search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "search task"

    • படகிலிருந்து தவறி விழுந்த காரைக்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார்.
    • மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்த, காரை க்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார். மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர். 

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டின ச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சிவா (28) என்பவ ருடன், நேற்று அதி காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தொடர்ந்து, மீனவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கினர். இதில் மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார். அதைத்தொடர்ந்து, சக மீனவர்கள் படகில் சென்று தேடியும் சிவா கிடைக்க வில்லை. இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் மாய மான சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    • நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
    • சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஆற்கவாடி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் மகன்கள் சரத்குமார் (வயது15), சிவக்குமார் (13). இதில் சரத்குமார், மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பும், சிவக்குமார் ஆற்கவாடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால், சரத்குமாரும், சிவக்குமாரும் அதே பகுதியில் உள்ள அவர்களது விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். இருவரும் கிணற்றில் இறங்கி குளித்து க்கொண்டிருந்தபோது திடீரென சிவக்குமார் தண்ணீரில் மூழ்கினான்.

    அதிர்ச்சியடைந்த சரத்குமார், வெளியே வந்து சிவக்குமார் தண்ணீரில் மூழ்கியது குறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தான். உடனே அவர்கள் கிணற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனைதேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவனை மீட்க முடிய வில்லை. இதுபற்றி அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் மோட்டார் மூலம்கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றனர். அப்போது சிவக்குமார் கிணற்றில் பிணமா கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×