என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
- வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
சென்னை:
சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் கண்காணிக்கப்படுவர்.
* தேர்தலில் பதிவாகும் வாக்குப்பதிவு நிலவரத்தை ECINET செயலியில் அறியலாம்.
* SIR பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தமிழ்நாடு நினைவில் வைத்துக்கொள்ளும்.
* தமிழ்நாட்டின் இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் உள்ளனர்.
* கடைசி 2 மின்னணு வாக்கு எந்திரங்களில் வாக்கு எண்ணுவதற்கு முன்பு தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்படும்.
* வேட்பாளர்கள் யாராவது ஆட்சேபம் தெரிவித்தால் VVPAT ரசீது எண்ணப்படும்.
* படிவம் 6 மூலமாக இப்போது கூட வாக்காளர் பட்டியலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.
- தமிழ்நாடு வரலாற்றில் மிக வேகமான தனிநபர் வருமான வளர்ச்சி காலமாக (19.4சதவீதம்) பதிவாகியுள்ளது.
- கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வருமானம் முன்னேறி சாதித்துள்ளது.
சென்னை:
தி.மு.க. சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
வளர்ச்சி அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலான ஆட்சி, அதுவே திராவிட மாடல்.
கடந்த 4 ஆண்டுகளில் (2021-2025), தனிநபர் வருமானம் ரூ.1.78 லட்சம் உயர்ந்து, வரலாற்றிலேயே அதிகமான ரூ.3.62 லட்சம் என்ற நிலையை எட்டியுள்ளது. இது தமிழ்நாடு வரலாற்றில் மிக வேகமான தனிநபர் வருமான வளர்ச்சி காலமாக (19.4சதவீதம்) பதிவாகியுள்ளது.
20 ஆண்டுகளாக ஏற்பட்ட முன்னேற்ற அளவிற்கு சமமாக, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் வருமானம் முன்னேறி சாதித்துள்ளது.
தொழில் விரிவாக்கம், முதலீட்டை மையமாகக் கொண்ட வளர்ச்சி, மற்றும் மக்களின் வாங்கும் திறனை உயர்த்தும் நலத்திட்டங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய ஆட்சியின் நேரடி விளைவுதான் இந்த முன்னேற்றம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
- ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில் 2 நாட்கள் ஆலோசனை நடத்திய நிலையில், சென்னையில் தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய்.
* தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும்.
* தமிழ்நாட்டில் SIR பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு.
* தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
* தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்.
* தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
* ஒரு கோடி வாக்காளர்கள் 22-29 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
* 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
* 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
* வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் வாக்களிக்க எளிது.
* 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.
* தபால் வாக்குகள் இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றார்.
* இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்றார்.
- கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது.
- கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ராமேசுவரம்:
தமிழகத்தின் ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலைவில் அமைந்து உள்ளது கச்சத்தீவு. இருநாடுகளின் கடல் பரப்பில் நடுவே அமைந்துள்ள இத்தீவு சுமார் 285 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு கடந்த 1974-ம் ஆண்டு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது இந்த தீவில் உள்ள அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக மீனவர்களை அனுமதிப்பது, மீன்பிடிப்பின்போது தமிழக மீனவர்கள் தங்களது வலைகளை உலர்த்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் இத்தீவை பயன்படுத்திக் கொள்வது என்ற ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டது.
ஆனால் இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழக மீனவர்கள் வலைகளை உலர்த்திக் கொள்ள இலங்கை அரசு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான கச்சத்தீவு திருவிழா இன்று (27-ந் தேதி) மாலை தொடங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் கடந்த ஒரு மாதம் முன்பே ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்திருந்தனர். அதனை அதிகாரிகள் பரிசீலனை செய்து கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க மொத்தம் 4 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இன்று மாலை விழா தொடங்குவதை முன்னிட்டு கச்சத்தீவு செல்ல ராமேசுவரம் துறைமுகத்துக்கு அதிகாலையிலேயே பக்தர்கள் வருகை தந்தனர். காலை 6 மணியளவில் மாவட்ட அதிகாரிகள் பக்தர்களின் ஆவணங்களை சரிபார்த்து படகுகளில் ஏற அனுமதிக்கப்பட்டனர். கடலில் பயணிக்கும் 4 ஆயிரம் பேருக்கும் பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது. துறைமுகத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் கச்சத்தீவுக்கு 118 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் 3 ஆயிரத்து 31 ஆண்கள், 780 பெண்கள், 185 சிறுவர்-சிறுமிகள் என 4 ஆயிரம் புறப்பட்டு சென்றனர். கச்சத்தீவு பக்தர்களின் பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன், ராமேசுவரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஒவ்வொரு படகுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்கள் ஏற்றப்பட்டனர். படகுகளில் ஏறிய அவர்கள் உற்சாகத்துடன் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று பிற்பகலுக்குள் அனைத்து படகுகளும் கச்சத்தீவுக்கு சென்றடையும். கச்சத்தீவு திருவிழாவையொட்டி இந்திய கடல் எல்லையில் கடற்படை, கடலோர காவல் படையினர், உளவுத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதே போல் கச்சத்தீவு மற்றும் இலங்கை கடல் எல்லையிலும் அந்நாட்டு கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
அதேபோல் கச்சத்தீவு கடற்கரையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின்னர் இருநாட்டு பக்தர்களும் திருவிழா நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு பக்தர்கள் அமருவதற்கும், ஓய்வெடுக்கவும் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. அப்போது அந்தோணியார் உருவம் பதித்த கொடியை நெடுந்தீவு பங்குசந்தை பத்திநாதன், ராமேசுவரம் வேர்க்கோடு பங்குத்தந்தை அசோக் வினோ ஆகியோர் ஏற்றி வைக்கிறார்கள். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி நடைபெறுகிறது. இரவு அந்தோணியார் சொரூபத்துடன் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேர்ப வனி நடக்கிறது. 2-ம் நாளான நாளை (சனிக்கிழமை) சிறப்பு திருப்பலி நடக்கிறது.
