என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது.
    • ரசிகர்கள் திரையரங்கில் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.

    ரஜினிகாந்த் - அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் இன்று ரிலீசானது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகவும், இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் `வேட்டையன்'.


    ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ஆயுத பூஜை கொண்டாட்டமாக வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதன்படி, உலகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று வெளியானது. பல திரையரங்கில் காலை முதலே சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டது. காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி தொடங்கியது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    என்கவுன்டர் பற்றி அலசும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்தும், என்கவுன்டரை எதிர்க்கும் வழக்கறிஞராக அமிதாப்பச்சனும் நடித்துள்ளனர்.

    இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருவர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருப்பதால் இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் திரையரங்கில் ஆர்வத்துடன் முதல் நாள் காட்சியில் கொண்டாடி வருகின்றனர்.

    வேட்டையன் கொண்டாட்டத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பல திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.


    இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் – அமிதாப் பச்சன் ஆகிய இருவருடன் இணைந்து பகத் ஃபாசில், ராணா, கிஷோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் பெண் கதாபாத்திரங்களையே மையப்படுத்தி நகர்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

    துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி, ரோகிணி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

    மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு மட்டுமின்றி பெங்களூர், ஐதரபாத், மும்பை, கொச்சி, திருவனந்தபுரம் என இந்தியாவின் பல நகரங்களிலும், வெளிநாடுகளிலும் வேட்டையன் படத்தை காண ரஜினி ரசிகர்கள் குவிந்து வருகினனறனர்.   

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.
    • ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.

    சென்னை:

    ஆன்லைன் மூலமாக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணத்தை பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகமாகவே தங்களது கைவரிசையை காட்டு கொண்டிருக்கிறது.

    மும்பை போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி ஏமாற்றி உங்களது பெயரில் போதைப் பொருள் பார்சல் வந்துள்ளது, உங்கள் வங்கி கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை பறிப்பது தொடர்கிறது.

    நாங்கள் சொல்கிறபடி ஆர்.பி ஐ.வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். நாங்கள் உங்களைப் பற்றி விசாரணை நடத்தி விட்டு அந்த பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம் என்று கூறி ஏமாற்றுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இது ஒரு புறம் இருக்க வங்கி அதிகாரி போல பேசியும் மோசடி கும்பல் ஆன்லைன் மூலமாக பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. ஒரு சிலர் இது போன்ற மோசடி கும்பல்களை அடையாளம் கண்டு சிலர் உடனடியாக போனை துண்டித்து விடுகிறார்கள்.

    இன்னும் சிலரோ மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் போனில் வாக்குவாதம் செய்து யாரை ஏமாற்ற பார்க்கிறாய்? என்று திட்டிவிட்டும் போனை துண்டிக்கிறார்கள்.

    இப்படி தமிழகம் உள்பட நாடு முழுவதுமே மோசடி கும்பல் தொடர்ச்சியாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருப்பவர்களிடமும் இது போன்று பணம் பறிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் நாடு முழுவதும் ரூ.1750 கோடி பணத்தை மோசடி பேர்வழிகள் சுருட்டி இருக்கிறார்கள். இந்த மோசடியை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த போதிலும் அதனை கட்டுப்படுத்துவது என்பது பெரிய சவாலாகவே மாறிப் போயிருக்கிறது.

    வயதானவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆகியோர்களை குறி வைத்தே மோசடி நபர்கள் பேசுகிறார்கள். அப்போது அவர்களை மூளை கலவை செய்து மிரட்டி தாங்கள் சொல்கிறபடி கேட்க வைத்து விடுகிறார்கள். இதன் மூலமே லட்சக்கணக்கான பணத்தை பறிகொடுக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த மோசடி அதிகமாக நடைபெற்று வரும் நிலையில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 12 லட்சம் பணத்தை தற்போது பறிகொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, வங்கியில் இருந்து போன் செய்து யாரும் வங்கி கணக்குகள் தொடர்பான தகவல்களை கேட்பதில்லை. அதே நேரத்தில் வங்கி தொடர்பான தொலைபேசி அழைப்புகள் வந்தால் 1860 என்று தொடங்கும். அதேபோன்று அப்படியே யாரும் பேசினாலும் வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

    எனவே யார் போன் செய்து வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களை கேட்டாலும் அவர்களிடம் பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.

    அதே நேரத்தில் ஆன்லைன் மோசடி தொடர்பாக 1930 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வந்த போதிலும் ஒரு புறம் மக்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மோசடி பேர்வழிகள் அந்த அளவுக்கு அதிகாரிகள் போல ஆங்கிலத்தில் பேசி துணிகர மோசடியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.
    • மறைந்த ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

    சென்னை:

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ரத்தன் டாடா காலமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன்.

    தன்னுடைய தொழில் நேர்மையினாலும், வள்ளல் தன்மையாலும், சமூக சேவையாலும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தொழிலதிபரான ரத்தன் டாடா மறைவு இந்திய நாட்டிற்கே பேரிழப்பாகும்.

