என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
- அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.
சென்னை:
திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் உருவம் பொறித்த நாணயம் இந்தியில் உள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.
* நாட்டு நடப்பு தெரிய வேண்டும் அல்லது இபிஎஸ்-க்கு மண்டையில் மூளையாவது இருக்க வேண்டும்.
* ஏற்கனவே அண்ணா, எம்ஜிஆர் போன்றவர்களுக்கு வெளியிடப்பட்ட நாணயத்தை இபிஎஸ் பார்த்திருக்க மாட்டார்.
* எல்லா தலைவர்களின் நாணயத்திலும் இந்தி தான் இடம் பெற்றிருக்கும்.
* இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்.
* அண்ணாவிற்கு வெளியிடப்பட்ட நாணயத்தில் அவர் தமிழ் கையெழுத்தை கலைஞர் இடம் பெற செய்தார்.
* ஜெயலலிதா அம்மையாரால் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி உள்ளனரா?
* இரங்கல் கூட்டம் நடத்தாத அதிமுகவினருக்கு கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவை விமர்சிப்பதற்கு அருகதை இல்லை.
* இபிஎஸ் போன்று ஊர்ந்து சென்று பதவி வாங்கும் பழக்கம் திமுகவிற்கு கிடையாது.
* சங்கரை போல் எனக்கும் கோபம் வரும், ஆனால் கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும்
* அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
- கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை.
- கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு.
சென்னை:
திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் மறைந்த கே.பி.பி.சாமியின் சகோதரர் திருவொற்றியூர் கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடத்தி வைத்து மணமக்கள் திலீபன்-விஷாலியை வாழ்த்தினார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று கலைஞரின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.
உள்ளபடியே கூட்டணி கட்சித் தலைவர்கள் பேசினால் என்ன பேசுவார்களோ அதை விட அதிகமாக, தி.மு.க.காரன் பேசுவதை விட அதிகமாக சிறப்பாக தலைவர் கலைஞரை பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்க தக்க உரையாக அந்த உரை அமைந்தது.
கலைஞரை இந்த அளவுக்கு புகழ வேண்டும், பாராட்டி பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. தேவையும் இல்லை அவருக்கு. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார்.
இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று ஒரு பேட்டி கொடுக்கிறார்.
நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது, தமிழில் இல்லை. தமிழ், தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார்.
முதலில் ஒன்று அரசியல் தெரிந்திருக்க வேண்டும். இல்லை நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறுகிற நிகழ்ச்சி அது.
ஏற்கனவே பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆர்., அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை அவர் பார்த்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது, ஒன்றிய அரசு இந்தியில்தான் எழுதி அப்புறம் ஆங்கிலத்தில் எழுத்துகள் அமைந்திருக்கும்.
ஆனால் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் யாரும் செய்யாத ஒரு ரகசியத்தை செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம் பெற வேண்டும் என்று சொல்லி அண்ணாவின் தமிழ் கையெழுத்தை அந்த நாணயத்தில் வெளியிட்டு அதற்கு பிறகு வெளியிடப்பட்டது.
அது மாதிரிதான் கலைஞரின் நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞருக்கு ரொம்ப பிடித்த எழுத்து, தமிழ் வெல்லும். ஆக அந்த 'தமிழ் வெல்லும்' என்பது தமிழில்தான் எழுதப்பட்டு உள்ளது. இதை கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது வருத்தமாக உள்ளது.
ஏன் ராகுல்காந்தியை அழைக்கவில்லை என அவர் கேட்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லிக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை தி.மு.க. நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் நிகழ்ச்சி நடந்தது.
கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால்தான் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம்.
இதில் எங்கே பழனிசாமிக்கு வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.
எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனுஷனாகவே நினைக்கவில்லை. வர மறுத்து விட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை.
இன்றைக்கு நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடி ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், அரைமணி நேரம் வந்து நீங்கள் நடத்தி விட்டு செல்லுங்கள் என்றோம்.
