என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695-க்கும், ஒரு பவுன் ரூ.53 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. அதே மாதம் 24-ந் தேதி ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.56 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது.

    தங்கம் விலையின் புதிய உச்சமாக கடந்த 19-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.7 ஆயிரத்து 280-க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ.58 ஆயிரத்து 240 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 அதிரடியாக உயர்ந்தது.

    இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    27-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    26-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,880

    25-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,360

    24-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280

    23-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    27-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    26-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    25-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    24-10-2024- ஒரு கிராம் ரூ. 110

    23-10-2024- ஒரு கிராம் ரூ. 112

    • இளம் வயதிலேயே போர்க்களத்திற்கு சென்ற பாண்டிய மன்னன் குறித்து குட்டிக்கதை.
    • சேர, சோழ நாட்டைச் சேர்ந்த குறுமன்னர்கள் மொத்தவாக படையெடுத்து வந்த நிலையில், வெற்றி பெற்ற மன்னர் ஆவார்.

    தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசும்போது வழக்கும்போல் ஒரு குட்டி கதை சொன்னார்.

    தனது குட்டிக் கதையைில் "ஒரு நாட்டுல ஒரு பெரிய போர் வந்துச்சாம். அப்போ அந்த நாட்டுல பவர் FULL ஆன தலைமை இல்லாம போனதால ஒரு பச்சப் புள்ள கைல தான் அந்த பொறுப்பு இருந்துச்சாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரிய தலைங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டாங்களாம். அந்த சின்னப் பையன் படைய நடத்துற பொறுப்ப ஏத்துக்கிட்டு போர்க்களம் போலாம்னு சொன்னானாம்.

    அப்போது, அந்த பெருந்தலைங்க எல்லாம் நீயே சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம் பவர் FULL ஆன பெரிய எதிரிங்கலாம் இருப்பாங்க களத்துல அவங்கள சந்திக்கறதுலாம் சாதாரண விஷயம் இல்லப்பா சொன்னா கேளு இது விளையாட்டு இல்ல போர்னா படைய நடத்தனும் அத்தனை எதிரிங்களையும் சமாளிக்கணும்... தாக்கு பிடிக்கணும்.. உனக்கு யாரும் கூட்டோ துணையோ இல்லாம எப்படி பா போர நடத்துவ எப்படி ஜெயிப்பன்னு எல்லாரும் கேட்டப்போ..

    எந்த பதிலும் சொல்லாம போருக்கு தனியா தன் படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பய என்ன செஞ்சான்னு.. சங்க இலக்கியத்துல சொல்லியிருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க இல்லன்னா..படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க" என முடித்தார்.

    குட்டிக் கதையில் விஜயன் சொன்ன அந்த மன்னர் யார்? என்ற கேள்வி தெரியாதவர்களின் எழுந்தது. மற்றர்வர்களிடம் ஏன் கேட்க வேண்டும். நம்மிடம்தான் கூகுள் இருக்கிறதே... என நெட்டிசன்கள் இணைய தளத்தில் மன்னர் பெயரை தேட ஆரம்பித்தினர்.

    அந்த மன்னர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவார். தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர் ஆவார்.

    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவர், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவர். இவர் போருக்குச் செல்லும்போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் கழுத்தில் இருந்து கழற்றவில்லை என்பதை வைத்து, இவர் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றார் எனலாம்.

    நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன், ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர்.

    இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் தோற்கடித்தார் என்பது வரலாறு.

    பகை மன்னர்கள் பாண்டியன் இளம் பருவத்தினன் என்பதை எண்ணினார்களேயன்றிப் படையை இயக்கிய தலைவர்கள் பல போரில் வெற்றி பெற்றுக் கைதேர்ந்தவர்கள் என்பதை எண்ணவில்லை.

    பாண்டி நாட்டின் எல்லையில் சிறிது நேரந்தான் போர் நடைபெற்றது. பகைப்படை மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்தது. சோழ நாட்டின் எல்லைக்குள் போர் நடக்கத் தொடங்கியது. மெல்ல மெல்ல நகர்ந்தது பகைப்படை. பின்பு வேகமாகவும் சென்றது. கடைசியில் தலையாலங்கானம் என்னும் இடத்தில் நின்று போர் செய்தது.

