search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhir Ranjan Choudhary"

    • பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள்.
    • பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சி முடிந்துவிட்டது, காங்கிரசுக்கு ஒன்றுமில்லை என்று பா.ஜ.க. சொல்கிறது.

    பா.ஜ.க.வுக்கு எதிரொலியாக காங்கிரசுக்கு 40 இடங்கள் கிடைத்தாலும் போதும் என மம்தா பானர்ஜி கூறுகிறார்.

    பா.ஜ.க.வும், பிரதமர் மோடியும் காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதாக சொல்கிறார்கள். மம்தா பானர்ஜியும் அதையே சொல்கிறார்.

    பா.ஜ.க.வும், மம்தாவும் ஏன் ஒரே மொழி பேசுகிறார்கள்? உங்களுக்கு (மம்தா பானர்ஜி) மாநிலம் பின்னர், ராகுல் காந்திக்கு நாடு முதலில், மற்ற அனைத்தும் பின்னர் என தெரிவித்தார்.

    ×