search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கான 3 மாத கால பயிற்சி
    X

    ஹேர்விக் தயாரிக்கும் பயிற்சியினை கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கான 3 மாத கால பயிற்சி

    • வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • முதற்கட்டமாக 30 பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நெல்லை:

    முக்கூடலில் உள்ள பீடி தொழிலாளர்களுக்கான மத்திய அரசு மருத்துவமனையில் இன்று பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களின் மாற்று வாழ்வாதாரத்திற்கான 3 மாத கால பயிற்சியினை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு ஏழை, எளிய பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மகளிர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு சுயமாக தொழில் செய்து மகளிர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மகளிர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வரும் மகளிர்கள் உடல் ரீதியாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். மேலும் பல்வேறு நோய்களும் ஏற்படுகிறது. இப்பகுதியை சேர்ந்த பெண்களுக்கு மாற்று வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரும் வகையில் ஏற்கனவே வாழை நார் உற்பத்தி மையங்கள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    மேலும், மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஹேர் விக் எனப்படும் தலை முடியினாலான சாதனங்களை தயாரிப்பதற்கான 3 மாத கால பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை சென்னை புற்றுநோய் மருத்துவமனையின் வழிகாட்டுதலின் படி எக்ஸோடஸ் என்னும் நிறுவனம் மூலம் வழங்கப்பட உள்ளது. உற்பத்தி செய்யும் ஹேர் விக்குகளை அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிறுவனமே விலைக்கு வாங்கிக்கொள்ளும்படி பயிற்சி நிறுவனத்தால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உறுதியான வாழ்வாதாரமும் பயிற்சியாளர்களுக்கு உறுதிசெய்யப்படுகிறது. இப்பயிற்சி பெற்றவர்கள் இந்த தொண்டு நிறுவனத்துடன் இணைந்தோ அல்லது சுயமாகவோ ஹேர் விக் செய்யும் தொழிலை செய்து அதிக வருமானம் ஈட்டி தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளலாம்.

    முதற்கட்டமாக 30 பீடி சுற்றும் பெண்களுக்கு இந்த மூன்று மாத கால பயிற்சி அளிக்கப்பட்டு, ஹேர் விக் செய்வதில் திறமையான வர்களாக தயார் செய்யப்பட்ட பின் மேலும் 30 பெண்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படவுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு குழுவாக பயிற்சி வழங்க ப்பட்டு இப்பெண்களின் மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் வருவாயை பெருக்கி பெண்களின் வாழ்வா தாரத்தை உயர்த்துவதற்கான இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும்.

    இவர் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் கோகுல், மருத்துவர் பெர்னட், பயிற்றுநர் ஷிபா, உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி பிராங்களின், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா லெட்சுமணன், அடையாறு புற்றுநோய் மருத்துவர் ஆலோசகர் பிரபாகரன், திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலர் மணி, ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் மற்றும் பயிற்சியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×