என் மலர்
மேற்கு வங்காளம்
- ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி தகவல் இன்று காலை வெளியானது. இதில் முதலில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரிப்பு. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு வீச்சில் நடைபெற்று வரும் மீட்பு பணியில் தேசிய மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ரெயில் மோதிக்கொண்ட விபத்துக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரெயில் நிலையத்தில் இருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரங்கபாணி ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டமார் என்ற சத்தத்துடன் ரெயில் பெட்டிகள் அதிர்ந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறினர். ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, சரக்கு ரெயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இரண்டு வழித்தடத்திலும் எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் பரபரப்பான வழித்தடமாக இது உள்ளது. வடகிழக்கு இந்தியாவை நாட்டின் ஏனைய பகுதிகளை இந்த வழித்தடம் தான் இணைக்கிறது. தற்போது ரெயில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் அவ்வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
+6
- சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
- விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 15பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 60 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து.
- தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது. சரக்கு ரெயில் மோதியதில் பயணிகள் ரெயிலின் கடைசிப் பெட்டி தூக்கி வீசப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ரெயில் விபத்தில் பலர் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்த 25 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட டார்ஜிலிங் காவல்துறையின் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் ராய் கூறுகையில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரெயில் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் 5 பயணிகள் இறந்துள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது என்றார்.
இதனிடையே ரெயில் விபத்து குறித்து அறிந்த மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எக்ஸ் தள பக்கத்தில்
கூறியிருப்பதாவது:- "வடகிழக்கு மண்டலத்தில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான விபத்து. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. ரெயில்வே, தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர்" என்றார்.

ரெயில் விபத்தில் சிக்கியவர்கள் தொடர்பாக அறிய 033 2350 8794, 033 2383 3326 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
- சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ரெயில் விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். ரெயில் விபத்து நடந்த இடத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
Shocked to learn, just now, about a tragic train accident, in Phansidewa area of Darjeeling district. While details are awaited, Kanchenjunga Express has reportedly been hit by a goods train. DM, SP, doctors, ambulances and disaster teams have been rushed to the site for rescue,…
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2024
#WATCH | West Bengal | Wagon of Kanchenjunga Express train suspended in the air after a goods train rammed into it at Ruidhasa near Rangapani station under Siliguri subdivision in Darjeeling district today; rescue operation underway pic.twitter.com/rYnEfC3vic
— ANI (@ANI) June 17, 2024
- விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
- ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
டார்ஜிலிங் மாவட்டத்தில் புதிய ஜல்பால்குரி பகுதியில் கஞ்சன்ஜங்கா விரைவு ரெயில் மீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
மேலும் ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது.
- தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் கலந்து கொண்டு பேசுகையில், "பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள், பொது சிவில் சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளன.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை" என்றார்.
பொது சிவில் சட்டம் இன்னும் பா.ஜ.க.வின் திட்டத்தில் உள்ளது என்று மேக்வால் கடந்த வாரமும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல. எனினும் இது போன்ற எந்த நடவடிக்கையும் கருத்தொற்றுமை மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என விரும்பு கிறோம்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து விமர்சித்த மத்திய சட்ட மந்திரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்ப வங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.
தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிவுக்குப் பிறகும் வன்முறை நிகழக்கூடாது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றுகிறது' என்றார்.
வன்முறை சம்பவங்களை கவனத்தில் கொண்ட கொல்கத்தா ஐகோர்ட்டு, தேர்தலுக்காக மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்பு பணியை வருகிற 21-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது.
இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வன்முறைகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்தது குறிப்பிடத்தக்கது.
- அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.
- 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்த நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த அக்ரோபாலிஸ் வணிக வளாகத்தில் உணவகங்கள், துணிக்கடைகள் என ஏராளமானவை உள்ளன.
தீ விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வணிக வளாகத்தில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை பத்திரமாக மீட்டனர். கண்ணாடிகளை உடைத்து உள்ளே சிக்கி இருப்பவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர்.
20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
- வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.
சாகேலி ருத்ரா என்பவர் 'ரீல்ஸ்' வீடியோ உருவாக்கி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார். சமூக வலைத்தள பிரபலமான இவரை 9 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.
இந்தநிலையில் கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு வளாகத்தில் சாகேலி ருத்ரா ஆட்டம் போட்டு புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்து பிரபலமான திரைப்படத்தின் இந்தி பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து வளைந்து நெளிந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கலவையான கருத்துகளுடன் வேகமாக பரவுகிறது.
- கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.
- சிறுவனின் வீட்டு சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மேற்கு வங்கத்தில் H9N2 இன்புலுயென்சா வைரஸ் பறவைக் காய்ச்சல் 4 வயது சிறுவனை பாதித்துள்ளதாக, உலக சுகாதார அமைப்பு [WHO] தெரிவித்துள்ளது. அரிதாக காணப்படும் இந்த வகை வைரஸ் இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 2 வது பாதிப்பு பதிவாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் கடந்த பிப்ரவரி மாதம் மூச்சுத்திணறல் மற்றும் கடுமையான காய்ச்சலால் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு H9N2 வைரஸ் உறுதிசெய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு சிறுவனின் உடல்நிலை தேறி வருகிறது.

சிறுவனின் வீட்டுச் சுற்றுப்புறத்தில் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து இந்த வைரஸ் தாக்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது அல்ல என கூறப்படுகிறது. அரிதான இந்த H9N2 இன்புலுயென்சா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 2 வது முறையாக பதிவாகியுள்ளது மருத்துவம் மற்றும் சுகாதார நோக்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள்.
- ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி, பிரதமராக மோடி பதவியேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சியின் எம்பி சகரிகா கோஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சகரிகா கோஸ் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்தார். இதனால் பிரதமர் மோடி பதவியேற்ற போது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியில் தோற்றுவிட்டார்கள். ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. மோடியை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
- பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது.
- பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார்.
பாஜக ஐடி விங் தலைவரான அமித் மாளவியா மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க பாஜக பார்வையாளராக பணியாற்றினார். அப்போது, அம்மாநிலத்தில் உள்ள பல பெண்களை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத், " பாஜகவிடம் நாங்கள் கோருவது பெண்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான். பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த உண்மை வெளிவந்துள்ளது. பாஜகவின் மிக முக்கிய பொறுப்பாளர் ஒருவர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 5 ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமில்ல பாஜக அலுவலகங்களிலும் அவர் பெண்களிடம் அத்துமீறியுள்ளார். அமித் மாளவியாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பாலியல் குற்றசாட்டுகளை மறுத்துள்ள அமித் மாளவியா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சாந்தனு சின்ஹா மீது 10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
மேலும், தன்னை பற்றி அவதூறாக வெளியிட்ட சமூக வலைத்தள பதிவை அவர் நீக்க வேண்டும் என்று அமித் மாளவியா கோரியுள்ளார்.
- பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
- பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.
பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், நாளை பதவியேற்கும் பிரதமர் மோடியின் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
"இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்காது என யாரும் நினைக்க வேண்டாம். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நேரம் வரும்போது இந்தியா கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்" என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.