15 நிமிடம் என்ன... எவ்வளவு மணி நேரம் என்றாலும் இருந்து காத்திருந்து நிகழ்ச்சியை நடத்தி விட்டு போகிறேன் என்று சொல்லி விட்டு வந்தார். அதுதான் தி.மு.க.வுக்கு இருக்கக்கூடிய பெருமை. கலைஞருக்கு இருக்க கூடிய சிறப்பு.
இன்னொன்றும் சொல்ல வேண்டும், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டி ருக்கிறார்களே அ.தி.மு.க.வினர். பாக்கெட்டில் படத்தை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடம் ஆகி விட்டது.
நான் கேட்கிறேன். இதுவரைக்கும் அந்த அம்மையரால் வளர்க்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தி இருக்கிறார்களா?
ஒரு இரங்கல் கூட்டம் கூட நடத்துவதற்கு யோக்கியதையற்றவர்கள் கலைஞருடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.
ராஜ்நாத்சிங்கை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வுடன் நாம் உறவு வைத்துக் கொண்டோம். உறவு வைக்க போகிறோம். அப்படின்னு ஒரு செய்தியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
இது மீடியாவுக்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் தி.மு.க.தான், வாழ்த்தினாலும் தி.மு.க.தான்.
நாங்கள் ரகசிய உறவு வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அம்மையார் இந்திரா காந்தியே சொன்னார். கலைஞரை பொறுத்தவரைக்கும், தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார். ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லி இருக்கிறார். அது போதும் எங்களுக்கு.
மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டுள்ளோம். முதலில் எடிப்பாடி பழனிசாமி அதை படிக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி மாதிரி ஊர்ந்து போய், பதுங்கி போய் பதவி வாங்குகிற புத்தி தி.மு.க.வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுக்கிறோம்.
அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன். அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன். நமக்கென்று இருக்க கூடிய உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு நமக்கு போட்டுத் தந்திருக்கும் பாதை.
அப்படிப்பட்ட இயக்கத்தை சேர்ந்த குடும்பத்தில்தான் இன்றைக்கு இந்த மண விழா நடக்கிறது.
இங்கே உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது, சங்கருக்கு கோபம் வந்திடும். அந்த பயத்திலேயே வந்தேன் என்று சொன்னார். நானும் அப்படித்தான்.
ஒன்றை மறந்து விடக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும். கட்சிக்கென்று ஒரு பிரச்சினை வருகிறபோது பெரிய கோபம் வந்தே தீர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு, காந்தி, பெரிய கருப்பன், ராஜ கண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை வட கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் எம். எல்.ஏ., கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா, எம்.எல்.ஏ.க்கள் ஜே.ஜே. எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மாநில மீனவர் அணி தலைவர் இரா. பெர்ணார்டு, மீனவர் அணி நிர்வாகிகள் மதிவாணன், ஜோசப் ஸ்டாலின், பகுதி செயலாளர்கள் தி.மு. தனியரசு, வை. ம. அருள்தாசன், ஏ.வி. ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி. அமைப்பாளர் ஆர்.டி. மதன்குமார், ஆகாஷ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் செல்வ ராஜகுமார், ராமநாதன், இரா. முருகேசன்,அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன் பரசு பிரபாகரன், பி. எஸ். இனியன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக கே.பி.சொக்கலிங்கம் வரவேற்றார். முடிவில் கே.பி.சங்கர் எம்.எல். ஏ. நன்றி கூறினார்.
- ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
- 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்.
வேங்கிக்கால்:
திருவண்ணாலையில் ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்

தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர். பல லட்சம் பக்தர்களின் வருகையால் திருவண்ணாமலை நகரமே குலுங்கியது.
அரசு, தனியார் பஸ்கள், வேன், கார் மற்றும் ஆட்டோக்கள் என எண்ணில் அடங்காத வாகனங்கள் திருவண்ணாமலை நகரை ஆக்கிரமித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன. திருவண்ணாமலை-செங்கம் சாலை, செங்கம் அருகே உள்ள புறவழிச் சாலை, திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி சாலை ஆகிய வழிதடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அதனை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் திக்கு முக்காடினர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். பவுர்ணமி கிரிவலத்திற்காக கூடுதல் சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.
பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர்.
- சிவ்தாஸ் மீனா ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.
- தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமனம்.
தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழ்நாட்டுக்கு புதிய தலைமைச் செயலாளர் யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் 50-வது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
- ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம், சொக்கநல்லி, செம்மநத்தம் ஆகிய பகுதிகளில் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளதாகவும், யானைகள் வழித்தடம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி கடந்த 2008-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு, யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018-ம் ஆண்டு யானை வழித்தடத்தில் உள்ள 38 தங்கும் விடுதிகளை மூடி 'சீல்' வைக்க உத்தரவிட்டது. அதன்படி 38 விடுதிகளுக்கும் 'சீல்' வைக்கப்பட்டது.
ஆனால் யானை வழித்தட வழக்கில் மாவட்ட நிர்வாகமும், தமிழக வனத்துறையும் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை வழங்கி இருப்பதாக விடுதி உரிமையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு 'சீல்' வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்ததை அடுத்து, தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், அவற்றை இடிக்கவும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. விசாரணை குழுவின் உத்தரவுப்படி, மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தங்கும் விடுதிகள், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தங்கும் விடுதிகள் உள்பட 35 தனியார் தங்கும் விடுதிகளை, அவற்றின் உரிமையாளர்களே 15 நாட்களுக்குள் இடித்து அகற்றி கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட நிர்வாகம் பதிவு தபால் மூலமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
- இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது.
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறிவிட்டு பங்கேற்றதன் மூலம் திமுக-பாஜக-வின் ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நாணயம் நேற்று வெளியிடப்பட்டது. அந்த நாணயத்தில் இந்தியில் எழுதப்பட்டு உள்ளது. தமிழ்... தமிழ்... என்று பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் வைத்த தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று முதலமைச்சர் கூறினார்.
ஆனால் திடீரென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களோடு அந்த விருந்தில் பங்கேற்று உள்ளார். கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்றால், கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருந்தார். அதன் பின்னர்தான் முதலமைச்சர் அந்த விருந்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இதில் இருந்து திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவு வைத்து இருப்பது தெளிவாக தெரிகிறது.
பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தபோது எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நாணயத்தை அதிமுகவே வெளியிட்டது. நாங்கள் பாஜக-வை அழைக்கவில்லை. ஆனால் திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு, விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காமல், பாஜக-வை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறது. இதில் இருந்தே அவர்களின் ரகசிய உறவு வெட்டவெளிச்சமாகி இருக்கிறது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,
திமுக மற்றும் பாஜக ஆகியவை தனித்தனி பாதைகளில் பயணிக்கிறது.
இரு கட்சிகளும் அரசு விழாவில் பங்கேற்றதை கூட்டணிக்காக என எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும்.
- தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் சுனில்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவரை பணியில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் நிலை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த இந்தப் பணிக்கு, இதுவரை இல்லாத வகையில் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் என்பது மிகவும் பொறுப்பான பதவி ஆகும். காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை பணிகளுக்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதற்கு ஆணையத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அத்தகைய சூழலில், ஆணையத்தின் தலைவராக இருப்பவர் பணியில் இருக்கும் அதிகாரியாக இருந்தால், அவரை பணியிடை நீக்கம் செய்வது, அவர் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், ஓய்வு பெற்ற அதிகாரிக்கு எந்தவித பொறுப்புடைமையும் கிடையாது. பொறுப்புடைமையை நிர்ணயிக்க முடியாத அதிகாரி ஒருவரை இந்த பதவியில் எப்படி நியமிக்க முடியும்?
