என் மலர்
நீங்கள் தேடியது "Industrial fire accident"
- தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த டாடா நகரில் தனியாருக்கு சொந்தமான ரசாயன, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் உள்ள பிளாஸ்டிக் ரசாயன கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது.
தீ பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு அவதி அடைந்தனர்.
தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 4 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனுமதியின்றி விதிமுறைகளை மீறி இங்கு பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






