிர்க்கட்சிக்கு அரசியல் செய்ய இது இடமில்லை. நாங்கள் என்ன வேலை செய்தோம் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. பா.ஜ.க.வின் இந்த கேவலமான அரசியலை கண்டிக்கிறோம். அவர்கள் மாநிலத்திற்கு எதிரானவர்கள், நல்லதை விரும்பவில்லை.

    பட்ஜெட் தாக்கல் செய்யவிடாமல் இருப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் கருத்தை பேச்சில் சொல்லலாம். இது ஒன்றும் உங்கள் பா.ஜ.க. கட்சி அலுவலகம் அல்ல. இது சட்டசபை.

    பா.ஜ.க. 147 எம்.பி.,க்களை பாராளுமன்றத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தாலும், நாங்கள் அந்த வழியில் செல்ல விரும்பவில்லை என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

    நீங்கள் பலவீனமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அப்படி இல்லை. அதை எதிர்த்துப் போராடுவோம். தைரியம் இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு பேசுங்கள், அதற்கு முன் பேசவேண்டாம் என தெரிவித்தார்.

    மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது. #LokayuktaBill #WestBengalAssembly

    கொல்கத்தா:

    அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் மீதான ஊழல் புகார்களை விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க உதவும் லோக் ஆயுக்தா சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    லோக் ஆயுக்தா சட்டம் சில மாநிலங்களில் உள்ளன. ஆனால் 12 மாநிலங்களில் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தது.

    இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து விசாரணை நடத்திய கோர்ட்டு, லோக் ஆயுக்தா விசாரணை நீதிமன்றங்களை அமைக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. சமீபத்தில் தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டன.

    இந்த நிலையில் மேற்கு வங்காளம் சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.

    இதற்கான மசோதாவை முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

    ×