    அதுவரையில் வராமல் தாமதமான பிற படைகளும் வந்து சேர்ந்தன. தன்னுடைய எல்லைக்குள்ளே பாண்டியன் படை வந்து விட்டமையால் எளிதில் சுற்றி வளைத்து விடலாம் என்று நம்பினான் சோழன். மற்றவர்களுக்கும் சொல்லி ஊக்கம் அளித்தான்.

    போர் கடுமையாக மூண்டது. இரு பெரு வேந்தர்களும், மற்ற குறுநில மன்னர்களும் தம் தம் படைக்குத் தலைவராக நின்று சண்டையிட்டனர். பாண்டி நாட்டுப் படைக்கு நெடுஞ்செழியனே தலைமை வகித்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு படைவீரர் அத்தனை பேரும் ஊக்கமுற்றனர்.

    வீட்டில் இனிதாகப் பொழுது போக்கவேண்டிய இளம் பருவத்தினனாகிய இவனே நேரில் போர்க்களத்தில் வந்து அஞ்சாமல் நின்று போர் செய்யும்போது, இவனுக்காக உயிரையும் வழங்கி வெற்றி வாங்கித் தரவேண்டியது நம் கடமை' என்ற உணர்ச்சி அவர்களுக்கு மேலோங்கி நின்றது.

    முதல் போரில் சோழனது படை கை விஞ்சியது போலத் தோன்றியது. ஆயினும் தொடர்ந்து தாக்குவதற்கு அப்படைக்குத் துணைப்படை உதவி செய்யவில்லை. இருப்பினும் வெற்றி தோல்வி யார் பங்கில் என்று சொல்ல முடியாத நிலையே நீடித்தது. சோழன் இரண்டு காரியங்களைச் செய்துவந்தான். தன் படைக்குத் தலைமை பூண்டு போர் செய்ததோடு மற்ற நண்பர்களையும் அவ்வப்போது ஊக்கிவித்து வந்தான்.

    அந்தப் போரில் அவர்களுக்குத் தன்னளவு ஊற்றம் இல்லையென்ற எண்ணம் அவன் உள்ளத்தினூடே இருப்பதை இந்தச் செயலால் அவன் வெளிப்படுத்திக் கொண்டான். குறு மன்னர்கள் படைகள் பாண்டியன் படையை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இழந்தன.

    சமயம் பார்த்து நெடுஞ்செழியன் சிங்கவேறு போல் பாய்ந்தான். இது கன்னிப் போராக இருப்பினும் அவனுடைய போர்த் திறமை கணத்துக்குக் கணம் நண்பர்களுக்கு வியப்பையும் பகைவர்களுக்கு அச்சத்தையும் உண்டாக்கியது. மெல்ல மெல்லப் பாண்டிப்படை முன்னேறியது. குறும்படையில் சிலர் படையை விட்டே ஓடிப்போயினர். அது கண்ட மற்றவர்களுக்கும் சோர்வு உண்டாயிற்று.

    எருமையூரன் படைவீரர்களுக்குத்தான் முதல் முதலில் சோர்வு உண்டாயிற்று. "நம்முடைய ஊர் எங்கே? இந்த இடம் எங்கே? பாண்டியனுக்கும் நமக்கும் என்ன பகை? சோழனுக்கும் நமக்கும் என்ன உறவு? நம்முடைய தலைவர் பைத்தியக்காரத் தனமாக இந்தச் சோழன் பேச்சைக் கேட்டு ஏமாந்து போய்விட்டார். பாண்டியன் தோல்வியுற்றாலும் அவன் நாட்டை நம்மால் ஆள முடியுமா? சோழனுக்குத்தானே அது காணியாகும்? பல நாடுகள் இடையிட்டு நாம் வாழ்கிறோம். சில பொருளை அள்ளிக் கொண்டு போகலாம். அவை எத்தனை நாளைக்கு உதவும்?' இப்படி அவர்களுக்குள் இருந்த தன்னம்பிக்கை தளர்ந்தது. இந்த எண்ணம் புலிகடிமால் படையில் உள்ளவர்களுக்கும் அடுத்தபடி தோன்றியது. தமக்கு நன்மை ஏதும் இல்லை என்ற எண்ணம் உண்டாகி விட்டால் பிறகு போரில் எப்படி ஊக்கம் தொடர்ந்து இருக்க முடியும்?

