என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சபியுல்லா அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
    • குளக்கரையில் மகனது ஆடை கிடப்பதைக் கண்டு, குளத்தில் இறங்கி சத்தம் போட்டு தேடினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில், குளத்தில் குளிக்க சென்ற 9 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி பலியானார். காரைக்காலை அடுத்த திருநள்ளாறு செருமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம். இவரது மகன் முகமது சபியுல்லா(வயது 9).இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, தனது தாய் ரம்ஜான் பேகத்துடன் ஆடு மேய்க்க சென்றுள்ளான். வீட்டின் அருகே உள்ள குளக்கரையில், முகமது சபியுல்லாவை நிற்க வைத்துவிட்டு, ஓடி சென்ற ஆடுகளை மீட்டு வருவதற்காக ரம்ஜான் பேகம் சென்றுள்ளார். அப்போது சிறுவன் முகமது சபியுல்லா, அருகில் உள்ள குளத்தில் இறங்கி குளித்ததாக கூறப்படுகிறது. 

    அப்போது நீச்சல் தெரியாத முகமது சபியுல்லா தண்ணீரில் மூழ்கி இறந்தான். இதனை தொடர்ந்து குளக்கரைக்கு வந்த ரம்ஜான் பேகம், மகனை காணாது அங்குமிங்கும் தேடினார். குளக்கரையில் மகனது ஆடை கிடப்பதைக் கண்டு, குளத்தில் இறங்கி சத்தம் போட்டு தேடினார். ரம்ஜான் பேகத்தின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முகமது சபியுல்லாவை தேடினர். இது குறித்து தகவல் அறிந்த, திருநள்ளாறு சுரக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து குளத்தில் இறங்கி தேடி சிறுவனை பிணமாக மீட்டனர். பின்னர் சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
    • தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும்

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட் டத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் சாலை பாது காப்பு சம்பந்தமான ஆலோ சனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர் பாஸ்கரன், வடக்கு போலீஸ் சூப்பிரண்டு நித்தின் கவுஹால் ரமேஷ், நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சிதம்பர நாதன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர்.கண்ணகி மற்றும் பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதி காரிகள் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் விபத்துக்கள் அதிகம் மற்றும் அடிக்கடி நடைபெறும் இடங்களை, போக்குவரத்து போலீசார் கண்டறிய வேண்டும். மேலும் காரைக்காலில் குறுக்கு சாலைகளில் விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும். காரைக்காலில் விபத்து களை குறைக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப் பட்ட துறை அதிகாரி கள் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சா லைகளுடன் இணையும் சாலைகளை மேம்படுத்த வேண்டும். முக்கியமாக காரைக்காலில், விபத்துகள் நடைபெறும் பொழுது ஆம்புலன்ஸ்கள் காலதாம தமாக செல்வதாக புகார்கள் வந்துள்ளன. அதை இனி தவிர்க்க வேண்டும். 108 ஆம்பு லன்ஸ்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். என கலெக்டர் அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.

    • மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
    • வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.

    புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.

    இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.

    கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.

    இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.

    மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.

    நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.

    சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது

    பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.

    லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.

    ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.

    • என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது.
    • மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருவேட்டக்குடியில் இயங்கி வரும் என்.ஐ.டி. வளாகத்தில், மாவட்ட என்.சி.சி. யூனிட் சார்பில், வருடாந்திர பயிற்சி முகாம் தொடங்கியது. முகாமை, முகாம் கமாண்டர் லலித் குமார் ஜோஷி துவக்கி வைத்தார். 10 நாட்கள் நடைபெறும் இம்முகாமில், பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் 118 பேரும், மாணவிகள் 30பேரும், என 148 பேரும், கல்லூரிகளை ச்சேர்ந்த மாணவர்கள் 60 பேர், மாணவிகள் 42 என, 102 பேரும் என மொத்தம் 250 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், ஒரு முதுநிலை என்.சி.சி. அதிகாரி, ஒரு பெண் பயிற்றுனர் உட்பட 6 ராணுவ பயிற்றுனர்கள் மற்றும் நான்கு என்.சி.சி. அதிகாரிகள் இந்த முகாமை வழி நடத்து கின்றனர். பயிற்சி முகாமில், ராணுவம் சம்பந்தப்பட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். குறிப்பாக, துப்பாக்கிகளை கையாளுதல், துப்பாக்கிச் சுடுதல், நில வரைபடங்கள் வரைபடத்தில் இருக்கக் கூடிய பொருள்களின் தூரங்களை கணக்கிட்டு நகர்தல், இராணுவ நடை பயிற்சி, ராணுவக் கட்டளைகள் போன்ற முக்கியமான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும், பொது அறிவு வகுப்புகள், சுய சுத்தம் மற்றும் ஒழுக்கம், சாலை விழிப்புணர்வு, சமூக சேவை மற்றும் பங்களிப்பு, இந்திய அரசியலமைப்பு போன்ற விழிப்புணர்வு வகுப்புகளும், மாலையில் விளையாட்டு பயிற்சியும் இரவில் கலை நிகழ்ச்சி களும் இந்த 10 நாள் பயிற்சி முகாமில் நடைபெறும் என்று என்.சி.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர்.
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட கருக்கங்குடி, வளத்தாமங்கலம் பகுதிகளை இணைத்து பஸ் சேவையை தொடங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதனையடுத்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கனின் முயற்சியால் காரைக்கால்-கும்பகோணம் வரை செல்லும் தமிழக அரசு பஸ் சுரக்குடி, கருக்கங்குடி, வளத்தாமங்கலம் வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த பஸ் சேவை கருக்குங்குடியில் இருந்து தொடங்கப்பட்டது. புதிய பஸ் சேவையை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, தொகுதி எம்.எல்.ஏ. பி.ஆர்.சிவா, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து அமைச்சர் சந்திரபிரியங்கா பி.ஆர்.சிவா, எம்.எல்.ஏ, கலெக்டர் ஊர் மக்களுடன் பஸ்சில் ஏறி பயணம் செய்தனர். அப்போது போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தமிழக அரசு பஸ்சில் கண்டெக்டரிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பயணித்தார்.

