என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். 

    தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.
    • 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்.

    விவசாயியான பாஸ்கர் வரிச்சிகுடி கிராமத்தில் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ராஜமுடி சின்னார் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.

    மேலும் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு நெல் திருவிழா நடத்தி அதன் மூலம் விலை இல்லா விதைகள் வழங்கி வருகிறார்.

    இந்த நிலையில் அனைவரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வயலின் நடுவே 5 ஏக்கரில் அரிய வகை நெற்பயிரான ராஜமுடி நெல், சின்னார் 20 நெல் மற்றும் செங்கல்பட்டு சிறுமனி, சம்பா நெல் ரகத்தை சிவலிங்கம் மற்றும் இந்தியா வரைபடம் வடிவத்தில் பயிரிட்டுள்ளார்.

    அந்த நெற்பயிர்கள் அனைத்தும் தற்போது நன்றாக வளர்ந்துள்ளது. இது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

    • மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது.
    • மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான மரக்காணத்தில் பசுமாடு சினையாக இருந்தது.

    மாட்டின் கன்று இரு தலையுடன் இருந்ததால் கன்றை வெளியே தள்ள முடியாமல் சிரமப்பட்டது. மாட்டிற்கு டாக்டர் செல்வமுத்து சிகிச்சை அளித்தார்.

    ஆனால், கன்றை வெளியே எடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இறுதியாக, கன்று வெளியே எடுக்கப்பட்டது. சில மணி நேரம் உயிருடன் இருந்த கன்று மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.

    இதுகுறித்து கால்நடை டாக்டர் செல்வமுத்து கூறியதாவது:-

    கருவுற்றிருக்கும்போது கரு சரியாக பிளவுபடாததால் அரிதான இரட்டை வடிவம் உருவாகியுள்ளது.

    இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் மாடு சினைப்பருவத்தில் இருக்கும்போதே அதை ஸ்கேன் செய்து பார்த்திருக்க வேண்டும். அப்போது தான் முன்கூட்டியே கண்டறிந்து அதை சரி செய்வதற்கான வேலையை பார்க்க முடியும்.

    இவ்வாறு டாக்டர் செல்வமுத்து கூறினார்.

    • கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
    • பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

    புதுச்சேரி: 

    வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி சென்னை மற்றும் புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 2நாட்களுக்கு தொடர்மழை மற்றும் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு புதுச்சேரி அரசு 2 நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை நிலையம் எச்சரிக்கை தொடர்ந்து. காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர் கிராம மீனவர்கள் சுமார் 12,000- க்கு மேற்பட்டோர் இன்று கடலுக்குச் செல்லவில்லை.

    ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் நேற்று மாலை அவசரமாக கரை திரும்பினார். மழையின் காரணமாக காரைக்காலில் உள்ள பெரும்பாலுமான தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது .ஒரு சில இடங்களில் சாக்கடைகள் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் சாலைகளில்தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் காரைக்கால் திருநள்ளார், நெடுங்காடு, சுரக்குடி , திருப்பட்டும் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    • புதுவையில் நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது.
    • கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி புதுவையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. இரவு 8 மணிக்கு மேல் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. இதனால் நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். மழையால் சாலையோர வியாபாரம் பாதிக்கப்பட்டது. நள்ளிரவு வரை மழை விட்டுவிட்டு பெய்தது. இன்று அதிகாலை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

    கனமழை காரணமாக புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது.
    • சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரி மாநிலத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அதேபோல், புதுச்சேரியை ஆளும் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக அரசு காரைக்காலை அனைத்து வகையிலும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறி ப்பாக சொல்லப்போ னால், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை காலத்தோடு செய்ய தவறிவிட்டது. மாணவ ர்களுக்கான ஒரு ரூபாய் பஸ் வசதி முற்றிலும் கிடையாது.

    சீருடை, நோட்டு, புத்தகம் வழங்கும் பணியும் இதுவரை முழுமைபெறமால் உள்ளது. நகர் மற்றும் கிராமப்புற சாலைகள் போக்கு வரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. முதல் கட்டமாக, புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அலட்சியப்போக்கை கண்டித்து, காரைக்காலில், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரமோகன் தலைமையில் ஓரிரு நாளில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது, கல்வித்துறை அலுவலகத்தை காங்கிரஸ் கட்சி, ஒத்த கருத்துடைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

    • காரைக்கால் திருப்பட்டினத்தில் பெட்டிக்கடையில் பதுக்கிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் கெம்பிளாஸ் ட்தொழிற்சாலை பகுதியில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, திரு ப்பட்டினம் போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த செந்தில்குமார்(வயது37) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 140 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு சேத்தங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் நா ராய ணமூர்த்தி(வயது57). இவர், தனக்கு சொந்தமான வயல் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச்சேர்ந்த ராஜே ந்திரன்(48) என்பவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரா ஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிலத்தில் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.

    விபரம் அறிந்த நாராயணமூர்த்தி, வயலுக்கு சென்று தட்டி கேட்டபோது, வயலில் கிடந்த குச்சி ஒன்றால் ராஜேந்திரன் நாராய ணமூர்த்தியை தாக்கி யுள்ளார். தொடர்ந்து, ராஜேந்திரனின் அண்ணன் சந்திரசேகரர்(50), அவரது மகன் தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து நாராயணமூர்தியை தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நாராயணமூர்த்தி, திருநள்ளாறு தேனூர் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்ப த்திரியில் சேர்கப்ப ட்டார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள்.
    • நிஷாந்தி செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை.

