search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில் கடல் சீற்றம்  கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன?  தேடும் பணி தீவிரம்
    X

    மாயமான சிவா

    காரைக்காலில் கடல் சீற்றம் கடலில் தவறி விழுந்த மீனவர் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

    • படகிலிருந்து தவறி விழுந்த காரைக்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார்.
    • மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்தபோது, கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்த, காரை க்கால் திரு.பட்டினம் மீனவர் மாயமானார். மீனவரை இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டின ச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் சிவா (28) என்பவ ருடன், நேற்று அதி காலை பட்டினச்சேரி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    காரைக்கால் அருகே கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக, பைபர் படகு கடலில் கவிழ்ந்தது. தொடர்ந்து, மீனவர்கள் 2 பேரும் கடலில் மூழ்கினர். இதில் மணிகண்டன் மட்டும் கடலில் நீந்தி கரை திரும்பி னார். ஆனால் சிவா மாயமானார். அதைத்தொடர்ந்து, சக மீனவர்கள் படகில் சென்று தேடியும் சிவா கிடைக்க வில்லை. இதனால் இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடலோர காவல்படை மற்றும் சக மீனவர்கள் மாய மான சிவாவை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    Next Story
    ×