    அங்கங்கே பகைப்படைகளில் உள்ள வீரர்கள் பின் வாங்கினர். சோழன் மட்டும் துணிவோடு நின்றான். சேரனுக்குக்கூட ஊக்கம் குறைந்துவிட்டது. சோழப் பெரும்படையே நெடுநேரம் பாண்டியன் படையின் முன் நின்று சண்டையிட்டது. கடைசியில் அதுவும் பின் வாங்கியது.

    பாண்டிப் படையின் ஆற்றலும் ஒற்றுமையும், நெடுஞ்செழியனது வீரமும் அன்பும் வெற்றியை உண்டாக்கின. அச்செழியன் கன்னிப்போரில் வெற்றிப் பெற்றான். எங்கே பார்த்தாலும் வெற்றி ஆரவாரந்தான். சோழன் அடிபணிந்தான். சேரன் ஓடிப்போனான். மற்றவர்களும் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டார்கள். தலையாலங்கானத்துப் பெரும்போர் என்று அப்போரை வழங்குவர். வென்றவரும் அதை மறக்காமல் பாராட்டினார்கள்; தோற்றவர்களும் மறக்கவில்லை.

    • திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள்.
    • திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    இந்த நாட்டை பாழ்படுத்தும் பிளவுவாத அரசியல் செய்வோர்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை ரீதியான முதல் எதிரி. திராவிட மாடல் ஆட்சி என்று பெரியார், அண்ணா பெயரை வைத்து தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கும் ஒரு குடும்ப சுயநலக்கூட்டம் தான் அடுத்த எதிரி,

    அரசியல் எதிரி. கொள்கை, கோட்பாடு அளவில் தேசியத்தையும், திராவிடத்தையும் பிரித்துபார்க்க போவதில்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள். நாம் எந்த குறிப்பிட்ட அடையாளத்தின்கீழும் நம்மை சுருக்கி கொள்ளாமல், மதச்சார்பற்ற சமூக நீதிகொள்கைகளை, நமது கொள்கை அடையாளமாக முன்னிறுத்தி செயல்பட போகிறோம் என்று கூறி இருந்தார்.

    இதுதொடர்பாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறுகையில்,

    * திமுக பற்றி இதுதான் எங்கள் முதல் எதிரி என்று பேசி உள்ளார். நாங்கள் அதை வரவேற்கிறோம்.

    * கொள்கை நிலைப்பாடை வெளிப்படுத்திய முதல் பேச்சிலேயே, போலி திராவிட மாடலை எதிர்த்து குரல் கொடுத்தது மிக முக்கியம் என்று நினைக்கிறோம்.

    * எங்களை பொறுத்தவரை அதிமுகவுடன் உடன்பாடில்லாத கொள்கை எதுவும் இல்லை. செயல்பாட்டுக்கு கொண்டு வராதது திமுகவின் பிரச்சனை.

    * அவர் என்ன நிலைப்பாடு எடுத்து இருக்கிறாரோ நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று கூறினார்.

    • பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய்,

    பெரியாருக்கு பிறகு எங்கள் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். நேர்மையான நிர்வாக செயல்பாட்டிற்கு வழி வகுத்தவர், அவரை எங்களுக்கு வழிகாட்டியாக ஏற்கிறோம். அம்பேத்கர் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவோர் நடுங்குவார்கள், அவரும் எங்கள் கொள்கை வழிகாட்டி. வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் அவர்களையும் எங்கள் வழிக்காட்டியாக ஏற்கிறோம். பெண் தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக முன்னிறுத்தும் முதல் கட்சி நாம்தான் என்று பேசினார்.

    இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,

    * இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    * பா.ஜ.க.வே காமராஜரை கொண்டாடுகிறது.

    * காமராஜரை சொந்தம் கொண்டாட எங்களுக்கே உரிமை உள்ளது என்று கூறினார்.

    • உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான்.
    • அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகள் தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும், எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மாடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது.