    புதுவை அரசு போக்குவரத்து கழகத்தால் பஸ்களை இயக்க முடியாத சூழலில் தமிழக அரசு பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • செல்வமணி வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம்.
    • சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் கோட்டுச்சேரியை அடுத்த திருவேட்டக்குடி பகுதியைச்சேர்ந்தவர் செல்வமணி (வயது24). இவர் கொத்தனராக வேலை செய்து வருகிறார். வேலை இல்லாத நேரத்தில், நண்பர் ராம்கியுடன் (23) சென்று வயல்களில் நண்டு பிடிப்பது வழக்கம். சம்பவத்தன்று செல்வமணி, ராம்கியுடன் வயல்களில் நண்டு பிடிக்க சென்றார். திருவேட்டக்குடி காலணித்தெரு அருகே உள்ள கோழிக்கடை வாசலில், திருவேட்டக்குடி மெயின்ரோட்டைச்சேர்ந்த சங்கரலிங்கம் (36), இருவரையும் வழிமறித்து, உன்னிடம் சித்தாள் வேலைக்கு வரும் நபர்களை எல்லா வேலையும் செய்யச்சொல்வியா என கேட்டு, ஆபாசமாக திட்டி, சாலையோரம் கிடந்த பாட்டில்களால் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    • குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.
    • குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது.

    புதுவை லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்த நேரு ஜிப்மரில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஹனாஅமிழ்தினி (6). இவர் பாக்குமுடையான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறார். தனது மகன் ஹனியல் யாழ் இன்பனை(4) இதே பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் தொடங்கின.

    தனது குழந்தைகளை நேரு வித்தியாசமாக குதிரையில் பள்ளிக்கு அழைத்து சென்றார். ரூ.5 ஆயிரத்துக்கு வாடகைக்கு குதிரையை பெற்ற நேரு, தனது குழந்தைகளை அதில் ஏற்றி வீட்டிலிருந்து பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை வீதியில் மக்கள் அனைவரும் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

    இதனை பள்ளிக்கு வந்த பிற குழந்தைகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். அவர்களையும் குதிரையில் ஏற்றி சிறிது தூரம் அழைத்துச் சென்று பின் பள்ளியில் இறக்கிவிட்டார். பள்ளிக்கு வந்திருந்த பெற்றோர் பலரும் இதனை ஆர்வத்தோடு புகைப்படம் எடுத்தனர்.

    இதுகுறித்து குழந்தைகளின் தந்தை நேரு கூறும்போது, புதுவையில் அரசு பள்ளியில் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது. தரமான கல்வி வழங்கப்படுகிறது. பெற்றோர் அனைவரும் அரசு பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க குதிரையை வாடகைக்கு எடுத்து என் குழந்தைகளை அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளேன் என்றார்.

    குழந்தைகளை வரவேற்க தோரணங்கள் பள்ளியில் கட்டப்பட்டிருந்தன. பொம்மலாட்ட கலைஞர்கள் ஆடி, பாடி மகிழ்ச்சியோடு குழந்தைகளை வரவேற்றனர்

    • வினோத் சாலையில் ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார்.
    • 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் சிவபுராணி மேலத்தெருவைச்சேர்ந்தவர் வினோத்(வயது26). இவர், காரைக்கால் மானம்பாடியைச்சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரிடம், சாலையில், ரெபிலெக்டர் பெயிண்ட் அடிக்கும் வேலைச் செய்து வருகிறார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு சாலையில், நண்பர்கள் தஞ்சவூரைச்சேர்ந்த எட்வின்ராஜ்(18), சஞ்சய்(18) ஆகிய 2 பேருடன் சேர்ந்து சாலையின் நடுவே பெயிண்டு அடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது, காரைக்கால் திருநள்ளாறைச்சேர்ந்த கார்த்தி((27), ராஜேஷ்(24) ஆகிய 2 பேர் மோட்டார் சைக்களில் சென்று, 3 பேரையும் ஆபசமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, வினோத், நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் தேடிவருகின்றனர்.

