என் மலர்
உத்தரப் பிரதேசம்
- இரண்டு மற்றும் மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
உத்தரபிரதேச அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள மறுஆய்வு அலுவலர்கள், துணை மறுஆய்வு அலுவலர்கள் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு அடுத்த மாதம் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் 3 வேளைகளில் நடத்தப்படும் என யுபிபிஎஸ்சி அறிவித்து இருந்தது.
அதேபோல பிராந்திய குடிமைப் பணி தேர்வு அடுத்த மாதம் 7 மற்றும் 8ந்தேதிகளில் இருவேளைகளில் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்த இரு தேர்வுகளும் 2 நாட்கள் நடத்தப்படுவதற்கும் இரண்டு மற்றும் மூன்று வேளைகளாக நடத்தப்படுவதற்கும் தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தேர்வர்கள் இன்று யுபிபிஎஸ்சி அலுவலகத்தின் கேட் எண் 2 அருகே வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அப்போது சில பேரை பிடித்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- அரியானா அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே குஜராத் அணியினர் அதிரடியாக ஆடினர்.
இறுதியில், குஜராத் அணி 47-28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தியது. இது குஜராத் அணி பெற்ற 2-வது வெற்றி ஆகும்.
மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை 37-32 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி வீழ்த்தி 7வது வெற்றியைப் பதிவு செய்ததுடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.
- புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- ஜெய்ப்பூர் அணி நான்காவது வெற்றியைப் பதிவு செய்தது.
நொய்டா:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் புள்ளிகளை எடுத்தன.
இறுதியில், ஜெய்ப்பூர் அணி 39-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம்
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டார் 76 பகுதியில் செல்போன் டவரின் மீது ஏறி உச்சியில் நின்றபடி நடனமாடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நபர் நடனமாடுவதை பார்க்க அங்கு மக்கள் கூட்டம் கூடியது. சிலர் அவரை வீடியோ எடுத்தும் படம் பிடித்தும் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து நேரில் வந்த மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரை கீழே இறக்க முயன்றனர்.
ஆனால் கீழ் இறங்க அந்த நபர் முதலில் மறுத்துள்ளார். உங்களின் அனைத்து பிரச்சனைகளையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என கூறி சுமார் 2 மணி நேரம் போராடி அவரை கடைசியாக அதிகாரிகள் கீழே இறங்கச் செய்தனர். அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காணப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
- பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
- இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவானார்.
லக்னோ:
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த மாதம் 12-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு சிறையில் உள்ள பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலுக்கு தொடர்பு உள்ளதும், 3 பேர் இந்தக் கொலையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவானார்.
ஷிவ் குமாரை கைதுசெய்ய மும்பை போலீசாரும், உ.பி. சிறப்பு அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் பஹரைச்சில் ஷிவ் குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைதுசெய்தனர். அவர்கள் நேபாளத்திற்கு தப்பியோட முயற்சித்தபோது பிடிபட்டனர்.
அப்போது நடத்திய விசாரணையில், லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சொல்லியே பாபா சித்திக்கை கொலை செய்ததாக தெரிவித்தார்.
- லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.
- முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் 'பிளைண்ட் டேட்டிங்' சென்ற 50 வயது முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரை சேர்ந்த லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. தன்னிடம் செல்போனில் பேசிய பெண்ணை சந்திப்பதற்காக அந்த முதியவர் ஜான்சி நகருக்கு டேட்டிங் சென்றுள்ளார்.
அந்த இடத்தில அந்த முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து அவரது குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் முன்பணமாக ரூ.1 லட்சத்தை கடத்தகாரர்களிடம் அவரது குடும்பத்தினர் கடத்தல்காரர்களிடம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, லல்லுவின் மகன் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய ஆப்ரேசன் நடத்திய போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து லல்லுவை மீட்டனர்.
லல்லு கடத்தப்பட்ட வழக்கில் ஒரு பெண் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்களை பயன்படுத்தி 'ஹனிட்ராப்' முறையில் ஏற்கனவே பலரை இந்த கும்பல் கடத்தியுள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பயாலஜி ஆசிரியர் மற்றும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார்.
12 வகுப்பு முடித்த மாணவர்கள் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வை கடந்த 2016 ஆம் தேதி மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதன்படி டாக்டர் கனவோடு பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களைப் பெற்றோர் தனியார் கோச்சிங் சென்டர்கள் வசம் ஒப்படைத்தனர்.
இதனால் நாடு முழுவதும் கோச்சிங் சென்டர்கள் பல்கிப் பெறுகிறன. தனியார் கோச்சிங் சென்டர்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை என அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மருத்துவ கனவவோடு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவி அங்குள்ள ஆசிரியர்களால் 6 மாத காலமாக பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கான்பூர் நகரில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். 2022 இல் சிறுமிக்கு 17 வயது இருக்கும்போது இந்த கொடூரம் நடந்துள்ள நிலையில் தற்போது அவர் முன்வைத்து புகார் அளித்ததால் கோச்சிங் சென்டர் குட்டு வெளிப்பட்டுள்ளது.