    புதுச்சேரி:

    புதுவையில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ரூ.1 லட்சத்துக்கும் குறைவான தொகை மோசடி புகார்களை சட்டம்-ஒழுங்கு போலீசாரே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மோசடி புகார்களை அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் வங்கியில் கடன் பெற்று தருவதாக மேலும் 2 பெண்களிடம் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    கிருமாம்பாக்கம் அருகே மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் ஞானசவுந்தரி (வயது30). இவருக்கு கடந்த ஜனவரி மாதம் செல்போனில் மெசேஜ் வந்தது. அதில் தனியார் வங்கியில் இருந்து பெர்சனல் லோன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதன்பிறகு குறிப்பிடப்பட்ட செல்போன் நம்பரில் ஞானசவுந்தரி தொடர்பு கொண்டபோது அதில் பேசிய தீபா என்ற பெண் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு ரூ.5 ஆயிரத்து 750 செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

    அதன்படி ஞானசவுந்தரி அந்த பணத்தை கூகுல் பே மூலம் அனுப்பி வைத்தார். தொடர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் பணம் செலுத்தும்படி கூறியதின் பேரில் ஞானசவுந்தரி ரூ.16 ஆயிரத்து 500, ரூ.15 ஆயிரம், ரூ.20 ஆயிரம், 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 77 ஆயிரத்து 750 அனுப்பி வைத்தார்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தும்படி தொந்தரவு செய்து வந்தனர்.

    இதனால் ஞானசவுந்தரி தனக்கு லோன் வேண்டாம் செலுத்திய பணத்தை திரும்ப கொடுக்கும்படி கூறியபோது அவர்கள் பணத்தை தர மறுத்து விட்டனர். இதனால் பணம் மோசடி செய்யபட்டதை அறிந்த ஞானசவுந்தரி கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மற்றொரு சம்பவம்...

    பாகூர் காலனி தேசமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி நிஷாந்தி. இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் செல்போனில் பிரதமரின் திட்டத்தில் ஒரு சதவீத வட்டியில் 20 சதவீத மானியத்தில் பணம் கடன் வழங்குவதாக மெசேஜ் வந்தது.

    இதையடுத்து நிஷாந்தி மெசேஜ் வந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார்கள். நிதி நிறுவனத்தில் கடன் பெற வேண்டுமானால் முதலில் ரூ.5 ஆயிரத்து 850-ஐ செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    அன்படி நிஷாந்தி தனது வங்கி கணக்கில் இருந்து குகூல் பே மூலம் செலுத்தினார். மீண்டும் மறுமாதம் ரூ.28 ஆயிரத்து 288 செலுத்துமாறு கூறியதால் அந்த பணத்தையும் நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன்பிறகு நிஷாந்தியிடம் தொடர்புகொண்ட அவர்கள் தாங்கள் செலுத்திய பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்படும் என்று உறுதி கூறியதின் அடிப்படையில் பல கட்டமாக ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்து 300-ஐ நிஷாந்தி அனுப்பி வைத்தார்.

    அதன் பிறகு நிஷாந்தி அந்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுத்து பேசவில்லை. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த நிஷாந்தி இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரைக்காலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மாயமானார்.
    • தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி மெயின் சாலையில் வசிப்பவர் நாகராஜ். இவரது மனைவி கிருத்திகா. கிருத்திகாவின் தந்தை விஸ்வநாதன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதிலிருந்து கிருத்திகாவின் தாய் செல்வராணி(வயது72) மனநிலை பாதிக்கப்பட்டு தனக்கு தானே பேசி கொன்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால், தாய் செல்வராணியை கிருத்திகா தனது வீட்டுக்கு அழைத்துவந்து கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த 3ந் தேதி, வீட்டில் அமர்ந்திருந்த செல்வராணி மாயமாகிவிட்டதாக கூற ப்படுகிறது. உறவினர்கள் மற்றும் பல இட்டங்களில் தேடியும், செல்வரானி கிடை க்காததால், கிருத்திகா காரைக்கால் கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் , தாயை தேடி கண்டுபிடித்துதருமாறு புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராணியை தேடிவருகின்றனர்.

    • சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.
    • நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கருக்களாச்சேரி மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் மனோகரன்(வயது50). இவர் நேற்று காலை வழக்கம் போல், கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்டார். சவுக்கு தோப்பு அருகே, அடை யாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது. தொடர்ந்து, கிராம முக்கியஸ்தர்கள் சிலரை அழைத்து சடலத்தை பார்த்து அடையாளம் தெரிகிறதா? என விசாரித்துள்ளார்.

    அடையாளம் தெரியாத காரணத்தால், நிரவி காவல்நிலையத்தில் மனோகரன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரை பற்றி அடையாளம் யாருக்கேனும் தெரிந்தால், நிரவி போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    • புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சமீப காலமாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சென்னை ஆந்திரா-ஒடிசா மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டு புதுவையில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்று வருகிறார்கள். போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் 2 கண்டெய்னர் லாரி மற்றும் 2 இருசக்கர வாகனத்தில் புதுவைக்கு புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைதொடர்ந்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவைக்கு கண்டெய்னர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

    கண்டெய்னர் லாரி மற்றும் இரு சக்கர வாகனத்தில் 8 டன் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1 கோடியாகும். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×