என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கதேசத்தினர் ஊடுருவல்"

    • கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர்.
    • வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூா்:

    திருப்பூாில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. பனியன் நிறுவனங்களில் திருப்பூரை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    இந்தநிலையில் கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திருப்பூர் திரும்புகின்றனர். இதனால் வழக்கத்தைவிட திருப்பூர் பஸ் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நிற்பவர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் உடமைகளை சோதனை செய்து வருகின்றனர். மேலும் திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து வடமாநிலத்தவர்களின் ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை சோதனை செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    கோவை:

    அண்டை நாடான வங்காளதேசத்தில், இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிகளவு பனியன் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அங்கு ஏற்பட்ட சூழ்நிலை மாற்றம், அரசியல் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனியன் தொழில் முடங்கியது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலையிழந்தனர்.

    இதன் காரணமாக வங்காளதேசத்தினர், மேற்குவங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவி, போலி ஆதார் அட்டைகளை தயாரித்து தமிழகத்திற்குள் வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் நுழைந்துள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.

    உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார், கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாகவே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் போர்வையில் தங்கி வேலை பார்த்து வந்த வங்க தேசத்தினர் 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் 8 வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 39 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் திருப்பூர் மற்றும் கோவையில் தங்கியிருப்பதாக கூறியுள்ளனர்.

    இதையடுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பனியன் நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    வடமாநில தொழிலாளர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தெரிந்தால் அவர்களையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் மாநகரில் 24 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களிடம் முறையான ஆவணங்கள் உள்ளதா? எதற்காக திருப்பூர் வருகின்றனர்? உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்துகின்றனர்.முறையான ஆவணங்கள் வைத்துள்ளவர்களை தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கின்றனர்.

    இதேபோல் மாவட்ட முழுவதும் உள்ள சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, அந்த வழியாக வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

    இந்த நிலையில், வங்கதேசத்தின் ஊடுருவல் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரிக்கின்றனர். அவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் முகாமிட்டு, பனியன் நிறுவனங்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வங்கதேசத்தினர் தங்கியுள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், இங்கும் வங்கதேசத்தினர் வந்து இருக்கலாம் என்பதால் தொழில் நிறுவனங்களில் சோதனை செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கோவை கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:-

    கோவை மாநகரை பொறுத்தவரை சட்டவிரோதமாக யாராவது தங்கியுள்ளார்களா என்பது குறித்து தொடர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    ஏற்கனவே தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அதில் உள்ள முகவரிகளிலும் விசாரிக்கப்பட்டது. அதில் உண்மையான விவரங்களே இருந்தன.

    இருப்பினும் தொடர் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரித்து அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் வங்கதேசத்தினர் செய்யப்பட்டனர்.
    • 2 வாரங்களுக்கு முன்பு தஸ்லிமா பேகம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த 27 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பரவூர் பகுதியில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேற்கு வங்கத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் வங்கதேசத்தினர் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இரண்டு வாரங்களுக்கு முன்பு வங்கதேசத்தை சேர்ந்த 28 வயதான தஸ்லிமா பேகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் மாவட்ட காவல் அதிகாரி வைபவ் சக்சேனா தொடங்கிய 'ஆபரேஷன் கிளீன்' என்ற சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக வந்து நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக டிசிபி ராம் பதன் சிங் கூறுகையில், 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

    ×