search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்மாபேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் முந்தி செல்ல வழி விடாததால் ஆத்திரம்
    X
    கல்வீசி உடைக்கப்பட்ட அரசு பஸ் கண்ணாடி.

    அம்மாபேட்டை அருகே அரசு பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்த வாலிபர் முந்தி செல்ல வழி விடாததால் ஆத்திரம்

    • பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது.
    • அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது.

    அம்மாபேட்டை:

    திருப்பூரில் இருந்து தர்மபுரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அருகே உள்ள அஞ்சனூர் என்ற பகுதியை சேர்ந்த சக்திவேல் (47) என்பவர் ஓட்டினார். பஸ்சில் கண்டக்டராக அன்பழகன் என்பவர் பணியாற்றினார்.

    பஸ் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை அருகே காலை 9 மணி அளவில் சென்றது. அப்போது பஸ்சை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். ஆனால் பஸ் டிரைவர் சக்திவேல் வழி விடாமல் சென்றார்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர் பஸ்சை முந்தி சென்று நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்நிலையில் பஸ் தொடர்ந்து நெரிஞ்சிப்பேட்டை அடுத்த மூலக்கடை என்ற பகுதியில் சென்றது. அப்போது அதே நபர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இதில் கண்ணாடி உடைந்து தொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதையடுத்து பஸ் மீது கல்வீசிய வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×