சீருடைப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பணிக்கு ஓய்வு பெற்ற அதிகாரியை நியமிக்கும் அளவுக்கு தமிழக காவல்துறையில் பொறுப்பான அதிகாரிகளுக்கு எந்த பஞ்சமும் இல்லை. தமிழக காவல்துறையில் டி.ஜி.பி. நிலையில் மொத்தம் 16 அதிகாரிகள் உள்ளனர். அவர்களில் மத்திய அரசுப் பதவிகளில் உள்ளவர்கள் தவிர, தமிழகத்தில் உள்ள டி.ஜி.பி நிலையில் உள்ள பல அதிகாரிகளுக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்படவில்லை. அவர்களில் பலர் காவல் ஆய்வாளர் அல்லது காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரிகள் வகிக்கக் கூடிய கண்காணிப்பு அதிகாரி என்ற பணியில் மின்வாரியம் உள்ளிட்ட பல துறைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பணியை வழங்குவதை விடுத்து, ஓய்வுபெற்ற அதிகாரியை நியமிக்க வேண்டிய தேவை என்ன?
அதைவிட குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செய்தி, சுனில்குமார் அவர்களை இந்தப் பதவியில் அமர்த்துவதற்காக ஏற்கனவே அந்த பதவியில் இருந்த சீமா அமர்வால் என்ற டி.ஜி.பி. நிலையிலிருந்த பெண் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்தது தான். சீமா அகர்வால் டி.ஜி.பி. நிலையிலான அதிகாரி. காவல்துறையில் அப்பழுக்கற்ற வரலாற்றுக்கு சொந்தக்காரர். அவரை இடமாற்றம் செய்வதற்கு எந்த தேவையும் இல்லை. ஆனால், அவரை இடமாற்றம் செய்தது மட்டுமின்றி, டி.ஜி.பி நிலையிலான பதவியில் அமர்த்துவதற்கு மாறாக சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி பிரிவின் டி.ஜி.பி. என்ற புதிதாக உருவாக்கப்பட்ட பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். பணியில் இருந்து இரு ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்ற இ.கா.ப. அதிகாரி ஒருவருக்கு பதவி வழங்குவதற்காக இத்தனை சமரசங்களையும், வளைப்புகளையும் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுனில்குமார், காவல்துறை பணியில் இருக்கும் போது எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வெளிநாடுகளில் அவருக்காக முதலீடு செய்ததாக கூறப்படும் தொழிலதிபர் ஒருவருக்கும் பாலமாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு சுனில்குமார் மீது உண்டு. அந்த அடிப்படையில் முந்தைய அதிமுக ஆட்சியின் போது, சுனில்குமாருக்கு நெருக்கடிகள் தரப்பட்டன. அதற்கு நன்றிக்கடனாகவே சுனில்குமாருக்கு இந்தப் பதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நன்றிக்கடனுக்காக பதவிகளை வழங்க அரசு பதவிகள் முதலமைச்சரின் குடும்பச் சொத்துகள் அல்ல. இது தவறான முன்னுதாரமான அமைந்துவிடும். இதை உணர்ந்து கொண்டு, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக சுனில்குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்
- புதிய தலைமைச் செயலாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
- இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநரான ராகேஷ் பாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
- சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை:
இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநராக செயல்பட்டவர் ராகேஷ் பால். அவருக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
- கலைஞர் நினைவு நாணயத்தை வெளியிட்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
- அப்போது பேசிய அவர், கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை என்றார்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர்.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கு சிந்தித்து துணை நின்றவர்.
கலைஞர் கருணாநிதியின் போராட்டங்கள் மிகவும் வலிமையானவை.
மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்களைக் கொண்டு வந்தவர் கலைஞர்.
தமிழ் இலக்கியம், சினிமாவிற்கு கலைஞர் அளித்த பங்கேற்பு மிகவும் அபரிமிதமானது.
இந்தியாவின் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றியவர் கலைஞர் என தெரிவித்தார்.
- பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார்.
- கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பலவேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "என்னுடைய உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் இங்கே நின்று கொண்டிருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருந்த கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வந்திருப்பது மிக மிக மிக பொருத்தமானது.
பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே, முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிடப் பொருத்தமானவர்
'நா-நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது, நாம் கொண்டாடிய கலைஞரை இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பதன் அடையாளம் தான் இந்த விழா.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட அனுமதி அளித்த ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
- மெரினாவில் கருணாநிதி நினைவிடம் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
சென்னை:
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்று இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ராஜ்நாத்சிங் வருகையை முன்னிட்டு கலைவாணர் அரங்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.