    • ஏரியிலிருந்து அரசு விதிகளுக்குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.
    • பேச்சுவார்த்தைக்கு வந்த எம்.எல்.ஏ- அதிகாரிகளுடன் வாக்குவாதம்

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நல்லம்பல் ஏரியில், அரசு திட்டங்களான விழுப்புரம் நாகை நான்கு வழி சாலை, காரைக்கால்-பேரளம் அகல ெரயில்பாதை திட்டம், கேந்திரவித்யாலயா உள்ளிட்ட பணிகளுக்காக, ஏரியிலிருந்து அரசு விதி களுக் குட்பட்டு மண் அள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக, அரசு விதிகளை மீறி, அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப் பட்டு வருவதாகவும், சில சமயம் மேற்கண்ட அரசுத் திட்டங்களை தவிர, தமிழகத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவ தாகவும் குற்றசாட்டு எழுந்தது. இந்த அளவுக்கு அதிகமான மணல் கொள்ளையை, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வந்த நிலையில், அளவுக்கு அதிக மான மணல் எடுப்பது நிறுத்தப்படவில்லை.

    தற்போது, குறுவை நடவு நடவுள்ள நிலையில், ஏரியில் மிக ஆழமாக மண் எடுப்பதால், நிலத்தடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்ப தால், சம்பா நடவு கேள்விக் குறியாகும் என, ஏராளமான விவசாயிகள், கிராம மக்கள், ஏரியிலிருந்து மணல் ஏற்றிவந்த லாரி களை நேற்று சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், நல்லம்பல் ஏரிக்கு செல்லும் வழியை யும் இரும்புத் தடுப்புகளால் தடுத்தனர். மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விபரம் அறிந்த மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் (பேரிடர் மேலாண்மை), தாசில்தார் பொய்யாத மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாத தால், தொகுதி எம்.எல்.ஏ சிவா சம்பவ இடத்திற்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ சிவா மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரி மகேஷ் (நீர்வளம்) ஆகி யோரை, கிராம மக்கள் முற்றுகையிட்டு மணல் கொள்ளையை தடுக்கா ததற்கு கண்டன கோஷம் எழுப்பியதோடு, வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, எம்.எல்.ஏ சிவா பேசியதாவது:-

    நல்லம்பல் ஏரியில் வயல் மட்டத்திலிருந்து அளவெ டுத்து முறைப்படி மணல் அள்ளப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப் பில்லை. மணல் அள்ளும் இடங்களில் ஆழம், அகலம், நீளத்தை அளந்து வரு கிறோம். மண்ணை அள்ளிய பிறகு பள்ளங்களை ஏரியின் மற்ற பகுதியில் இருந்து மண்ணை எடுத்து சமன் செய்வோம். என்றார். இதில் உடன்பாடு ஏற்ப டாததால், மக்கள் சிறை பிடித்த லாரிகளை விடு விக்க முடியாது என தொடர்ந்து போராடினர். இதனால் அங்கு அசம்பா விதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.

    • கார்த்திகேயன் காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் திருவையாறு பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் திருச்சி டிவிசனுக்கு உட்பட்ட காரைக்கால் ெரயில் நிலையத்தில், ெரயில் பாதுகாப்பு வீரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் நள்ளிரவு, காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ெரயில் நிலையத்தின் தங்கும் அறை அருகே, 2 ேபர் புகை பிடித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த கார்த்திகேயன், இங்கே புகை பிடிக்க கூடாது என கண்டித்துள்ளார். அதற்கு, நாங்கள் யார் என தெரியாமல் பேசுகிறீர்கள் என கூறி தகாதவார்த்தைகளால் திட்டி கார்த்திகேயனை 2 பேரும் தாக்கியுள்ளனர். கார்த்திகேயனின் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள், காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்த பைசல் (34), ரிஸ்வான் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    • காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
    • புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் பஸ் நிலையம் அருகே, தனியார் மதுபான கடையை ஒட்டி, தள்ளு வண்டி பெட்டிக்கடை ஒன்றில்புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.

    அதன்பேரில் உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், கடையை சோதனை செய்த போது அங்கு புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட 2 ஆயிரம் மதிப்புள்ள 40 புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் காரைக்கால் பெசன்ட் நகரைச் சேர்ந்த காதர் பாட்ஷாவை கைது செய்தனர்.

    • மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
    • பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தப்பியுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் பிரதான சாலையான பாரதியார் வீதியில் அன்சாரி என்பவர் துணிக் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று இரவு காரில் வந்த 5 பேர், அந்த கடையில் விலை உயர்ந்த துணிகள் எடுத்த னர். தொடர்ந்து மர்ம நபர்கள் எடுத்த துணி களுக்கு பில் வழங்கப்பட்டு பணம் செலுத்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், பணம் செலுத்தாமல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி விட்டு துணிகளை எடுத்துக்கொண்டு காரில் தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கடை ஊழி யர்கள் நகர போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீஸ் சூப்பிரண்ட் சுப்ரமணியம் தலைமையிலான போலீசார் அந்த கடையில் பணிபுரிந்த ஊழியர்களிடம் விசாரணை செய்தனர். மேலும் கடை யில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்கு பதிவு செய்து 5 மர்ம நபர்களை தேடி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×