என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் நலம் விசாரித்தனர்.

    தற்போது அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    • 64 இடங்களில் வென்று காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியமைத்தது
    • ஒரு முதல்வர் இவ்வாறு பேசுவது கவலை அளிக்கிறது என்றார் அஷ்வினி

    கடந்த நவம்பர் மாதம், தெலுங்கானா சட்டசபைக்கான 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியாகியது.

    தேர்தல் முடிவுகளின்படி, இந்திய தேசிய காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தெலுங்கான மாநிலம் உருவானதிலிருந்து இரு முறை முதல்வராக இருந்த பி.ஆர்.எஸ். (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் தலைவர் கே.சி.ஆர். (கே. சந்திரசேகர் ராவ்) தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக அக்கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியில் பேசிய ரேவந்த் ரெட்டியிடம் முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். குறித்து கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசும் போது, "எனது மரபணு (டி.என்.ஏ.) தெலுங்கானாவை சேர்ந்தது. ஆனால், சந்திரசேகர் ராவ், பீகாரிலிருந்து விஜயநகரம் வந்து அங்கிருந்து தெலுங்கானாவிற்கு வந்தவர். பீகார் டி.என்.ஏ.வை விட தெலுங்கானா டி.என்.ஏ. சிறப்பு வாய்ந்தது" என பொருள்பட கூறினார்.

    இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    ரேவந்த் ரெட்டியின் இந்த பேச்சிற்கு பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சவ்பே (Ashwini Choubey) கடுமையாக விமர்சித்தார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    காங்கிரஸ் தலைவர்கள் அசுத்த அரசியலில் ஈடுபடுகின்றனர். ஒரு முதல்வரிடமிருந்து இத்தகைய கருத்து வருவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமின்றி கவலையளிப்பதும் கூட. பீகார் டி.என்.ஏ. சிறப்பானதுதான். இது குறித்து பதிலளிக்க வேண்டிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காத்து வருவது ஏன் என தெரியவில்லை. பொதுமக்கள் தக்க பதிலளிப்பார்கள்.

    இவ்வாறு அஷ்வினி சவ்பே கூறினார்.

    அஷ்வினியை போன்று பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ரவிசங்கர் பிரசாத் ரேவந்த் ரெட்டியின் கருத்தை, "பொறுப்பற்ற, வெட்கக்கேடான, நாட்டு மக்களை பிரிக்க முயற்சிக்கும் கருத்து" என விமர்சித்துள்ளார்.

    ரேவந்த் ரெட்டியின் கருத்திற்கு பல பா.ஜ.க. தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    • 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.
    • சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    தெலுங்கானாவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது.

    மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்- மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாரத ராஷ்டிரிய சமிதி மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சதி செய்து வருவதாக தெலுங்கானா டி.ஜி.பி.யிடம் புகார் அளித்தனர்.

    தெலுங்கானா காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர்கள் புன்னா கைலாஷ், சாருக் கொண்டா வெங்கடேஷ் சிலுகா மதுசூதன் ரெட்டி ஆகியோர் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஸ்ரீஹரி, ராஜேஸ்வர ரெட்டி, பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் ஆகியோர் 6 மாதம் அல்லது ஒரு வருடத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என பேசி வருகின்றனர்.

    மேலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருகின்றனர். தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து 100 மணி நேரம் கூட ஆகாத நிலையில் சதி செயலில் ஈடுபடும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தபோது சந்தித்ததால் சஸ்பெண்ட் நடவடிக்கை.
    • அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம், தேர்தல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் கருதியது.

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மாதம் 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 3-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது.

    காங்கிரஸ் கட்சி வெற்றி அதிகாரப்பூர்வமாக ஆட்சியை பிடிக்கிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தெலுங்கானா டி.ஜி.பி. அஞ்சனி குமார், காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டவருமான ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இவரது நடவடிக்கை தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயல் என தேர்தல் கமிஷன் அவரை சஸ்பெண்ட் செய்தது. இதனால் ஐபிஎஸ் அதிகாரி ரவி குப்தா கூடுதலாக டிஜிபி பொறுப்பை ஏற்றிருந்தார். இந்த நிலையில் அஞ்சனி குமார் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது.

    இவரது சஸ்பெண்ட் நடவடிக்கைக்குப்பின் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான இடத்தை பிடித்தது. பின்னர், ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.-க்களால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது நடத்தை ஜூனியர் அதிகாரிகளை மறைமுகமாக பாதிக்கலாம் என்று கருதிய தேர்தல் ஆணையம், டிஜிபி-யின் செயல் தெளிவான தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    • வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார்.
    • சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவை, ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    • தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த டாடா நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ள பிளாஸ்டிக் ரசாயன கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.

    தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு அவதி அடைந்தனர்.

    தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி இங்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
    • சந்திர சேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    இதைதொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ் இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் சரிவைக் கண்டார்.

    தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.   

    • இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி.
    • எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் உடல்நிலை குறுத்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

     


    அந்த அறிக்கையில், "சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது. நாள் முழுக்க ஓய்வில் இருந்த அவருக்கு வலி எதுவும் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது."

