என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
    • புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

    காருக்குள் மனைவியும் அவரது காதலனும் அமர்ந்திருக்க கணவன் பானட்டில் தொங்கியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு பரபரப்பான சாலையில் வேகமாகச் சென்ற ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.

    பானட்டில் தொங்கிய நிலையில் பயணித்தவர் சமீர். மஹிர் என்ற நபர் தனது மனைவியை தனது காரில் எங்கோ அழைத்துச் செல்ல முயன்றார் என்றும் இதுபற்றி அறிந்ததும் காரை நிறுத்த முயன்று பானட்டில் ஏறியதாகவும் சமீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்த தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீரின் மனைவியும் மஹிரும் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    • உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது
    • சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 2,000 கோடி செலவு இதில் அடங்கும்

     உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.

    4,000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும், 'மகாகும்ப் 2025' முன்பை விட அதிக பணம் புரளும் களமாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு இந்த நிகழ்வுகளுக்காக சுமார் ரூ.7,500 கோடி செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் 'மகாகும்ப் 2025' மூலம் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் வருவாயை ஈட்டப்படும் என்று உத்தரப்பிரதேச தொழில் மேம்பாட்டு அமைச்சர் நந்த கோபால் குப்தா நந்தி மதிப்பிட்டுள்ளார்.

     

    இதற்கு மத்தியில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்றுகூடலை தனது சந்தைக்களமாக பயன்படுத்தி வருகிறது. 40 கோடி பேரிடம் தங்களது பொருட்களையும், சேவைகளையும் விளம்பரப்படுத்தக் கோடிக்கணக்கில் இந்நிறுவனங்கள் இங்கு வாரி இறைத்து வருகின்றன.

    Dettol, Dabur, Pepsico, Coca-Cola உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளும், ITC மற்றும் Reliance போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் முகாம் அமைத்து, தங்கள் தயாரிப்புகளை வரிசைப்படுத்தி, மாதிரிகள் மற்றும் குளிர்பானங்களை விநியோகித்து பக்தர்களை இழுக்க முயற்சித்து வருகின்றன.

    இந்த வருட மகா கும்பமேளாவில் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் சுமார் ரூ.3,600 கோடி செலவழிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    நிகழ்ச்சிகளில் செயற்கை நுண்ணறிவு (AI)- தீம்கள், LED திரைகள், மெய்நிகர் மற்றும் மொபைல் மூலம் விளம்பர செய்வதற்கான சுமார் ரூ. 1,800 முதல் ரூ. 2,000 கோடி செலவு இதில் அடங்கும். பக்தர்கள் ஓய்வெடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்து தருவது போன்ற உத்திகளின்மூலமும் இந்த விளம்பரப்படுத்தல் நிகழ்கிறது. 

     

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்று கூறினர்.
    • அரசியல் எதிரிகள் அதை மறுக்க விரும்புகிறார்கள்.

    பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில், பா.ஜ.க.வின் உத்தரப் பிரதேச பிரிவு தலைவர்கள் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் நகல்களை விநியோகித்தனர். பிரயாக்ராஜில் உள்ள மத கூட்டம் ஒற்றுமையின் ஒரு சிறந்த கொண்டாட்டம் என்றும், இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.

    இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் நாடு தழுவிய பிரச்சாரமான "சம்விதான் கௌரவ் அபியான்"- பிரசாரத்தை தொடங்கிய பா.ஜ.க., இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள தலித்துகளை கௌரவிக்கிறது.

    மகா கும்பமேளாவில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, அரசியலமைப்பின் நகல்களை வழங்கி பாராட்டிய உத்தர பிரதேச பா.ஜ.க. செயலாளர் அபிஜத் மிஸ்ரா, "பா.ஜ.க. அல்லாத கட்சிகள் மற்றும் அரசாங்கங்களால் வெறும் வாக்கு வங்கியாக குறைக்கப்பட்டவர்களை கௌரவிக்க நாங்கள் இங்கு வந்தோம். இப்போது, ஒரு வலிமையான, உணர்திறன் மிக்க தலைவர் நாட்டை வழிநடத்துவதால், மாற்றம் தெளிவாக தெரிகிறது" என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மற்ற கட்சிகள் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை வாக்கு வங்கிகளாகப் பார்க்கின்றன. எங்கள் கட்சி அவர்களை மதிக்கிறது. மகா கும்பமேளா ஒற்றுமையின் சிறந்த கொண்டாட்டமாகும், இது அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கும் ஒன்று. அதனால்தான் நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் கொண்டிருந்த ஒற்றுமை என்ற கருத்தை வலுப்படுத்த அரசியலமைப்பின் நகல்களுடன் நாங்கள் வந்தோம். நமது அரசியல் எதிரிகள் அதை மறுக்க விரும்புகிறார்கள்," என்று கூறினார்.

    • கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
    • மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை என மொத்தம் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்காக 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மகா கும்பாமேளா நிகழ்ச்சியில் இதுவரை 7 கோடி பேர் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    கடந்த 14-ம் தேதி மகர சங்கராந்தி தினத்தில் சுமார் 3.50 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.

    மகா கும்பமேளாவின் 4-வது நாளான இன்று சுமார் 30 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
    • மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன்களின் பயன்பாடு அதிகமாக உள்ள தற்போதைய காலக்கட்டத்தில், அதனை பயன்படுத்தி வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிடுகிறார்கள். அவ்வாறு பதிவிடுபவர்களில் பலர், வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளை வாங்க வேண்டும் என்று எடுக்கும் வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.

    அப்படி ஒரு சம்பவம் தான் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மிர்சாபூரில் ஆட்டோ டிரைவரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், உண்மைக்கு மாறான கருத்துகளை கூறி வீடியோ பதிவு செய்துள்ளதாகவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார் அந்த ஆட்டோ டிரைவர்.

    ஆட்டோவில் இருந்து அவர்களை இறக்கிவிட்டு கட்டணம் கேட்டபோது, அவர்கள் மாணவிகள் என்று கூறி கட்டணம் தர மறுத்துவிட்டனர். நான் தொடர்ந்து கட்டணம் கேட்டபோது, அவர்களில் ஒருவர் என் காலரைப் பிடித்து, தனது மொபைலை சகோதரியிடம் கொடுத்து அதை பதிவு செய்யச் சொன்னார். பின்னர் நான் கட்டணம் வேண்டாம் என்று சொன்னேன். நான் அவர்களைத் தொடக்கூட இல்லை. எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறிய ஆட்டோ டிரைவர் அவரது மார்பில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

    இதனிடையே, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தியதால் அவரை அடித்தேன். இதனை தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்தன. இதன்பின்னரே அந்த வீடியோவை நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன் என்று கூறினார்.

    இருவரின் முரண்பட்ட தகவல்களால் யார் மீது தவறு உள்ளது என்பது குறித்து மிர்சாபூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
    • சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்துக்கள் புனிதமாக கருதும் விழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. அதிகமான மக்கள் கூடும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த கும்பமேளா நிகழ்வுகள் பிரயாக்ராஜ், அரித்துவார், உஜ்ஜையின், நாசிக் ஆகிய இடங்களில் நடைபெற்றாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ள உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றது.

    மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்ச்சி என்றாலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வு என்பது இந்த கும்பமேளாவுக்கு கூடுதல் சிறப்பு.

    மகா கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டே தொடங்கியது. இந்த ஆண்டு பிறந்தது முதலே உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள், வெளிநாட்டினர் மற்றும் பக்தர்கள் லட்சக்கணக்கில் பிரயாக்ராஜ் நோக்கி வரத்தொடங்கினர்.

    கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 83 லட்சம் பேர் கங்கை நதியில் புனித நீராடினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் முழுவதும் தோரணங்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தங்குவதற்காக 10 ஆயிரம் குடில்களை கொண்ட தற்காலிக நகரம் அமைக்கப்பட்டு உள்ளது. திரிவேணி சங்கமம் பகுதி இரவு நேரத்திலும் பகலைப்போல் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

    புகழ் பெற்ற மகா கும்பமேளா, பவுஷிய பூர்ணிமா தினமான நேற்று பஜனை மற்றும் பக்திக்கோஷங்களுக்கு இடையே கோலாகலமாக தொடங்கியது.

    சாதுக்களையும், துறவிகளையும் தொடர்ந்து லட்சக்கணக்கானோர் கங்கை நதியை நோக்கி ஜெய் கங்கா மாதா என்று கோஷமிட்டபடியே நடந்து சென்றனர்.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளாவின் முதல் நாளான நேற்று 1½ கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புனித நீராடிய பலர், ஆங்காங்கே அமர்ந்து இருந்த துறவிகளிடம் ஆசி பெற்றனர். ரஷியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர். சுமார் 40 கோடிக்கும் அதிகமானோர் கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கும்பமேளா நடைபெறும் பகுதியில், பூஜைப் பொருட்களை விற்று பக்தர்களுக்கு திலகம் பூசுபவர்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர். அவர்களிடம் ஏராளமானோர் காத்திருந்து திலகமிட்டதை காண முடிந்தது.

    • 12 வருடத்திற்கு ஒரு முறை மகா கும்பமேளா திருவிழா நடைபெறுகிறது.
    • 45 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடுவார்கள்.

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா இன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு புனித நீராடி வருகிறார்கள். இந்த மகா கும்பமேளா 45 நாட்கள் நடைபெறும்.

    • ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன. விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

    இதில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் போக்குவரத்து கமிஷனர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதும், ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

    இதில் பெரும்பாலானவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகள் என்பதும், ஹெல்மெட் அணியாததால் இந்த உயிரிழப்புகள் நடைபெறுவதும் கண்டறியப்பட்டது.

    எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

    அதற்காக ஹெல்மெட் அணியாதவர்களுக்கு பெட்ரோல் இல்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த கொள்கை ஏற்கனவே கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அவ்வப்போது கடைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. எனவே இந்த கொள்கையை அனைத்து மாவட்டங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த விவகாரத்தில் மோட்டார் வாகன சட்டம் 1988-ன் கீழ் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ.க்கள் இணைந்து இந்த கொள்கை வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இது தொடர்பாக சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் உள்ளிட்ட தளங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவரது காதலி உட்பட அவரது நண்பர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர்.
    • இருவரும் சட்டம் படிக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று, அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் உயிழந்தார்.

    தபாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த மாணவர், நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி படித்து வந்தார்.

    காவல்துறையின் கூற்றுப்படி, அவர் செக்டார் 99 இல் உள்ள சுப்ரீம் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு நண்பர் நடத்திய விருந்தில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார்.

    அவரது காதலி என்று கருதப்படும் பெண் உட்பட அவரது நண்பர்கள் பலர் கூட்டத்தில் இருந்தனர். தபாஸ் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

    இருவரும் சட்டம் படிக்கிறார்கள் ஆனால் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    பார்ட்டியின்போது ஒரு கட்டத்தில், தபாஸ் ஏழாவது மாடி பால்கனியில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அவரது தவறி விழுந்தாரா, தற்கொலை செய்துகொண்டாரா அல்லது தள்ளி விடப்பட்டாரா என்ற கோணங்களில் போலீஸ் விசாரித்து வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த உடன் அங்கு சென்ற போலீஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தபாஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் ஐந்து நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

    • உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
    • கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு வாயு.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சிறிய கவனிக்காமல் செய்த தவறால் மூச்சுத்திணறி இரு இளைஞர்கள் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உபேந்திரா (22) மற்றும் சிவம் (23) ஆகியோர் நொய்டாவின் செக்டார் 70 இல் உள்ள பாசாய் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் உணவு ஸ்டால் ஒன்றை நடத்தி வந்தனர், அங்கு, 'சோலே பத்தூர்' மற்றும் 'குல்சே' உள்ளிட்ட உணவு வகைகளை விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் கொண்டைக்கடலையை பாத்திரத்தில் சமைத்த அவர்கள், மறந்துபோய் அடுப்பை அணைக்காமல் தூக்கியுள்ளனர்.

    கொண்டைக்கடலை அடுப்பில் தொடர்ந்து கொதித்துக்கொண்டு இருந்ததால் அறை புகையால் நிரம்பியது. வீட்டின் கதவு மூடப்பட்டதால், அறையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கார்பன் மோனாக்சைடு புகையால் மூச்சுத் திணறி அவர்கள் தூக்கத்திலேயே உயிரிழந்தனர்.

    சில மணி நேரம் கழித்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    கார்பன் மோனாக்சைடு என்பது மணமற்ற ஒரு விஷ வாயு. கார்கள், டிரக்குகள், அடுப்புகள், கிரில்ஸ் மற்றும் ஜெனரேட்டர்களில் எரிபொருளை எரிக்கும்போது இது வெளியேறும். காற்று புகாமல் இறுக்கமாக மூடிய இடங்களிலும் உருவாக்கலாம்.

    • சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள்
    • 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்

    இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் அரித்வார், மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் ஆகிய 4 ஊர்களில் உள்ள ஆற்றங்கரையில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.

    அதில் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் புகழ்பெற்றது. அங்கு கங்கை, யமுனை மற்றும் கண்களுக்கு புலப்படாத சரஸ்வதி ஆறு ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நடைபெறுவதால் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    3 நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை இந்துக்கள் மிகவும் புனிதமாக கருதுகிறார்கள்.

     

    இத்தகைய சிறப்பு வாய்ந்த மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விழாவான இந்த மகா கும்பமேளாவில் சாதுக்கள், துறவிகள், பக்தர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிரபல செல்போன் ஆப்பிள் நிறுவனத்தின் மறைந்த இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடைய மனைவி கும்பமேளாவை ஒட்டி இந்தியா வந்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் கணைய புற்றுநோய் காரணமாக தனது 56 வயதில் உயிரிழந்தார். அவரது மனைவி லாரென் பாவெல்(61), ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவராக இருந்து வருகிறார். 1991 இல் திருமணம் செய்துகொண்ட ஸ்டீவ் - லாரென் தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

     

    இந்நிலையில், லாரென் பாவெல், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வருகை தந்து லாரென், சாமி தரிசனம் செய்தார். அவருடன் நிரஞ்சனி அகாரா ஆசிரமத்தை சேர்ந்த கைலாஷ் ஆனந்த் ஜி மகராஜ் உடன் வந்திருந்தார். லாரென் பாவெல் மேலும் சில நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்து மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    • விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் கன்னூஜ் ரெயில் நிலையத்தில் மேற்கூரை கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து நடந்த இடத்தில் இருந்து 23 தொழிலாளர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    ×