    உழைப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தான். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் உலகத்திற்கே வழிகாட்டுகின்ற திட்டம். தமிழ்நாடு மக்களின் இதயங்களில் அவருக்கென்று தனி இடம் உள்ளது. உழைப்பின் மற்றொரு வடிவமாக திகழ்ந்து வருபவர் தான் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்களிடையே அவர் உழைப்புக்கும் மரியாதை உள்ளது. இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய ஒன்று அரசியல் அது போக போக தெரியும்.

    இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம், பி டீம் பார்த்துள்ளோம். இது பாஜகவுடைய சி டீம். ஆளுநரை எதிர்த்து பேசினால் தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் ஏ டீம் பி டீம் அல்ல பா.ஜ.க.வின் சி டீம்.

    அவர் யாருடைய ஏ டீம், பி டீம் அல்ல என்று விஜய் கூறியுள்ளார். அவருக்கே தெரியும் அவர் சி டீம் என்று. ஆட்சிக்கு வரட்டும், அப்போது பாத்துக்கலாம். மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும். பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும்.

    அதற்கு பிறகு தான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.

    அ.தி.மு.க. கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அ.தி.மு.க.வை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அங்கிருக்க தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பா.ஜ.க.வுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அ.தி.மு.க. தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அ.தி.மு.க.வைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011-21 பற்றி தான் பேச முடியுமே தவிர 21-26 ஐ பற்றி பேசுவதற்கு யாராலும் முடியாது. எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை.

    பழுத்த பழம் தான் கல்லடி படும். தி.மு.க.வை பற்றி தாக்கி பேசினால் தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டில் அரசியலில் அண்ணா, பெரியார், கலைஞர் அதேபோல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக்கூடியவர் எங்களது தலைவர் மு.க. ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது.

    183 படித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தி.மு.க.வின் கொள்கைகளை பரப்புவதற்காக சிறந்த பேச்சாளர்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் அவர்கள் மூலமாக அடுத்த கட்ட பிரசாரத்தை திமுக இளைஞரிடத்தில் கொண்டு செல்லும்.

    தி.மு.க. நினைத்தால் 5 மடங்கு கூட்டத்தை கூட கூட்ட முடியும் எங்களின் இளைஞர் சக்தி அதிகரித்துள்ளது குறையவில்லை. இன்று இளைஞர்கள் நம்பி வரும் இயக்கமாக திமுக தான் இருக்கிறது. நேற்று நடந்த மாநாடு எங்களைப் பொறுத்தவரை சினிமா குறித்தான மாநாடு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்போ திருப்பி ஆரம்பிச்சாட்டங்க, தப்பே இல்ல.
    • பழைய முகத்தை பார்த்து எவ்வளவு நாள்தான் டைம் பாஸ் பண்றது.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று விழுப்புரம் வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் த.வெ.க. கொடியை ஏற்றி வைத்து கட்சியின் கொள்கைகளை விஜய் வெளியிட்டார். அப்போது தி.மு.க.தான் அரசியில் எதிரி என்பதை தெளிவிப்படுத்தினார்.

    இதற்கிடையே மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழாவில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். அப்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியது பற்றி அவர் கூறியதாவது:-

    இப்போ திருப்பி ஆரம்பிச்சாட்டங்க, தப்பே இல்ல. புதுசு புதுசா வரட்டும். நமக்கும் போர் அடிக்கிது. பழைய முகத்தை பார்த்து எவ்வளவு நாள்தான் டைம் பாஸ் பண்றது. நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகணும்ல்ல. நாம் பார்க்காதவர்களா?... எத்தனை முகங்களை பார்த்திருக்கிறோம். அத்தனை முகங்களையும் பார்த்து, மக்கள் அனைவரின் மனதை பிடித்த ஒரே கட்சி என்றால் அது திமுக... திமுக.. திமுக...தான். தொடர்ந்து மக்கள் சேவை செய்வதனால் மக்களை நம்மை விரும்பிகிறார்கள்.

    இவ்வாறு தயாநிதி மாறன் தெரிவித்தார்.

    • விஜய் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப்போகவில்லை.
    • நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என சீமான் தெரிவித்தார்

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    விஜய் என்னை விமர்சனம் செய்கிறார் என ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?

