என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது.
    • வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதையடுத்து கோரிமேடு போலீஸ் மைதானத்தில், அவருக்கு விடைகொடுக்கும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் மற்றும் ஏ.டி.ஜி.பி, சீனியர் எஸ்.பி.க்கள் மற்றும் எஸ்.பி.க்கள் என போலீஸ் துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இதில் டி.ஜி.பி.க்கு பிரியாவிடை அணிவகுப்பு கொடுக்கப்பட்டது. இந்த அணிவகுப்பிற்கு காரைக்கால் சீனியர் எஸ்.பி. மணிஷ் தலைமை வகித்தார். வழக்கமாக அணிவகுப்பில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) ஆங்கிலத்தில் வழங்கப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக போலீசாருக்கு இந்தியில் அறிவுறுத்தல்கள் (கமாண்ட்) வழங்கப்பட்டது.

    இவ்விவகாரம் போலீஸ் துறை வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    • பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.

    அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

    இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

    தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
    • குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் அருகே இருந்த விலை உயர்ந்த மோட்டார்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திரு.பட்டினம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் வீரனராஜ் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் திரு.பட்டினம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டாரர்களே பறிமுதல் செய்து காரைக்காலில் உள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    • இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
    • நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்ப ட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி களில் இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. காரைக்கால் மாவட் டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இள நிலை பட்ட படிப்புக ளான பி.ஏ,. பி.காம், பி.எஸ்.சி ஆகிய வகுப்புகளில் சேருவதற்கா ன முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி யது. இந்த கலந்தாய்வு, இம்மாதம் 27-ந் தேதி வரை, காரைக்கால் நேரு நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தேர்வுக் கூடத்தில் நடை பெறும் என்றும், நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான அனுமதி சான்றிதழை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது ஆசாத் ராசா மற்றும் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் மாணவ ர்களுக்கு வழங்கினார்கள்.

    • புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
    • கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

    புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    புதுச்சேரி:

    கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது 'நான் யார்' என மாணவர்களிடம் கேட்டபோது கவர்னர் என்று சில மாணவர்கள் கூறினர். வேறு சிலர் "தமிழிசை" என்றும் இன்னும் சிலர் "தமிழிசை சவுந்தரராஜன்" என்றும் கூறினார்கள். இதற்காக மாணவர்களை தட்டிக் கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு தனியார் மூலம் கழிவறைகளை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

    நடிகர் விஜய் மாணவர்களை சந்திப்பது குறித்தும் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறை அவர் படிக்க சொன்னது குறித்தும் கேட்டதற்கு கவர்னர் தமிழிசை பதில் அளிக்காமல் தவிர்த்து புறப்பட்டு சென்றார்.

    ஏற்கனவே, கவர்னர் தமிழிசை நகர பகுதியில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றபோது நிருபர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார். 2-வது முறையாக நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள்.
    • பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது.

    புதுச்சேரி:

    ரசிர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி புதுவையில் வாழ்த்து சுவரொட்டிகள், பல்வேறு விதமான பேனர்கள் வைப்பது வழக்கம். நடுக்கடலில் பேனர், ஆழ்கடல் நீரினுள் பேனர் என ரசிகர்கள் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.

    தற்போது புதிய பஸ் நிலையம் அருகே வைத்துள்ள பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போல் அமைத்துள்ளனர். மைக் போடியம் ஸ்டாண்டில் ச.ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனரை உருளையன்பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர்.

    பேனரில் 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்"என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதோடு ரசிகர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

    பின்னால் பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது.

    இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    • வெங்கடேசன் அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார்.
    • 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செருமாவிளங்கை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் லதா. இவரது கணவர் வெங்கடேசன் (வயது 45) மாற்றுத்திறனாளியான இவர், அவ்வப்போது வெளியிலும், வீட்டிலும் மெக்கானிக் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இரவு 11 மணி வீட்டு வாசலில் மழை நீரில் வெங்கடேசன் வழுக்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக லதா மற்றும் உறவினர்கள் வெங்க டேசனை காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோத்த டாக்டர் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தொடர்ந்து லதா திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகிலன் 9-ம் வகுப்பு படித்து முடித்து, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • முகிலன் இறந்துவிட்டதாக மைய நிர்வாகிகள் கூறியதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூரை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முகிலன்(17). மகள் சத்தியபிரியா(15). செல்வம் டீ கடை நடத்தி வருகிறார். முகிலன் சிறு வயது முதல் திக்கி, திக்கி பேசிவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், முகிலன் 9-ம் வகுப்பு படித்து முடித்து, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்த ஓராண்டாக, முகிலன் திடீரென ஆக்ரோஷமாகி, வீட்டில் உள்ளவர்களை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் பட்டுகோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    கீழ்பாக்கம் டாக்டர்கள் முகிலன் சரியாகிவிட்டதாக கூறியதன்பேரில், முகிலனை தந்தை வீட்டுக்கு அழைந்துவந்துள்ளார். வீட்டுக்கு வந்தவுடன், அதே ஆக்ரோஷத்துடன் குடும்ப உறுப்பினர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், நண்பரின் ஆலோசனையின் பேரில், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தனியார்ம றுவாழ்வு மையத்தில் கடந்த 6-ந் தேதி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். 2 நாட்கள் கழித்து சென்று முகிலனை பார்க்க சென்றபோது, அங்குள்ள நிர்வாகிகள் முகிலனை பார்க்க விடவில்லையென கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மைய மானேஜர் சத்தியராஜ், செல்வத்திற்கு போன் செய்து, முகிலனுக்கு வலிப்பு வருமா என கேட்டதாகவும், பிறகு, 9.30 மணிக்கு, முகிலன் ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது, தொண்டையில் சிக்கிகொண்டதால், காரைக்கால் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பதாகவும் கூறியதாக தெரிகிறது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு முகிலன் இறந்துவிட்டதாக மைய நிர்வாகிகள் கூறியதாக கூறப்படுகிறது. இது குறித்து, செல்வம் கோட்டுச்சேரி போலீசில், எனது மகன் முகிலன் இறப்புக்கு காரணம் அறிந்து நடவடிக்கை எடுக்குமாறும், உரிய நிதி வழங்குமாறும் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும்.
    • இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, சென்னை லைட்ஹவுஸ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல் வெங்கட்ராமன், யோகா பயிற்சியாளர் ருத்ரகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். லைட்ஹவுஸ் இயக்குனரக அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    லைட்ஹவுஸ் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது.

    அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ லைட்ஹவுஸ்போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம்.

    உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம்.

    2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.

    எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது.

    மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இந்தியா கூறுவதை உலக நாடுகள் கேட்டு வருகிறது. பிரதமர் யோகா கலையை ஆரம்பித்து வைக்க வெளிநாடு சென்றுள்ளது பெருமை தரக்கூடியது. பல இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை கடை பிடிக்கின்றனர்.

    குடும்ப தலைவிகள் யோகா நமக்கானது அல்ல என நினைக்கின்றனர். சமையல் கூடத்தில்கூட யோகா செய்யலாம். அவர்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும். குழந்தை வளர்ப்பிலும் யோகாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்காவிட்டாலும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் வரும் 26ந் தேதி நடைபெறும், சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வுள்ளது. என, மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அறிவித்துள்ளார். காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில், வரு கின்ற 26-ந் தேதி, காரைக் காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, காரைக்கால் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    வருகிற 26-ந் தேதி, காரைக்காலில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படு கிறது. காரைக்கால் மாவட்டத்தில், போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பது நமது கடமை. அன்றையதினம் பொது மக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கையெழுத்து இயக்கம், பேரணி உள்ளிட்ட வைகள் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் போதைப் பொருள் ஒழிப்பது சம்பந்தமாக விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். இது குறித்து, பள்ளி, கல்லூரி மாணவர் களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி களும் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு, அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம் என்றார்.

    கூட்டத்தில் பயிற்சி கலெக்டர், துணை கலெக்டர் பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவ்ஹால் ரமேஷ் மற்றும் நலவழித்துறை, சுகாதா ரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, காரைக் கால் நகராட்சி ஆணையர் மற்றும் கொம்யூன பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.
    • நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பள்ளிகளில் கைவேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதத்தில் ஒருநாள் மாணவர்களுக்கு 'நோ பேக் டே' அறிமுகம் செய்யப்படவுள்ளது.

    தெலுங்கானா கவர்னரான தமிழிசை சவுந்தரராஜன் அந்த மாநில பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்கும் வகையில் 'நோ பேக் டே' என்ற பெயரில் புத்தக பை இல்லாத தினமாக மாதத்தில் ஒருநாளை அறிவித்துள்ளார்.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 4-ம் சனிக்கிழமை மாணவர்கள் புத்தகம் இல்லாமல் பள்ளிக்கு வரலாம்.

    அதேபோல் புதுச்சேரியிலும் மாதத்தில் ஒருநாள் பள்ளி மாணவர்களுக்கும் புத்தக பை இல்லாத தினத்தை கடைபிடிக்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

    அந்நாளில் கை வேலை, கலை விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், சீருடை வழங்குதல், பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல், டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டும். மாணவர்களுக்கான மதிய உணவில் வாரத்தில் 2 நாட்களாவது சிறு தானிய உணவு வழங்க வேண்டும்.

    நீட் தேர்வுக்காக பயிற்சி வகுப்புகள் வல்லுநர்களை கொண்டு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதை உடனே ஆய்வு செய்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளிக்கு வர ஊக்கப்படுத்த வேண்டும் அரசுப் பள்ளிகளில் பொதுத்தேர்வுகளில் முதல் இடங்களை பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து மாணவர்கள் தினம் கொண்டாடப்பட வேண்டும் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ×