என் மலர்
உள்ளூர் செய்திகள்
- கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் இன்று உயிரிழந்தார்.
- முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.
முரசொலி செல்வம் உடலுக்கு அழுதுகொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் செலுத்தும் புகைப்படத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கொள்கை முரசொலிக்கும் உங்கள் எழுத்துகளை நிறுத்திக் கொண்டீர்களே!" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
- வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருமழை விலகிக் கொண்டே வருகிறது.
- தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.
சென்னை:
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.
வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருமழை விலகிக் கொண்டே வருகிறது.
தென்மேற்கு பருமழை விலகிய பிறகு தான் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
- முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில்,
- முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
முரசொலி செல்வம் என்னுடைய நீண்ட கால நண்பர் மற்றும் அருமையான மனிதர். அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.
- நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.
- ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது.
அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது.
கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என்று கூறினார்.
- ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
- நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது.
சென்னை:
சென்னையில் மழை காலங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த முறை வெள்ளப்பெருக்கால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது, மழை பாதிப்புகளில் மக்கள் சிரமப்படக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும், பொதுமக்களிடம் கள நிலவரத்தை நேரில் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளவும் புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு களத்தில் இறங்கினார்.
அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நேற்று அடையாறு மண்டலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
முக்கியமாக அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அந்த பகுதிகளில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனே பொதுமக்கள் எந்தெந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன, இந்த முறை எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.
உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், 'பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இன்னும் 2 நாட்களில் சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் மழைநீர் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மண்டலத்தில் கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பின் இங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து விளக்கமாக தெரிவித்து உள்ளோம்.
முக்கிய நீர் நிலைகள் இந்த மண்டலத்தில் உள்ளது. 98 சதவீதம் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது. பழுது ஏற்பட்டுள்ள சாலைகளை விரைவில் போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பொதுமக்களும், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உள்ள பாதிப்புகளை தெரிவித்தனர். அதனை சரி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் இங்கு இருந்ததால் அவர்களும் 2 நாட்களில் நேரடியாக சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை முடிவடையும் நிலையில் உள்ளது. பணிகளை முடிக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழை நீரை சமாளிப்போம், வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மதுரவாயல் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி கோடம்பாக்கம் மண்டலத்திலும், 17-ந்தேதி பெருங்குடி மண்டலத்திலும், 18-ந்தேதி சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் ஆய்வுக்கூட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்துகிறார்.
- அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
- ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்குள் நேற்று மாலையில் பெய்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலையில் மழை அளவு குறைந்து வெயில் அடிக்க தொடங்கி உள்ளதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து முதற்கட்டமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், பழைய குற்றால அருவியில் நேற்று திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக அந்த பகுதியில் கற்கள் மற்றும் மணல்கள் காணப்பட்டதால் அதனை அப்புறப்படுத்திய பின் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
- ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சேலம் எடப்பாடியில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மாணவி புனிதா வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரசும் தான்.
* நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே அதை ரத்து செய்வதாக இரட்டை வேடம் போடுகிறது.
* மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
* ஆட்சி பொறுப்பேற்று 41 மாதங்களாகியும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
* நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
* திமுக அரசின் போலி வாக்குறுதிகளால் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்து வருகிறோம் என்று கூறினார்.
- திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
- டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது.
திருப்பூர்:
கோவை - திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. தொண்டாமுத்தூரை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் (வயது 32) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
திருப்பூர் அவிநாசி பைபாஸ் சாலையில் செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. டிரைவர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.
சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பஸ்சை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதையடுத்து அவரை பாராட்டிய பயணிகள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் பஸ்சில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர்.
- கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர்.
திருப்பூர்:
கேரள மாநிலம், கோழிக்கோடு, வடகரையில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்த மாதா ஜெயக்குமார் என்பவர் ரூ.17 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 26 கிலோ 800 கிராம் போலி தங்க நகைகளை வைத்து விட்டு அசல் நகைகளை கையாடல் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து கேரள தனிப்படை போலீசார் மாதா ஜெயக்குமாரை, இரு மாதம் முன்பு தெலுங்கானாவில் கைது செய்தனர். அசல் நகைகளை திருப்பூரில் தனது நண்பர் கார்த்திக் என்பவர் பணிபுரியும் டி.பி.எஸ்., வங்கி கிளையில் அடகு வைத்து பணம் பெற்று மோசடி செய்தது தெரிந்தது.
கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி திருப்பூரில் இந்த வங்கி கிளையில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 கிலோ 300 கிராம் அடகு வைத்த நகைகளை மீட்டனர். கடந்த மாதம் 11ந் தேதி திருப்பூர் மாநகரில் உள்ள சி.எஸ்.பி., வங்கியின், 3 கிளை மற்றும் காங்கயத்தில் உள்ள ஒரு கிளை என, 4 வங்கியில் இருந்து, 1.75 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக டி.எஸ்.பி., தலைமையிலான கேரள போலீசார், திருப்பூரில் தங்கி ஏற்கனவே நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வங்கிகளில் மேலும் ஆய்வு நடத்தினர். இதில், 4கிலோ நகைகள் கைப்பற்றப்பட்டதாகவும், வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- 16-ந்தேதி வரை பலத்த மழைகு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை விலகி ஒரு சில நாட்களில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
இதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி, இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதுதவிர லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் நில வும் காற்றழுத்த தாழ்வு பகுதி போன்றவை அடுத்த சில நாட்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கின்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.