    அவரின் கொள்கை கோட்பாடு எங்களின் கொள்கையோடு ஒத்துப்போகவில்லை.

    நான் கூறுவது என் நீண்ட கால இன வரலாறு. இங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன என்பது.

    திராவிட கொள்கைக்கு மாற்றாக வந்தவர்கள் நாங்கள். தமிழ் நேயர்கள்.

    கட்சி ஆரம்பித்து அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என நான் வரவில்லை. படம் எடுத்து பிழைக்க வந்தவன்.

    வரலாறு, காலம் எனக்கு இந்தப் பணியை கொடுத்தது. காரணம் என் இனத்தின் மரணம்.

    எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். அதை செய்கிறேன்.

    திராவிடமும், தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் சொன்னால், அது எங்களது கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று கிடையாது. அது வேறு. இது வேறு.

    இது எனது நாடு. எனது தேசம். இங்கு வாழும் மக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல்.

    விஜய் பேச்சில் எனக்கு உடன்பாடு இல்லை. பெரியாரின் கொள்கைகளை முன்னெடுப்பேன் என்ற விஜய் பேச்சிலும் ஒத்துப் போகவில்லை.

    என்.டி.ராமாராவ், தெலுங்கு தேசம் கட்சி என பெயர் வைத்தபோது யாரும் எதிர்த்துப் பேசவில்லை.

    நாங்கள் தமிழ் தேசம்பெயர் வைத்த போது பாசிசம், பிரிவினைவாதம் என சொல்கிறீர்கள். இது ஏற்புடையது அல்ல.

    என் பயணம் என் கால்களை நம்பித்தான்; யார் காலையும் நம்பி பயணிக்காதவன். நான் மிகுந்த தெளிவான பயணத்தை கொண்டவன். நான் தனித்துப் போட்டியிடுவேன் என ஏற்கனவே சொல்லிவிட்டேன்; நாங்கள் யாரோடும் கூட்டணி இல்லை என தெரிவித்தார்.

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற எங்கள் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும் தங்களது தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும். 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விசிக தங்களின் நீண்ட நாள் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை மீண்டும் கிளறியது. குறிப்பாக விசிக  துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா இது குறித்து பேசியபோது அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு அடங்கியது. இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது.

    அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் திரு. விஜய். அவருக்கு வாழ்த்துகள். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என்று தெரிவித்துள்ளார். 

    • நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும்
    • தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    மேலும்  தங்களை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசினார்.

    இந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஸ்ணசாமியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் அறிவித்துள்ளதை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    வலுவான கொள்கை கோட்பாடுகள், அவற்றை அடைவதற்கான போராட்ட அனுபவங்கள் ஏதுமின்றி திரையுலம், விளையாட்டு எனப் பிற துறைகளில் பெறக்கூடிய புகழ், விளம்பரம் ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு அண்மைக்காலமாக பலரும் அரசியலுக்குள் நுழைகிறார்கள்.

    தமிழகத்தை பொறுத்தமட்டிலும் திரை உலக புகழே பலரையும் ஆட்சி அதிகாரத்தில் அமர  வைத்துள்ளது. கொள்கை கோட்பாடுகளை முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் நடைமுறையில் பெரும் தோல்வியுற்று விட்டனர். மேலும், அவர்களே தமிழ்ச் சமூகத்தின் பிரதான எதிரிகளாக பரிணமித்துவிட்ட நிலையில் விரும்பியும் விரும்பாமலும் புதிய சூழல்களை ஏற்றுக் கொள்ளும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் துவங்கப்பட் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டை விஜய் இன்று வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.! தமிழ்நாட்டில் டரு 75 வருடத்தில் வந்த அரசியல் கட்சியும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவும் இல்லை; அதற்கான பல சூழல்கள் ஏற்பட்டபொழுதும் ஆட்சியில் எந்த கட்சிக்கும் பங்கு அளிக்கவுமில்லை. ஆனால், தம்பி விஜய் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்துள்ளார்.