அதனை தொடர்ந்து கொடியிறக்கம் நடக்கிறது. விழா முடிந்த பின் இந்திய பக்தர்கள் நாடு திரும்புகிறார்கள். கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் கடல் பகுதியில் 5 நாட்களுக்கு மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி, உச்சிப்புளியில் உள்ள ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானமும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
- ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2023-ம் ஆண்டு நடந்த கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதை அ.தி.மு.க. பொதுக்குழுவும் அங்கீகரித்தது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.
அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றினார்.
மேலும் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்ற கோஷத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரால் அ.தி.மு.க.வை மீட்க முடியவில்லை. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்தனர். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான தர்மர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அய்யப்பன் எம்.எல்.ஏ. மட்டும் இருந்தார்.
ஆதரவாளர்கள் அனைவரும் பிரிந்து சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இதையடுத்து அவர் என்ன முடிவு எடுப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இதையடுத்து அவர் தி.மு.க. வில் சேரப்போவதாக தகவல் பரவத்தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு வரவில்லை.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு 1 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது தி.மு.க.வில் இணையலாம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், பி.கே.சேகர்பாபுவும் அங்கிருந்து ஒரே காரில் ஏறி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றதும் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று அண்ணா அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார். பின்னர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டார்.
இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா சிறைக்கு சென்ற கால கட்டத்தில் 2 முறையும், ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஒரு முறையும் முதலமைச்சராக இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். 2022-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா தி.மு.க.தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்.
எம்.ஜி.ஆர். மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள். பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அ.தி.மு.க. வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே.
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், தாளவாடி ஒன்றியம், திங்களூர் அ பஞ்சாயத்தில் சேர்ந்த சிக்கநந்தி, டி. பி.தொட்டி, என்.எஸ்.புரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சீரான குடிநீர் வழங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்தும் வலியுறுத்தி இருந்தனர். அதேபோல் இந்த பகுதி முறையான பஸ் வசதியும் இல்லாமல் பகுதி மாணவ மாணவிகள் 3 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று பஸ்ஸில் ஏறி சென்று வருகின்றனர். இங்கு முறையான பஸ் வசதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து இந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பாசகுட்டை என்ற பகுதியில் ஒன்று திரண்டு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரம் அணி வகுத்து நின்றன.
சீரான குடிநீர் வழங்க வேண்டும், கிராமத்துக்குள் பஸ் சென்று வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதை தொடர்ந்து அவர் தலைமை செயலகம் சென்று சட்டசபை செயலாளரிடம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் வழங்கினார். இவருடன் ஐயப்பன் எம்.எல்.ஏ.வும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர்.
போடி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வுமான ஐயப்பனும் பதவியை ராஜினாமா செய்தார்.
- ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
- தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குன்னூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.
அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
- தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் பண்பை கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
* ஒரு அரசியல் இயக்கத்தை எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு தி.மு.க.வை வழி நடத்துகிறார் முதல்வர்.
* மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் உள்ளனர்.
* எனக்கு எந்த அச்சுறுத்தலும், கட்டாயமும் இல்லை. நானே சுயமாக சிந்தித்து முடிவு எடுத்து தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* கடந்த காலத்தைப்பற்றி கவலையில்லை. இனி மு.க.ஸ்டாலின் தான் எனது தலைவர்.
* ஒரு தொண்டனாகவே தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன்.
* கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தளபதி வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் உறுதியாக போட்டியிடுவேன்.
* தளபதி எடுக்கும் முடிவுக்கு இனி நான் முழுமையாக கட்டுப்படுவேன்.
* தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
- அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.
* எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கே வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க.வில் இணைந்தேன்.
* அரசியலில் சர்வாதிகாரியாக ஆணவப்போக்குடன் நடக்கும் இ.பி.எஸ். இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.
* தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை இ.பி.எஸ். திட்டமிட்டு அழித்து வருகிறார்.
* தென் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
* ஆணவப்போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார்.
* அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
- தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தாய் கழகத்தின் மனமகிழ்ச்சியுடன் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
* தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
* அனைத்து மக்களும் பயன் பெறும் வகையிலான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
* தமிழ்நாட்டில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமையும்.
* அண்ணா, கலைஞர் வழியில் ஆட்சி செய்யும் தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
- 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என்று கூறியுள்ளார்.






