என் மலர்
புதுச்சேரி
- தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
- தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாலசுப்பிரமணியன் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
- மோட்டார் சைக்கிள் மோதியதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் அபிராமி தெற்குத் தெருவைச்சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது37). இவர் எலக்டிரிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை, தனது மனைவி கர்பகாம்பாள் (32), 6 மாத கைகுழந்தை மோகனசெல்வராஜனுடன் மோட்டார் சைக்களில் சென்றார். காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது, எதிர் திசையில் நிரவி அக்கரை வட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கிய விக்னேஸ் (25), அவரது அண்ணன் எபிநேசர் (28) ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், 5 பேரும் தூக்கி எறியப்பட்டு காயம் அடைந்தனர். தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவர்களை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போக்குவரத்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவி உள்ளார்.
- பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் அப்பாவு நகரைச்சேர்ந்த பெண் வக்கீல் ஒருவர் காரைக்கால் மேடு ஸ்ரீ ரேனுகாதேவி அம்மன் கோவிலில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டுவிட்டு அன்று பகல், காரைக்கால் காமராஜர் சாைலைய ஒட்டிய தனியார் திருமணமண்டபத்தில் உணவு சாப்பிட்டு விட்டு கைகழுவிய போது, பின்னால் நின்றிருந்த, காரைக்கால் நகர் பகுதியைச்சேர்ந்த மோகன்(52) பெண் வக்கீலை பின்புறம் தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார். இது குறித்து, பெண் வக்கீல் காரைக்கால் நகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நெப்போலியன் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.
- மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி பாத்திமா பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 35). இவர் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஷிணி (33) காரைக்கால் ஒ.என்.சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது சொந்த ஊர் மன்னார்குடி வேலை காரணமாக காரைக்காலில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் நெப்போலியன் தனது காரில் நாகை மாவட்டத்திலுள்ள தனியார் கல்லூரிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு வீடு திரும்பினார். இதனையடுத்து காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்றது. இந்த லாரியை மயிலாடுதுறை மாவட்டவத்தை சேர்ந்த மணிவண்ணன் (36) ஓட்டிச் சென்றார்.
அப்போது காரைக்கால் நிரவி அருகே நெடுஞ்சாலையில் நெப்போலியன் காரில் வந்தபோது எதிரே மணிவண்ணன் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொருங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்கள் காருக்குள் சிக்கிகொண்ட நெப்போலியனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நெப்போலியனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து ேபாலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது.
- உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை நகர பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 28-ந் தேதி ஒரு திருமண வரவேற்பு நடந்தது.
இதில் சென்னையை சேர்ந்த மணமகனுக்கும், புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடந்தது. மணமகள் வீட்டார் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் தாம்பூல பையுடன் குவார்ட்டர் மதுபாட்டில் விநியோகம் செய்யப்பட்டது. திருமண வரவேற்பில் பங்கேற்ற பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மது விநியோகம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பொது இடத்தில் மது விநியோகம் செய்ததாக கலால்துறையினர் மணமகள் வீட்டார் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உப்பளம் வட்டார காங்கிரஸ் பிரமுகர் ராஜ்குமார் மது விநியோகம் செய்தது தெரியவந்தது. இதன்பேரில் மதுபானம் விற்ற கடை உரிமையாளர், மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு மொத்தமாக ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை கலால்துறை துணை ஆணையர் குமரன் எடுத்துள்ளார்.
- புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.
- மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர்.
தகவல் மையத்தில் திருப்பதி கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்தும், திருப்பதி லட்டு பிரசாதமும் பெற்று வந்தனர்.
பழமை வாய்ந்த இக்கோவில் வலுவிழந்ததால், பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை கோவில் கட்டுமான பணி துவங்கப்படவில்லை.
இதனால், ஏமாற்றத்திற்கு உள்ளான பக்தர்கள், மீண்டும் கோவிலை கட்ட வலியுறுத்தி தொடர் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதி சென்ற அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜ. மாநில செயலாளர் ரத்தினவேலு, விவசாய அணி தலைவர் புகழேந்தி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது புதுவை நேரு வீதியில், மீண்டும் திருப்பதி தேவஸ்தான கோவிலை கட்ட வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவினை பெற்றுக்கொண்ட சுப்பா ரெட்டி புதுவையில் மீண்டும் தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதுகுறித்து அசோக்பாபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-
புதுவை நேரு வீதியில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டி உடனடியாக என்ஜினீயர்களை அழைத்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தினார்.
மேலும் புதுவையில் பிரமாண்டமான திருப்பதி கோவில் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கூறினார்.
- ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பிராவிடை யான் ஆற்றுப் பாலத்தில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடுப்ப ட்டு இறந்து கிடந்தார். இந்த தகவல் குறித்து நாகை மாவட்டம் நாகூர் ரயில்வே ஸ்டேசன் மாஸ்டர் திரு.பட்டினத்தில் கேட்கீப்பராக தற்காலிகமாக வேலை பார்த்து வரும் ரத்தன்கு மாரை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதுபற்றி ரத்தன்குமார் திரு.பட்டினம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 65 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது.
- வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என கூறுகின்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நகராட்சியின் கட்டாய குப்பை வரி வசூலை, புதுச்சேரி முதல் அமைச்சரின் வாய்மொழி உத்தரவை ஏற்று, உடனே ரத்து செய்யவேண்டும். என, காரைக்கால் மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்ட பா.ஜ.க தலைவர் துரைசேனாதிபதி, பா.ஜ.க நிர்வாகிகளுடன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து ஓர் கோரிக்கை மனு வழங்கினர். பின்னர், மனு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-காரைக்கால் மாவட்ட நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி, கடை வரி வசூலிக்கும் போது, குப்பை வரி கட்டினால்தான் மேற்கண்ட வரிகளை பெற்றுக் கொள்வோம் என நகராட்சி ஊழியர்கள் அடம்பிடிப்பது கண்டனத்திற்குரியது. குப்பை வரி வசூல் குறித்து, புதுச்சேரி முதல் அமைச்சர் ரங்கசாமி, வாய்மொழியாக கூறிய குப்பை வரி ரத்து என்ற ஆணையை, காரைக்கால் நகராட்சி தொடர்ந்து ஏற்க மருத்து வருகிறது. மேலும், எங்களுக்கு அரசிடமிருந்து எழுத்துப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வரவில்லை. என்று, பொதுமக்களிடம் நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் விவாதம் செய்துவரும் அவலநிலை நீடித்து வருகிறது. எனவே, மேற்கண்ட பிரச்சனையில் கலெக்டர் உடனே தலையிட்டு, மாநில அரசிடமிருந்து முறையான ஆணை வரும் வரை, குப்பை வரியை தவிர்த்து, எனைய வரிகளை மட்டும் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது குறித்து, கலெக்டருக்கும், புதுச்சேரி அரசுக்கும் முறைப்படி மனு அனுப்பியுள்ளோம். என்றார்
- வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
- 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியில் பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தா னத்திற்கு உட்பட்ட, பழமை வாய்ந்த மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு தீமிதித் திருவிழா, கடந்த 26-ந் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் பூச்சொரிதலுடன் தொடங்கியது.
தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக அம்மனுக்கு மஞ்சள், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பி க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வண்ண மல ர்களால் அலங்கரிக்கப்பட்ட மழை மாரியம்மன் கோவிலில் பிரகாரத்தை வலம் தீமிதி திருவிழா நடைபெற்றது. அதில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் தொகுதி எம்.எல்.ஏ.நாக.தியாகராஜன், பொய்யான மூர்த்தி அய்யனார் தேவஸ்தான அறங்காவல் குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் அறங்காவல் குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
- ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகிறது.
2011-ல் என்.ஆர். காங்கிரஸ் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டது.
2014-15-ம் கல்வி ஆண்டு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடர்ந்து, 2018-19 வரையில் 5-ம் வகுப்புக்கும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தற்போது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 6-ம் வகுப்பில் இருந்து விரிவாக்கம் செய்ய புதுவை அரசு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அனைத்து அரசு பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.
இதன்படி வருகிற கல்வியாண்டில் 6 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலாகும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் புதுவை கல்வித்துறை இறங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 127 அரசு பள்ளிளுக்கும் தற்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாற அனுமதி கிடைத்துள்ளது.
தற்போது, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், விருப்பப் பாடம் என்ற நிலையில்தான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப் பாடங்கள் உள்ளன.
ஏற்கனவே தமிழக பாடத் திட்டத்தில் 11-ம் வகுப்பில் 6 பாடங்களை மாணவர்கள் படித்து வந்தனர். 4 முக்கிய பாடப் பிரிவுகளுடன் மொழிப் பாடங்களான ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். ஏனாமில் தெலுங்கும், மாகியில் மலையாளமும் படித்தனர்.
தற்போது சி.பி.எஸ்.இ. முறையின்படி 11-ம் வகுப்புக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தில் தமிழ் கட்டாய பாடம் என்று இல்லாமல் விருப்ப பாடம் என்ற அளவிலேயே இடம் பெற்றுள்ளது. இதோடு, அவசர கோலத்தில் அரசு சி.பி.எஸ்.இ. பாடத்தித்டத்தை அமல்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இதுபற்றி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
புதுச்சேரியில் விதிமுறைகளைத் தளர்த்தி அரசு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அனுமதி கோரினோம். மத்திய அரசும் விதிமுறைகளை தளர்த்திதான் 127 பள்ளிகளுக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் விருப்பப் பாடம்தான். கர்நாடகத்தில் கன்னட மொழி கட்டாய பாடமாக உள்ளதுபோல தமிழையும் கட்டாய பாடமாக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு மாற எவ்வளவு பேர் அனுமதி பெற்றனர் என்ற புள்ளிவிவரம் வரவில்லை. அவர்கள் தமிழக பாடத்திட்டத்தை தொடர்வது அவர்கள் விருப்பம்.
நீட், ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளில் வெல்ல இப்பாடத்திட்டம் அவசியம். எப்போது சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும் சங்கடம் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய ஆசிரியர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
- பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
- புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
- இதனால் அங்கும் ஜூன் 7-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
புதுச்சேரி
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (வியாழக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு வரும் 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதுபோல் புதுவையிலும் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறையை நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, துணை இயக்குனர் சிவகாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் யோசனை கூறப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்பேரில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் பள்ளிகள் ஜூன் மாதம் 7-ம் தேதி திறக்கப்படும். புதுவையில் உள்ள 127 அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பள்ளி திறக்கும் நாளில் புத்தகங்கள் வினியோகிக்கப்படும் என தெரிவித்தார்.






