என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கண்ணாடி உடைப்பு"

    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக ஒரு அரசு பஸ் சென்றது.
    • முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சின் உள்ளே இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. பஸ்சை தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த லிங்கப்பண்டி (வயது 38) என்பவர் ஓட்டிச்சென்றார். இதில் சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் மூன்றாம் மைல் அருகே சென்றபோது மர்ம நபர் ஒருவர் பஸ் மீது கற்களை வீசி தாக்கினார்.

    இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சின் உள்ளே இருந்த பயணிகளில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து டிரைவர் லிங்கபாண்டி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கங்கைநாதபாண்டியன், சிவக்குமார், கதிரேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆறுமுகநேரியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாடசாமி ( 40) என்பவர் குடிபோதையில் பஸ் மீது கற்களை வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • லட்சுமியை பஸ்சின் டிரைவர் அதே பஸ்சில் ஏற்றிக்கொணடு முனிர்பத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • பணத்தை லட்சுமி அபராதமாக செலுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டு சென்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் இல்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கொப்பல் மாவட்டம், ஹுலிகி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த கொப்பல்-ஹோசப்பேட்டை இடையே செல்லும் அதிவேக பஸ் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. நீண்டநேரம் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த லட்சுமி அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதைத்தொடர்ந்து லட்சுமியை பஸ்சின் டிரைவர் அதே பஸ்சில் ஏற்றிக்கொணடு முனிர்பத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு போலீசாரிடம் லட்சுமி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை லட்சுமி அபராதமாக செலுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டு சென்றார்.

    • சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது.
    • ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி புதுச்சேரி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. மாமல்லபுரம் அடுத்த புலிக்குகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது திருவான்மியூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் குடும்பத்துடன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதுவது போல் சென்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கதிரேசன் மாமல்லபுரத்தில் பஸ்சை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி நொறுக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது.
    • டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    திருப்பூர்:

    கோவை - திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. தொண்டாமுத்தூரை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் (வயது 32) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    திருப்பூர் அவிநாசி பைபாஸ் சாலையில் செல்லும் போது, காற்று பலமாக வீசியதால் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. டிரைவர் சுரேந்திரன் மீது கண்ணாடி துண்டுகள் பட்டு தலை, கை மற்றும் கால் போன்ற பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது.

    சுதாரித்துக்கொண்ட சுரேந்திரன், பயணிகளின் உயிரை பாதுகாக்க தனக்கு ஏற்பட்ட படுகாயங்களை பொருட்படுத்தாமல் பஸ்சை லாவகமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார். இதையடுத்து அவரை பாராட்டிய பயணிகள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் பஸ்சில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் கண்ணாடிகள் நொறுங்கி விழும் காட்சிகளும், டிரைவர் சுரேந்திரன் ரத்தக்காயத்துடன் பஸ்சை இயக்கி, பயணிகளை காப்பாற்றிய காட்சிகளும் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது.
    • அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது.

    அம்மாபேட்டை:

    திருப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள அஞ்சனூர் என்ற பகுதியை சேர்ந்த சக்திவேல் (47) என்பவர் ஓட்டினார். பஸ்சில் கண்டக்டராக அன்பழகன் என்பவர் பணியாற்றினார்.

    பஸ் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அருகே காலை 9 மணி அளவில் சென்றது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். ஆனால் பஸ் டிரைவர் சக்திவேல் வழி விடாமல் சென்றார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் பஸ்சை முந்தி சென்று நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது. அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து பஸ் மீது கல்வீசிய வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    ×