என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் 8 வங்கதேசத்தினர் கைது- போலி ஆதார் கார்டு பறிமுதல்
    X

    உத்தரபிரதேசத்தில் 8 வங்கதேசத்தினர் கைது- போலி ஆதார் கார்டு பறிமுதல்

    • 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக வந்து நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 8 வங்கதேச புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக டிசிபி ராம் பதன் சிங் கூறுகையில், 'பெஹெச்சான்' நடவடிக்கையின் கீழ் 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 10 நாட்களுக்கு முன்பு கிஷன்கஞ்ச் வழியாக நொய்டா வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து ஏஜென்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

    Next Story
    ×