உயிரியல் [பயாலஜி] ஆசிரியர் சாஹில் சித்திக் (வயது 32), வேதியியல் [கெமிஸ்ட்ரி] ஆசிரியர் விகாஸ் பொர்வால் (வயது 39) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், முறைகேடாக வீட்டில் அடைத்து வைத்தல், குற்ற உள்நோக்கம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு டிசம்பரில் நியூ இயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கல்யாண்பூரில், மக்தி-கேரா பகுதியில் உள்ள நண்பரின் அபார்ட்மென்டுக்கு வரும்படி சித்திக் அந்த மாணவியை அழைத்துள்ளார். மற்ற மாணவிகளும் வருவார்கள் என கூறியுள்ளார்.
விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி அபார்ட்மென்டுக்கு சென்றபோது, சித்திக் தவிர யாருமில்லை. இதன்பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்து, சித்திக் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.
தொடர்ந்து 6 மாதங்களாக அபார்ட்மென்ட்டில் சிறை வைத்து, மாணவியிடம் சித்திக் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு யாரிடமும் கூறினால் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார். சில மாதங்களில், ஆசிரியர் பொர்வாலும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை பற்றி போலீசிடம் கூறினால், அது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என மாணவி பயந்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பின்னர், கான்பூருக்கு வந்து மகளை அவருடைய தாய் அழைத்து சென்றிருக்கிறார்.
தொடக்கத்தில் போலீசுக்கு போக தயக்கம் காட்டிய அந்த மாணவி, இதன்பின்பு, வேறொரு பயிற்சி மாணவியை, சித்திக் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலாகியது. இதனை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வழக்கில், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்தே மாணவி போலீசில் புகார் அளிக்க துணிந்துள்ளார்.
இதன்பின்னர், கல்யாண்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த எப்.ஐ.ஆர் ஒன்று பதிவாகி உள்ளது. இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.
- கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் போலி 500 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டுள்ளனர்.
- அனைத்து போலி ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன.
உத்திரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 30,000 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சதீஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா ஆகியோர் கம்ப்யூட்டர் பிரிண்டரில் ரூ.10 ஸ்டாம்ப் பேப்பர்களில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்து வந்துள்ளனர். மிர்சாபூரில் இருந்து முத்திரைத்தாள் வாங்கி இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புழக்கத்தில் இருந்து 20 ரூ.500 கள்ளநோட்டுகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து ரூபாய் நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தன. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சதீஷ் ராய், பிரமோத் மிஸ்ரா ஆகியோரை போலீசார் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சிட்டு வந்துள்ளனர். பின்னர் யூடியூப் வீடியோக்களை பார்த்து கள்ளநோட்டுகளை அச்சிட கற்றுக்கொண்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
ரூ.500 கள்ளநோட்டுகள் தவிர, ஆல்டோ கார், நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள் ஆகியவற்றை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நவம்பர் 8 இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரலையில் தோன்றினார்
- பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தை பணமதிப்பிழப்பில் மக்கள் பட்ட இன்னல்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.
கடந்த 2016 நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அன்று, இரவு சுமார் 08:15 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் ஒரு திட்டமிடப்பட்டாத அவசர உரையாற்றினார்.
அந்த உரையில், அப்போது வரை புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் அப்போதிலிருந்து செல்லாது என்றும் மக்கள் தங்கள் வசமுள்ள நோட்டுக்களை 2016 டிசம்பர் 30 வரை வங்கிகளில் கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.
இதற்காக டிசம்பர் மாதம் வரை அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருக்கும் என பிரதமர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரே ஒரு வாரம் மட்டும் அவ்வாறு செயல்பட்ட பொதுத்துறை வங்கிகள், மக்கள் சிரமத்தில் இருந்தும் தங்கள் விடுமுறையை விட்டுக்கொடுக்காமல் பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக செயல்பட்டன.
மக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளான நிலையில் திடீர் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. நேற்றுடன் பணமதிப்பிழப்பு செயல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பணமதிப்பின்போது உத்தரப் பிரதேசத்தில் வங்கியில் பணம் மாற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி ஒருவருக்கு வங்கி வாசலிலே பிரசவமானது.
அவர் பெற்றெடுத்த அந்த ஆண் குழந்தை பணமதிப்பிழப்பில் மக்கள் பட்ட இன்னல்களின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. தற்போது அந்த குழந்தை 8 வயது சிறுவன். எனவே பணமதிப்பிழப்பை விமர்சிக்கும் விதமாக அந்த சிறுவனின் 8 வது பிறந்தநாளை இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ் கட்சி தலைமை அலுவலகத்தில் வைத்து கோலகமாக கொண்டாடியுள்ளார்.
சிறுவனுக்கு கட்சியின் சைக்கிளை அகிலேஷ் பரிசளித்துள்ளார். பணமதிப்பிழப்பு குறித்து பேசிய அவர், பாஜக நாட்டின் பொருளாதாரத்தையும், கொள்கைகளையும் சிதைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளிகளின் மீது நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் ஸ்லோ பாய்சனாக உள்ளது என்றும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்டவே மக்கள் மீது ஜிஎஸ்டி வரியை பாஜக விதித்துள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.
