என் மலர்
புதுச்சேரி
- சிவபெருமான் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்.
- காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம்:
சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால் பாரதியார் வீதியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித் திருவிழாவை, காரைக் காலில் உள்ள மும்முதத்த வர்களும் ஒரு மாதக்காலம் சகோதர ஒற்றுமையுடன் கொண்டாடிவருகின்றனர்.
இந்த ஆண்டு காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனித்திருவிழா, வருகிற 30-ந் தேதி மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கி, ஒரு மாதக்காலம் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் அம்மையார் கோவில் மணிமண்டபத்தில் பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவல் குழு தலைவர் வக்கில் வெற்றிசெல்வன், துணைத்தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 1-ந் தேதி காலை ஸ்ரீ புனிதவதி யார் தீர்த்தகரைக்கு வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, காரைக்கால் அம்மையா ருக்கும் பரமதத்த செட்டி யாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை 2-ந் தேதி காலை சிவபெருமான் பிச்சாண்ட வர் கோலத்தில் பவக்கால் சப்ரத்தில் வீதியுலா செல்லும் நிகச்சியும், அதுசமயம், பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை தீர்க்கும் வகையில், வீட்டு மாடி, வாசல்களிலிருந்து மாங்கனிகளை வாரி இறைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து மாலை காரைக்கால் அம்மையார் கோவிலை வந்தடையும் பிச்சாண்டவரை அம்மை யார் எதிர்கொண்டு வரவேற்று அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், ஜூலை 3-ந் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சியளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுவினர் செய்து வருகின்றனர்.
- பாக்யா திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார்.
- அல் ரசீது நிலைதடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பாக்யா (வயது 31). இவர் திருநள்ளாறில் உள்ள ஒரு தனியார் கோச்சிங் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மகள் சாய்னாவுடன் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டு, மொபட்டில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, கும்பகோணம் சுவாமி மலையை சேர்ந்த அல் ரசீது (20) என்பவர், தனது நண்பர் முகமது இஷாத் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது நிலை தடுமாறி முன்னே சென்று கொண்டிருந்த, பாக்கியாவின் மொபட் மீது மோதினார். இதில் பாக்கியா, அவரது மகள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களும் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்த வர்கள் 4 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பாக்யா வின் சகோதரர் பாக்கியராஜ் காரைக்கால் நகர போக்கு வரத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
- சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பஞ்சாட்சபுரம் கீழபுத்தரகம் பகுதியைச்சேர்ந்தவர் சுகுமார். இவரது மனைவி சுடர் (வயது30). இவர்களுக்கு சுஷ்மிதா (3), சுபிஷா (2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சுகுமார் சென்னையில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சுடர் கடந்த 2-ந் தேதி, வீட்டு அலமாரியில் இருந்த சில பொருட்களை எடுத்துகொண்டு வெளியில் சென்றதாக சுகுமாரின் தாய் பானு, சுகுமாருக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். முன்னதாக, உறவினர் திவாகர் என்பவர் சுடரிடம் தனியாக பேசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளர். தொடந்து, சுகுமார் காரைக்கால் திரும்பி, காரைக்கால் மாவட்டம் முழுவதும் தேடியும் சுடர் மற்றும் குழந்தைகள் இருப்பிடம் தெரியாததால், நெடுங்காடு போலீசில் சுகுமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சுடர் மற்றும் 2 குழந்தைகளை தேடிவருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் பாட்டி இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
- சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை சோலை நகர் பகுதியில் 17 வயது சிறுமி பாட்டியுடன் வசித்து வருகிறார். அவருக்கு பெற்றோர் கிடையாது.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜிப்மரில் காவலாளியாக வேலை செய்யும் ஸ்ரீதர் (வயது 37) என்பவர் அந்த சிறுமியிடம் பழகி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது பாட்டி வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ஸ்ரீதர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அந்த சிறுமியின் பாட்டி அவரிடம் விசாரணை நடத்தியபோது ஸ்ரீதரும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவா (47) என்பவரும் சிறுமியை தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தைகள் நலக்குழுவில் புகார் தெரிவித்தார். அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியை 2 பேரும் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தைகள் நலக்குழுவினர் முத்தியால் பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதர், சிவா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன.
- மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட த்தில், கடற்கரைச் சாலை மற்றும் அதனை சுற்றியு ள்ள போக்குவரத்து மிக்க முக்கிய சாலைகள் அனைத்தும் கால்நடைகள் உலா வும் சாலைகளாக மாறி வருகின்றன. மேலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்கள் வாகனங்கள் வரும்போது அதன் குறுக்கே அங்கும் இங்கும் செல்கின்றன. இத னால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், மற்றும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கு காரைக்கால் நகராட்சி நிர்வாகம் நடவடி க்கை எடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள், நாய்களை வேறு இடத்திற்கு அப்புறபடுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரைக்காலில் மாடுகளை சாலையில் திரியவிடக்கூடாது மீறினால், மாடுகள் பறிமுதல் செய்ய ப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, நகராட்சி ஆணையர் தெரிவித்தனர். ஆனாலும் மாடுக ளை சாலைகளில் விடுவது இன்னும் அரங்கேறி வருகி றது. இதனால் அவைகளை சாலையில் சுற்றிதிரிய விடும் உரிமையாளர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடு க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்ற னர்.
- மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி வேண்டி காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும்.
புதுச்சேரி:
மல்யுத்த வீராங்கனை களுக்கு நீதி வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. காரைக்கால் கடற்கரை சலையில் உள்ள மதகடி பகுதியில் நடைபெற்ற, இந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில், மல்யுத்த விராங்கணைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் யாராக இருப்பினும், அரசு அவர்களை உடனே பாரபட்சம் இன்றி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.
மேலும் இந்த போராட்டத்தில் நியாயம் கேட்டு போராடும் மல்யுத்த வீராங்கணைகள் மீதான வன்முறையை உடனே நிறுத்தவேண்டும். அவர்களுக்கு உரிய நியாயத்தை அரசு பெற்றுத்தரவேண்டும். நாட்டுக்காக பதக்கம் பெற்றுத்தந்த வீராங்கணைகளை மதித்து நடக்கவேண்டும். இந்த வழக்கின் மீது மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, மல்யுத்த வீராங்கணைகளுக்கு நீதி மற்றும் நியாயம் பெற்றுததரவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
புதுச்சோ
காரைக்கால் அருகே விழிதியூர் மதுபாரில், மது போதையில் லாரி டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது43). இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் வேலைகளை முடித்துவிட்டு, நண்பர்களுடன் காரைக்கால் அருகே உள்ள விழிதியூரில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு வெளியே சென்றபோது, அதே ஊர் தெற்குத்தெருவைச்சேர்ந்த சந்தோஷ்(24), முருகானந்தம்(23) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்கிளில் தர்மராஜ் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இதை தட்டிகேட்ட தர்மராஜை, 2 பேரும் ஆபசமாக திட்டி, அடித்து, உதைத்துள்ளனர். இதில் காயம் அடைந்த தர்மராஜை, அவரது நண்பர்கள் காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திருநள்ளாறு பத்தக்குடி கீழத்தெருவைச்சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், தனியார் செல்போன் டவர் கெம்பெனியில் எலக்ட்ரிக்கல் டெக்னிசி யனாக பணிபுரிந்து வரு கிறார். சம்பவத்தன்று காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள செல்போன் டவரில் சில வேலைகளை நண்பர் குருநாதன் என்பவரோடு செய்து கொண்டிருந்தார். அப்போது 5ஜீஅலை கற்றைக்கான காப்பர் கேபிள் அறுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடந்தார். அந்த கேபிளை யாரோ மர்ம நபர்கள் அறுத்து திருடி சென்றதை அவர் உறுதி செய்தார். அதன் மதிப்பு சுமார் ரூ.16 ஆயிரம் இருக்கும்.