    மறைந்த ரத்தன் டாடா அவர்தம் குடும்பத்தாருக்கும், டாடா நிறுவனத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். மறைந்த ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது.
    • தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில், நிர்வாகத்தினருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தி.மு.க. அரசு, தன்னுடைய அதிகார பலத்தின்மூலம் தொழிலாளர்களை மிரட்டி, அடக்கி, ஒடுக்கி வைக்கப் பார்க்கிறது. போராடுவது என்பது தொழிலாளர்களின் உரிமை. அதனை ஒடுக்க நினைப்பது தொழிலாளர் விரோதப் போக்கு. அவர்கள் பெற்ற உரிமையை பறிக்கும் செயல் ஆகும்.

    தொழில் அமைதியை உருவாக்குவதற்குப் பதிலாக, தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் பணியினை தி.மு.க. அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோதப் போக்கிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.
    • ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    சென்னை:

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தேசத்துக்கும் மக்களுக்கும் ரத்தன் டாடாவின் பங்களிப்பு அளவிட முடியாதது.

    சமூக மேம்பாட்டுக்கான ரத்தன் டாடாவின் அர்ப்பணிப்பு பல தலைமுறைகளை தாண்டி எதிரொலிக்கும்.

    ரத்தன் டாடாவின் வாழ்க்கைப் பயணம் லட்சக்கணக்கானோருக்கு ஊக்கம் தரும்.

    இந்த இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் டாடா குழுமத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காற்றிய நவீன இந்தியாவின் பொக்கிஷம் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடாவின் உண்மையான செல்வம் பொருளில் இல்லை. அவரது நேர்மை, தேசபக்தி, நெறிமுறையில் உள்ளது. எனது வாழ்நாள் முழுவதும் நான் பின்பற்ற முயற்சித்த கதாநாயகன் ரத்தன் டாடா.

    ரத்தன் டாடா மறைவால் வாடும் டாடா குழுமம் மற்றும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.
    • இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    ஆயுத பூஜை விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மெட்ரோ ரெயில்கள் காலை 8 முதல் 11 மற்றும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * காலை 5 முதல் 8 மணி மற்றும் காலை 11 முதல் மாலை 5 மணி, இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயங்கும்.

    * இரவு 10 முதல் 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் 15 நிமிடங்களுக்கு பதிலாக 7 நிமிட இடைவெளியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உற்பத்தித் துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகவும், குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்க ளின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாகவும் திகழ்கிறது.

    தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உலகத்தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் திறன்மிக்க தொழிலாளர்களின் அயராத உழைப்பு மற்றும் அரசின் தொலைநோக்கு கொண்ட திட்டங்கள் இணைந்து, தமிழகம் இந்தி யாவின் முன்னணி உற்பத்தி மையமாக மாறி வருவதுடன் 2030-ம் ஆண்டுக்குள் "1 டிரில்லியன் அமெரிக்க டாலர்" பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கிறது.

    தொழிலாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தும் என்பதை கருத்தில் கொண்டும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் அதிக பங்கு வகிக்கும் என்பதை கருத்தில் கொண்டும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரம் எனவும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7 ஆயிரமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21 ஆயிரம் என்பதைத் தளர்த்தி அனைத்து 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.

    லாபம் ஈட்டி உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களின் ஒதுக்கப்படக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    ஒதுக்கக்கூடிய உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் மிகைஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகையும் வழங்கப்படும்.

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் தகுதியுடைய 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33 சதவீதம் மிகை ஊதியம் வழங்கப்படும்.

    இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

    இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400-ம் அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும்.

    அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுவதுடன், எதிர்வரும் விழாக்காலங்களை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்தார்.
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    சென்னை:

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

    இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    ரத்தன் டாடாவின் மறைவால் ஆழ்ந்த வருத்தம். இந்திய தொழில்துறையின் உண்மையான கலங்கரை விளக்கமாக ரத்தன் டாடா விளங்குகிறார்.

    அவரது தொலைநோக்கு தலைமை டாடா குழுமத்தை வடிவமைத்தது மட்டுமல்லாமல், நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உலகளாவிய அளவுகோலையும் அமைத்தது.

    தேசத்தைக் கட்டியெழுப்புதல், கண்டுபிடிப்புகள் மற்றும் பரோபகாரம் ஆகியவற்றில் அவரது இடைவிடாத அர்ப்பணிப்பு மில்லியன் கணக்கான உயிர்களின் மீது அழியாத முத்திரையை பதித்துள்ளது.

    இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டது. ஆனால் அவரது பாரம்பரியம் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.

    அவரது இழப்பின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும், ஒட்டுமொத்த டாடா குழுமத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    • இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

    சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

    போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று அடையலாம்.

    மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர்.
    • கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார் சத்திரத்தில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பிரிட்ஜ், டி.வி., வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை தொடங்க அனுமதி கேட்டு வருகின்றனர்.