- மீரட் நகரில் வசிக்கும் அஞ்சலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- அஞ்சலி கொலை தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தில் கூலிக்காக கொலை செய்யும் காண்டிராக்ட் கில்லர் ஒருவர் தான் செய்த கொலைக்கு கொடுப்பதாக கூறப்பட்ட பணம் தனக்கு கிடைக்கவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, மீரட் நகரில் உள்ள உமேஷ் விஹார் காலனியில் வசிக்கும் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து வீடு திரும்பியபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட அஞ்சலி தனது முன்னாள் கணவர் நிதின் குப்தாவின் பெயரில் இருந்த வீட்டில் வசித்து வந்தார். அவரது மாமியார் அந்த வீட்டை யஷ்பால் மற்றும் சுரேஷ் பாட்டியாவுக்கு விற்றுள்ளார். ஆனால் அஞ்சலி அந்த வீட்டை காலி செய்யமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.
இதனையடுத்து, யஷ்பால் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீரஜ் ஷர்மா என்பவரிடம் அஞ்சலியை கொலை செய்தால் 2 லட்ச ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

பின்னர் இந்த கொலை தொடர்பாக யஷ்பால், சுரேஷ், நீரஜ் ஷர்மா மற்றும் அஞ்சலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த 2 பேர் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட அப்பெண்ணின் முன்னாள் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் விடுவித்தனர்.
இந்நிலையில், ஒரு வருடத்திற்கு பிறகு ஜாமினில் வெளியே வந்த நீரஜ் ஷர்மா, இந்த கொலையில் அஞ்சலியின் முன்னாள் கணவர் மற்றும் அவரது மாமியாருக்கு தொடர்பு உள்ளது என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசாரிடம் பேசிய நீரஜ், "அஞ்சலியை கொலை செய்தால் ரூ.20 லட்சம் பணம் தருவதாக கூறிய அவர்கள் 1 லட்ச ரூபாயை முன்பணமாக கொடுத்தனர். கொலை செய்த பின்பு போலீசில் பிடிபட்டதால் மீதமுள்ள 19 லட்ச ரூபாயை என்னால் வாங்க முடியவில்லை. தற்போது ஜாமினில் வெளியே வந்த பின்பு மீதமுள்ள பணத்தை தரும்படி அவர்களிடம் கேட்டபோது அந்த பணத்தை தரமுடியாது என்று அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அஞ்சலியின் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றுகூறி அவர்கள் இருவருக்கும் இடையிலான செல்போன் அழைப்புகளை இதற்கான ஆதாரங்களாக அவர் வழங்கியுள்ளார்.
- நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
- 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட்டின் கன்கர்கெடா பகுதியில் தெரு நாய் ஒன்று சமீபத்தில் 5 நாய் குட்டிகளை ஈன்றது.
இந்நிலையில் அந்த நாய் குட்டிகள் இரவு நேரங்களிலும் தொடர்ந்து குரைத்ததால் அப்பகுதியை சேர்ந்த ஷோபா, ஆர்த்தி என்ற 2 பெண்கள் ஆத்திரமடைந்துள்ளனர். சம்பவத்தன்று ஷோபா, ஆர்த்தி ஆகிய 2 பேரும் 5 நாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துள்ளனர்.
இதுகுறித்து விலங்குகள் நல அமைப்பின் நிர்வாகியான அன்சுமாலி வசிஷ்த் அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபா, ஆர்த்தி ஆகியோர் மீது விலங்குகள் வகை தடுப்பு சட்டப்பிரிவு 325-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறிவுறுத்தியுள்ளா். பெண்கள் ஜிம், யோகா, நாடக மையங்களில் பெண் டிரைனர்கள் அல்லது டீச்சர்கள் அமர்த்துவது கட்டாயம்.
- பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது ஆசிரியர் இருக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் கடந்த 28-ந்தேதி லக்னோவில் கடந்த கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.
அப்போது பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது. ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக்கூடாது. பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது ஆசிரியர் இருக்க வேண்டும். அதேபோல் பெண்கள் துணிக்கடைகளில் பெண் பாதுகாப்பு அதிகாரிகள் இருக்க வேண்டும் போன்றவற்றை கொண்டு வரலாம் போன்ற பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் உறுப்பினர்கள் மேலும் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக பெண்கள் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் ஆங்கில செய்தி நிறுவத்திற்கு கூறியதில் "இந்த ஆலோசனைகள் தொடக்க கட்டத்தில்தான் உள்ளது. இந்த பரிந்துரைகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஒப்புதல் பெற்ற பிறகு இந்த பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அதன்பின் அரசு அமல்படுத்துவற்கான நடைமுறைகளை மேற்கொள்ளும்" என்றார்.
இதற்கிடையில் ஷாம்லி மாவட்ட காண்காணிப்பு அதிகாரி ஹமித் ஹுசைன், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் ஜிம், யோகா, நாடக மையங்களில் பெண் டிரைனர்கள் அல்லது டீச்சர்கள் அமர்த்துவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன் டி.வி.ஆர். திறனுடன் சிசிடிவி சிஸ்டம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார். பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பு அதிகாரி அல்லது டீச்சர் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.