இது குறித்து, நெடுஞ்செ ழியன் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நெடுஞ்செழியன் காரைக் கால் பஸ் நிலையம் அருகே நண்பரோடு நடந்து சென்ற போது, சந்தேகத்திற்கு இடமாக மூட்டை ஒன்றோடு சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அப்போது, மூட்டையில், திருடப்பட்ட செல்போன் டவர் கேபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நண்பர்க ளோடு சேர்ந்த மர்ம நபரை பிடித்து, காரைக் கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில், மயிலாடு துறை மாவட்டம் தரங்கம் பாடி மடப்புரம் காந்தி ரோட்டைச்சேர்ந்த மூர்த்தி (வயது32) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து, செல்போன் டவர் கேபிளை பறிமுதல் செய்தனர். இவர், ஏற்கெனவே, காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள அதே தனியார் செல்போன் டவரில் பேட்ரிகளை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது குறிபிடத்தக்கது.
- சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.
- 7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ரவிக்குமார் புதுவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரெயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. சென்னை, திருச்சியில் சிறப்பு யாத்திரை பயணங்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரெயில் வருகிற ஜூலை 1-ந் தேதி கொச்சுவேலியில் தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.
இந்த பயணம் ஐதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டும்.
11 பகல், 12 இரவுகள் ஸ்லீப்பர் வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.23 ஆயிரத்து 350, ஏ.சி. வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ.40 ஆயிரத்து 350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சார்தாம் யாத்திரைக்கு வருகிற 28-ந் தேதி சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு ரெயில் பயணம் செல்கிறது.
13 நாட்கள் பயணத்துக்கு ரூ.61 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காசி, கயா சிறப்பு யாத்திரைக்கு வருகிற 16-ந் தேதி திருச்சியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு கயா, காசி, அலகாபாசத் அயோத்தியா செல்கிறது.
7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தகவல்களை இணையதளத்தில் பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.
- பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
சேதராப்பட்டு:
புதுவை வில்லியனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது பெண் தனது குழந்தைகளுடன் வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி கொண்டிருந்தார். அவரது கணவர் காற்றுக்காக வீட்டின் வாசலில் தூங்கினார்.
நள்ளிரவில் அந்த பெண்ணின் பக்கத்தில் யாரோ வாலிபர் படுத்திருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே லைட்டை போட்டு பார்த்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் கோவிந்து படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட முயன்றார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணின் வாயை பொத்தி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
ஆனாலும் அதனை மீறி அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். உடனே வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதனை பார்த்ததும் கோவிந்து அந்த பெண்ணை கீழே பிடித்து தள்ளி விட்டு தப்பியோடி விட்டான்.
இதற்கிடையே அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மற்றொரு பெண் சிறிது நேரத்திற்கு முன்பு அதே வாலிபர் தனது வீட்டின் கதவை திறந்து தனது கையை பிடித்து இழுக்க முயன்றதாகவும், அவரை தள்ளிவிட்டுவிட்டு கதவை பூட்டிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இது கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அந்த வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த வாலிபர் சிக்கவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தை தேடி வந்த நிலையில், கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த அவனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெயிண்டரான கோவிந்த் குடிபோதையில் வீடு வீடாக புகுந்து பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட கோவிந்துக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்பழகன் நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி உள்ளார்.
- சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாசமாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு பொன்பேற்றி மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). இவர், நேற்று முன்தினம் மாலை, பொன்பேற்றி மாரியம்மன் கோவில் செயின்ட் என்ற பொது இடத்தில் மது அருந்தி, ஆபசமாக பேசிவந்ததாக, பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன்பேரில், நெடுங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, பொது இடத்தில், மது அருந்தி ஆபாச மாக பேசிய அன்பழகனை கைது செய்தனர்.