    "சர்வதேச மருத்துவ வழிகாட்டுதல்களின் படி நோயாளியை 12 மணி நேரத்திற்குள் நடக்க வைக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவர்கள் முன்னிலையில் சந்திரசேகர ராவ் நடக்க வைக்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்திருக்கிறோம். சந்திரசேகர ராவ் குணமடையும் விதம் மருத்துவ குழுவுக்கு திருப்தியளிக்கும் வகையில் தான் உள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம்.
    • தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 உரிமைத்தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

    தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ரேவேந்த் ரெட்டி முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். சோனியா காந்தி பிறந்தநாளான இன்று பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான மகாலட்சுமி இலவச பஸ் திட்டத்தை முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான இலவச பஸ் பயணம் உடனடியாக மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

    இலவச பயண திட்டத்திற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சிட்டி ஆர்டினரி, எக்ஸ்பிரஸ், மெட்ரோ எக்ஸ்பிரஸ், பல்லே வெலுகு என அரசின் அனைத்து வகை பஸ்களிலும் இந்த பெண்களுக்கான இலவச பயண திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும், தெலுங்கானா மாநில எல்லைக்குள் இலவசமாக பயணிக்கலாம். மாநிலங்களுக்கு இடையேயான பஸ்களில் பயணிக்கும்போது, தெலுங்கானா மாநில எல்லை வரை இலவசம், அதன் பிறகு உள்ள தொலைவுக்கு பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து பெண்களும், 3-ம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி, இந்த திட்டத்தில் பயன் பெறலாம். தெலுங்கானாவில் வசிக்கும் பெண்கள் மட்டுமே இந்த சேவையைப் பெற தகுதியுடையவர்கள்.

    இலவச பயணம் மேற்கொள்ள விரும்பும் பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு 'ஜீரோ டிக்கெட்' வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
    • புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    அமராவதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    தெலுங்கானா முதல் மந்திரியாக ரேவந்த் ரெட்டியை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதையடுத்து கவர்னரைச் சந்தித்து ரேவந்த் ரெட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில், அக்பருதின் ஒவைசி எம்.எல்.ஏவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நியமித்தார். இதையடுத்து, அவர் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

    • செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

    இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்கள், அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

    டிசம்பர் 8 தேதியிட்ட அரசு ஆணையின்படி, இத்திட்டம் டிசம்பர் 9ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது மற்றும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும், முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார். அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்த இரண்டு வாக்குறுதிகளும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) அமலுக்கு வருகிறது.

    • காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்துள்ளார்.
    • சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று (டிசம்பர் 07) பதவியேற்றுக் கொண்ட நிலையில், இவருடன் 11 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    காங்கிரஸ் தலைமையிலான 11 பேர் அடங்கிய அமைச்சரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சீதக்கா. நக்சலைட் அமைப்பில் இருந்து, அரசியலில் எண்ட்ரி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கும் சீதக்கா அம்மாநில அரசியல் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்து வருகிறார்.

     


    ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முலுகு மாவட்டத்தை அடுத்த ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா குடும்பத்தில் சாரையா மற்றும் சாரக்கா தம்பதிக்கு பிறந்தவர் தான் சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையாக பிறந்த தன்சாரி அனுசுயா என்கிற சீதக்கா தனது 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    1980-களில் மாவோயிஸ்ட் அண்ணன்களின் கருத்தியலை விரும்பிய சீதக்கா அவர்கள் நில உரிமையாளர்களை எதிர்கொண்டு சண்டையிட்ட விதத்தால் அமைப்பில் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பத்தாரை போன்றே சீதக்காவும் தனது வாழ்க்கையை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தியாகம் செய்ய முன்வந்தார்.


     

    பெற்றோரால் அனுசுயா என்று பெயர்சூட்டப்பட்ட இவருக்கு நக்சல் படையை சேர்ந்த தலைவர்களே சீதா என்ற புதிய பெயர் சூட்டினர். இந்த பெயர் தான் காலப்போக்கில் சீதக்கா என்று மாறியது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து பயணித்த சீதக்கா கமாண்டோவாக பணியாற்றி வந்தார். ஒருகட்டத்தில் மாவோயிஸ்டுகளின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடு ஏற்பட, அந்த அமைப்பில் இருந்து வெளியேறி 1997-ம் ஆண்டு சரண் அடைந்தார்.

    பிறகு, அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின் போது பொது வாழ்க்கையை தொடங்கிய சீதக்கா, வழக்கறிஞர் அவதாரம் எடுத்து பழங்குடியிர் மற்றும் முலுகு பகுதியின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் முலுகு தொகுதியில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்ட சீதக்கா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



    பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சீதக்கா தனது சமுதாயம் பற்றிய ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அந்த வகையில் முலுகு தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.எஸ். கட்சியின் பேட் நாகஜோதியை 33 ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சீதக்கா, தெலுங்கானா மாநிலத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின் போது இவரது பெயர் அழைக்கப்பட்டதும், அங்கிருந்த கட்சி தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது. இதன் காரணமாக உறுதிமொழி ஏற்க சீதக்கா சில நொடிகள் மேடையிலே காத்திருந்தார்.

    ×