search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்காலில்  காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்
    X

    காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    காரைக்காலில் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம்

    காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை வர் ராகுல்காந்தி, அண்மை யில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து செய்த விமர்சனம் காரணமாக, குஜராத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப் பட்டது. இதை எதிர்த்து, குஜராத் ஹைகோர்ட்டில் ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங் களை காங்கிரசார் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதியார் சாலை யில், காரைக்கால் மாவட்ட காங்கிரசார், மாவட்டத் தலைவர் சந்திரமோகன் தலைமையில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    போராட்டத்தில், புதுவை முன்னாள் அமைச்சர்கள் கமலக்கண்ணன், சுப்பிர மணியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாஸ்கரன் காங்கிரஸ் கட்சி மூத்த நிர்வாகிகள், தங்கவடி வேலு, கருணாநிதி, சுப்பை யன், அரசன், ரஞ்சித், முரளி, நிர்மலா உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில், ராகுல் காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடி யாத பா.ஜ.க. அரசு, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறிக்கும் வகையில், திட்ட மிட்டு பொய்வழக்குகளை ஜோடித்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என காங்கிரஸார் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் மரி கிறிஸ்டி யன்பால் மற்றும் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சு வார்த்தை யில் ஈடுபட்டனர். இதை யடுத்து, காங்கிர சார் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இந்த போராடத்தால், காரைக் கால் புதுச்சேரி-சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×