    புதிய தமிழகம் கட்சி துவங்கப்பெற்ற நான் முதல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மட்டும் சொல்லாமல் ஆட்சியிலும் அதிகாரந்திலும் பங்கு அளிக்கும் கூட்டணி ஆட்சி முறையே தமிழகத்தில் நிலவும் அனைத்து அவலங்களுக்கும் தீர்வு என்பதை வலியுறுத்தி வருகிறது. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே அளவு மாற்றத்தையும், குண மாற்றத்தையும் நிகழ்த்தும்.! அதுவே தமிழக மக்களுக்கு புதிய விடியலை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார். 

    • நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.
    • தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்கவில்லை.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

    அப்போது கூட்டணி வைப்பது குறித்தும் விஷயங்களைப் பேசினார். முதலாவதாக பாஜக, திமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளை மறைமுகமாகத் தாக்கி பேசிய அவர் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்ற வரவில்லை என்று தெரிவித்தார்.

    அதன்பின் பேசிய அவர், நம்மையும் நமது செயல்பாட்டையும் பார்த்து சில பேர் வரலாம் இல்லையா? அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அப்படி வருபவர்களை அரவணைக்க வேண்டும் இல்லையா? நமக்கு எப்போதும் நம்மை நம்பி வருபவர்களை அரவணைத்துத்தான் பழக்கம்.

     

    அதனால் நம்மை நம்பி நம்மோடு களம் காண வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் 2026ம் ஆண்டு ஒரு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு, நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று பேசியுள்ளார்.

    தனது பேச்சில் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சிக்காததால் அந்த கட்சிகளுடன் அடுத்த தேர்தலில் தவெக கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயம் சமீபத்தில் அரசியல் களத்தில் பூதாகரமாக வெடித்தது.

    திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் போர்க்கொடி தூக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு என விஜய் கூறியுள்ளது 2026 தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக அமையும். 

    • சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது.
    • 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

    நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற்று முடிந்தது. மாநாடு முடிந்த நிலையில், கட்சி தொண்டர்கள் ஒரே நேரத்தில் மாநாட்டு திடலை விட்டு வெளியேற முற்பட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேன்க்-கள் மற்றும் இருக்கைகளை அடித்து உடைத்தனர்.

    மேலும், பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னதாக த.வெ.க. மாநாட்டில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    மாநாட்டில் மயக்கமுற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சார்லஸ் என்பவர் உயிரிழந்தார். இவர் தவிர மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் தகவல். ஏற்கனவே சாலை விபத்தில் திருச்சியை சேர்ந்த த.வெ.க நிர்வாகிகள் 2 பேர், சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க தொண்டர் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
    • தனியாக படையோடு பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் சென்றான்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.

    பேச்சுக்கிடையில் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் விஜய் கூறியுள்ளார். வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் கூறும் குட்டிக் கதை அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் தற்போதும் அந்த பார்முலாவை பயன்படுத்தியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,

    ஒரு நாட்டில் பெரிய போர் ஒன்று வந்தது. அப்போது நாட்டை வழிநடத்தும் சக்திவாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனால் நாட்டில் இருந்த பெரிய ஆட்களெல்லாம் மிகவும் பயத்தில் இருந்தனர்.

     

    ஆனால் அந்த சிறுவன் பயமில்லாமல் படையை நடத்தும் பொறுப்பை ஏற்று போர்க்களம் போகலாம் என்று சொன்னான். அப்போது அங்கு இருந்த பெரிய மனிதர்கள், நீ சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம், சக்திவாய்ந்த பெரிய எதிரிகள் இருப்பார்கள். அவர்களை களத்தில் எதிர்கொள்வது சாதரண விஷயம் இல்லை. இது விளையாட்டு விஷயம் இல்லை.

    அவர்களை எதிர்த்து எப்படி தனியாக படை நடத்த முடியும், எப்படி ஜெயிக்க முடியும் என்று எல்லாரும் கேட்டார்கள். எந்த பதிலும் சொல்லாமல் தனியாக படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்காங்க.. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க,  இல்லன்னா.. படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்று விஜய் கதையை முடித்தார்.

    சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை, புறநானூறு ஆகியவற்றில் கூறப்பட்ட பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையையே விஜய் இங்கு குறிப்பிடுகிறார். நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார்.

    தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்துப் போரில் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூற வருகிறார் என்று தெரிகிறது.

    ×