    அது மட்டுமின்றி சம்பள உயர்வு. சம்பள ஏற்றத்தாழ்வு களைதல் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை போலீசார் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அண்ணாவின் மண்ணில் அந்நியர் நலன் காக்கும் அரசின் கொடுஞ்செயல்கள். இரவோடு இரவாக காவல்துறையினரை வைத்து போராடி வந்த தொழிலாளர்கள் கைது. வருவாய்த்துறையினரை வைத்து போராட்ட பந்தல்கள் அகற்றம்

    கூட்டணி இயக்க தலைவர்கள் போராட்டத்தில் பங்குபெற்றிட கூடாது என்பதற்காக கார்ப்பரேட்களின் கைக்கூலியான திமுக அரசு கொடுஞ்செயலில் ஈடுபட்டுள்ளது.

    போராடுபவர்களை அழைத்து பேசாமல் போலியானவர்களை அழைத்து பேசிவிட்டு போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என முதலமைச்சர் நியமித்த அமைச்சர்கள் குழு பேட்டி அளித்திருப்பது நியாயமா?

    முதலமைச்சரும் அமைச்சர்களும் கார்ப்பரேட்டிற்கு விலைபோகி விட்டதை உணர்த்தும் வகையில் தான் அமைச்சரின் பேச்சு இருந்தது.

    உண்மையான கம்யூனிஸ்ட் தோழர்களை மாவோயிஸ்டுகள் என அடையாளப்படுத்த அரசு துணிந்திருப்பது பாசிசத்தின் உச்சம்!

    பேருந்தில் செல்லும் தொழிலாளர்களை காவல்துறையை வைத்து மிரட்டியுள்ளனர். தொழிலாளர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி இருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

    போராட்டத்திற்கு பந்தல் அமைத்தவர்கள் முதல் தேநீர்,உணவு வழங்கியவர்கள் என அனைவரையும் இந்த பாசிச அரசு மிரட்டியுள்ளது.

    சங்கம் அமைக்க கூடாது என்ற சாம்சங் நிறுவனத்தின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக் கொண்டு விட்டாரா?

    போராட்டங்கள் தொடர்வதை தாங்கி கொள்ள முடியாத 'கார்ப்பரேட்களின் நண்பன்' ஸ்டாலின் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை செய்கிறார்.

    கூட்டணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் போராடுவதை கூட அனுமதிக்காமல் அராஜக ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.

    சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத நிலையில் கூட்டணி கட்சித் தலைவர்கள். கரைந்து கொண்டிருக்கும் தொண்டர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
    • வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழத்தடம் 3ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் பாலாறு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை நிலையத்தை வந்தடைந்தது

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.

    வழித்தடம் 3-ல், சேத்பட் முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கப்பாதை பணிகள் செப்டம்பர் 2023-ல் சிறுவாணி மற்றும் பாலாறு என்ற இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் தொடங்கப்பட்டன.

    ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 708 மீட்டர் ஆகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் சிறுவாணி ஆகஸ்ட் 2024-இல் (downline) ஸ்டெர்லிங் சாலையை வெற்றிகரமாக வந்தடைந்தது.

    இதற்கிடையில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு 2024 ஜனவரியில் (upline) சேத்பட் நிலையத்திலிருந்து சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு இன்று 09.10.2024 ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது.

    சுரங்கம் தோண்டும் இயந்திரம் பாலாறு பூமிக்கு அடியில் களிமண், மணல் மற்றும் பாறை பிரிவுகளையும், மேலும், சேத்பட் மாநகராட்சி பள்ளி, சேத்பட் தோபி காட், கருகாத்தம்மன் கோயில் மற்றும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள பல்வேறு கடைகள் ஆகிய இடங்களையும் கடந்து வந்துள்ளது.

    இருப்பினும், பல குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டமைப்புகளின் கீழ் நடைபெறும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் செயல்பாடுகளை அறியாமலே இருந்தனர், இது வேலையின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது.

    குறிப்பாக சுரங்கப்பாதைக்கு மேலே 6 மீட்டர் களிமண்ணுடன் 52 மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றின் அடியில் கடந்தது சவாலாக இருந்தது. இந்த நுட்பமான செயல்பாடு குறைபாடற்ற முறையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

    மேலும், இந்த சுரங்கப்பாதை பணிகளை முடிக்க 260 நாட்கள் ஆனது, இது சென்னை மெட்ரோ ரெயிலின் கட்டம்-2 பணிகளின் தற்போதைய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கிறது.

    இந்நிகழ்வை, சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர் சகாய் மீனா, இ.ஆ.ப., சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் கோனேரு பவானி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
    • மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்.

    கடந்த பல தசாப்தங்களாக பல்வேறு நாடுகளில் இருந்து மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

    வியாபாரத்தை எளிமையாக துவங்குவதற்கு ஏற்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அரசின் கவர்ச்சிகர திட்டங்கள் காரணமாக பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    "தொழில்துறை கூட்டமைப்பில் உள்ள அனைத்து பங்குதாரர்கள் அவரவர் துறையில் சிறந்து விளங்கவும், வெற்றி பெறவும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் மாநில அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம்."

    "தமிழகத்தின் பொருளாதார வேகம் மற்றும் உயர் பிம்பம் நீடிக்க சமீபகாலங்களில் தொழில் தகராறில் ஈடுபட்டுள்ள அனைத்து பங்குதாரர்களும் இணக்கமாக பணியாற்ற கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவர் ஸ்ரீவட்ஸ் ராம் தெரிவித்தார்.

    ×