search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beedi Workers"

    • காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.
    • பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்ட யாத்திரையான "இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை" கடந்த 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

    பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, பின்னர் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை அசாமில் பல தடைகளை எதிர்கொண்டது.

    பாரத் ஜோடோ நியாய யாத்ராவின் குறிக்கோள் நாட்டிற்கு பொருளாதார மற்றும் சமூக நீதியை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் நடந்த யாத்திரையின்போது முர்ஷிதாபாத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்களை ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்தார். அவர்களுடன் தரையில் அமர்ந்து கலந்துரையாடிய ராகுல் காந்தி, பீடி தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். பெண் பீடித்தொழிலாளர்களின் கேள்விகளுக்கும் ராகுல் கலகலப்பாக பதிலளித்து பேசினார்.

    முன்னதாக ராகுல் காந்தியின் வாகனத்தின் மீது நேற்று திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கார் கண்ணாடி நொறுங்கியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 30 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    முக்கூடலில் உள்ள பீடி தொழிலாளர்களுக்கான மத்திய அரசு மருத்துவமனையில் இன்று பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கான 3 மாத கால பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மகளிர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு சுயமாக தொழில் செய்து மகளிர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மகளிர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் ஏற்கனவே வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஹேர் விக் எனப்படும் தலை முடியினாலான சாதனங்களை தயாரிப்பதற்கான 3 மாத கால பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை சென்னை புற்றுநோய் மருத்துவமனையின் வழிகாட்டுதலின் படி எக்ஸோடஸ் என்னும் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. உற்பத்தி செய்யும் ஹேர் விக்குகளை அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிறுவனமே விலைக்கு வாங்கிக்கொள்ளும்படி பயிற்சி நிறுவனத்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உறுதியான வாழ்வாதாரமும் பயிற்சியாளர்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது. இப்பயிற்சி பெற்றவர்கள் இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்தோ அல்லது சுயமாகவோ ஹேர் விக் செய்யும் தொழிலை செய்து அதிக வருமானம் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளலாம்.

    முதற்கட்டமாக 30 பீடி சுற்றும் பெண்களுக்கு இந்த மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, ஹேர் விக் செய்வதில் திறமையான வர்களாக தயார் செய்யப்பட்ட பின் மேலும் 30 பெண்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு குழுவாக பயிற்சி வழங்க ப்பட்டு இப்பெண்களின் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் வருவாயை பெருக்கி பெண்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவதற்கான இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் கோகுல், மருத்துவர் பெர்னட், பயிற்றுநர் ஷிபா, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி பிராங்களின், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன், அடையாறு புற்றுநோய் மருத்துவர் ஆலோசகர் பிரபாகரன், திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர் மணி, ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் பயிற்சியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    அகில இந்திய பீடி தொழிலாளர் சம்மேளன மாநாடு கேரள மாநிலம் கன்னூரில் வருகிற 28, 29-ந் தேதி நடக்கிறது.

    இநனையொட்டி வேலூர் திருப்பத்தூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் சத்துவாச்சாரியில் பிரசார பேரணி நடந்தது.

    தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பொது செயலாளர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பீடி தொழிலை நலிவடைய செய்யும் கொள்கைகளை கைவிட வேண்டும். பீடி மீது விதிக்கப்பட்டுள்ள 28 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

    ஓய்வு பெறும் பீடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.3 ஆயிரம் பென்ஷன் வழங்க வேண்டும். போலியாக பீடி உற்பத்தி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

    ×