அடுத்த 6 நாட்களுக்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்ம புரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் 16-ந்தேதி வரை பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் பகுதி, அரபிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில் அதி காலை 1.30 மணியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்தது.
எழும்பூர், பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம், கோயம்பேடு, கோடம்பாக்கம், வடபழனி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
ஆனாலும் மழைநீர் சாலைகளில் இருந்து உடனடியாக வடிந்தது. சுரங்கப் பாதையிலும் பெரிய அளவில் மழைநீர் தேங்காததால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.
ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீரும் வடிந்தது. தொடர்ந்து காலையிலும் ஒரு சில இடங்களில் லேசாக மழை தூறியது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
- தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது.
- பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுமியர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்பவர்கள், கஞ்சா விற்பனை செய்பவர்களை என்கவுண்டர் செய்ய வேண்டும் அல்லது அவர்களை தூக்கிலிட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை சர்வ சாதாரணமாக நடக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன், பா.ஜ.க.வினர் கூட்டணி இல்லாததால் மத்தியில் மைனாரிட்டி அரசாக உள்ளது.
பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருந்திருந்தால் தமிழகத்தில் அ.தி.மு.க 20, பா.ஜ.க 15 என 35 தொகுதிகள் பிடித்திருக்கும். தமிழகத்தில் பா.ஜ.க ஆளும் கட்சியாக வரவேண்டும் என்பதற்கு அ.தி.மு.க பாடுபட முடியுமா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதிகளை அதிகளவு கொடுக்கிறது. மற்ற மாநிலங்களில் குறைவாக கொடுக்கிறது. மக்களின் பணத்தை ஏமாற்றியதற்கு சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை முதலமைச்சர் கொடுத்துள்ளார்.
தி.மு.க.வில் முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல்ராஜன் போன்ற பல நல்லவர்கள் உள்ளனர். பழனிவேல் தியாகராஜனிடம் மின்சாரத்துறையை கொடுத்திருந்தால் ஒரு முறை கூட மின்வெட்டு இருந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது.
- ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரேஷன் கடை பணியாளர்களை போட்டித்தேர்வின் மூலம் நியமிக்கவேண்டும். இதில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் ஒரு ஆண்டுக்கு தொகுப்பு ஊதியத்திலும் பின் பணி நியமனம் செய்யபட்டு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எந்த பணி நியமனத்திலும் நேர்காணலில் முறைகேடு நடைபெறுகிறது. போட்டித்தேர்வின் அடிப்படையில் இப்பணி நியமிக்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விற்பனையாளர் பணி நியமனத்தில் நேர்மையாக இருந்த கூட்டுறவு அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் கதிரேசன் ஓய்வுபெற உள்ளார். ஏற்கனவே சென்னை, காமராசர், பாரதியார், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. சில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பதவி நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் பணி நியமனத்தில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் ஏற்பட்ட மோதலால் துணை வேந்தர் பணி நியமிக்கப்படவில்லை.
தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 120-க்கும், வெங்காயம் ரூ. 80-க்கும் உயர்ந்துள்ளது. தீபாவளியையொட்டி இதன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்க வேண்டும்.
மின்வாரியத்தில் ஆள் குறைப்பு செய்ய உள்ள திட்டத்தை கைவிட வேண்டும். மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 95 விழுக்காடு பயனாளிகள் ஆன்லைனில் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ரூ.5 ஆயிரம் வரை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற நிலையை திரும்ப பெற வேண்டும். இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. வரும் 15-ந் தேதி 1000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்துவது போதுமானதல்ல. 5 ஆயிரம் முகாம்கள் நடத்தவேண்டும். இந்நோய்குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க அரசும், நிறுவனமும் அங்கீகரிக்க வேண்டும். கட்சிகள் சார்ந்த தொழிற் சங்கம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று துணை முதல்-அமைச்சர் கூறியிருப்பது சரியல்ல. தொழிலாளர்களை விட சாம்சங் நிறுவனத்தின் நலனே பெரிது என அமைச்சர் உதயநிதி கூறியிருப்பது சரியல்ல.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே கீழ்முகம் கிராமத்தில் புனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறிய தமிழக அரசும் இத்தேர்வை திணித்த மத்திய அரசும்தான் இதற்கு காரணம்.
சிதம்பரம் நடராசர் கோவில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விடுதலை சிறுத்தைகள் நிர்வாகியை தாக்கியது கண்டிக்கதக்கது. கோவில்களில் தீட்ஷிதர்கள் கிரிக்கெட் விளையாட தனி மைதானத்தை அரசு அமைத்து கொடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






