என் மலர்
புதுச்சேரி
- உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை.
- ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலை யைச்சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர், நல்லாத்தூர் சாலை யில் காய்கறி கடை நடத்தி வருகிறார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 நாட்களாக ராஜ பாண்டி கடையை திறக்க வில்லை. இந்நிலையில், சம்பவத்தன்று காலை கடையை திறந்தபோது, கடையில் இருந்த ரூ.2 ஆயிரம் மதிப்பிலான டேபி ள்பேன் காணாமல் போயி ருந்தது. மேலும் கடையின் பின் வாசல் திறந்து கிடப்பது தெரியவந்தது.
மேலும், அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, நெடு ங்காடு பஞ்சாட்சபுரத்தை ச்சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஒரு டேபிள் பேனை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். தொடர்ந்து, நெடுங்காட்டில் உள்ள பழைய இரும்பு கடைகளில் சென்று விசாரித்தபோது, ஜெகதீசன் என்பவர் பேனை விற்க வந்ததாகவும், தாங்கள் வாங்க வில்லை யென தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, ஜெகதீசன், பேனை உடைத்து தனி தனி பகுதியாக மாற்றி மீண்டும் விற்பதற்காக சென்றதை பார்த்துள்ளார். தொடர்ந்து, ராஜபாண்டி ஜெகதீசனை பிடுத்து, நெடுங்காடு போலீசாரிடம் ஒப்படைத்தார். ராஜ பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து ஜெகதீசனை கைது செய்து, பேனின் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.
- அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
- சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை சாமிபிள்ளை தோட்டம் 8-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது 57) டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி காளியம்மாள் (எ) காஞ்சனா (வயது 42) இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் மகன் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
குடிபழக்கத்திற்கு அடிமையான முத்துகுமரன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மனைவி பிள்ளைகளை பிரிந்து சென்றுள்ளார். தற்போது பிளாட்பாரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று புதுவை வெள்ளாழர் வீதி பேங்க் ஆப் பரோடா அருகில் உள்ள வாய்க்காலில் முகத்தில் சிராய்ப்பு காயத்துடன் பின் தலையில் அடிப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை கண்டு பெரியக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக மது அருந்தி போதையில் கீழே விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
சந்தேகமடைந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நள்ளிரவு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் தூங்கிக் கொண்டிருந்த முத்துகுமரனின் பாக்கெட்டில் பணம் ஏதாவது இருக்கிறதா என கைவிட்டு பார்க்கின்றனர்.
உடனே சுதாகரித்துக் கொண்டு எழுந்த முத்துகுமரன் அவர்களை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே அவர்கள் 3 பேரும் சரமாரியாக அவரை கையால் தாக்குகின்றனர். பின் அவர்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். மயங்கி முத்துகுமரன் அங்கே விழுந்து கிடக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
எனவே அவர்கள் 3 பேரும் அடித்ததில் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து கொலை செய்த 3 பேரையும் போலீசார் பைக் எண்ணை வைத்து தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
- கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கொரோனா தொற்று காலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 250-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கடந்த 2020- ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டனர்.
வாய்ப்பு இருந்தால் அவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஆலோசிப்பதாக பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புதிய செவிலியர்களை தேர்வு செய்ய அடுத்த மாதம் போட்டித்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது.
நியமன விதிகளை தளர்த்தி, நேரடியாக தங்களை நிரந்தரம் செய்யக்கோரி ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடக்கவில்லை.
இதனால் சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க நேற்று 100-க்கான ஒப்பந்த செவிலியர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வாயில் முன்பு முற்றுகையிட்டனர். அங்கு வந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் ஒப்பந்த செவிலியர்களை அழைத்து பேசினர். சில செவிலியர்களை மட்டும் முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த அழைத்து சென்றனர்.
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பாதிக்கப்பட சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் காரணம் என்று தி.மு.க.
எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். அப்போது அவர்களிடம் முதலமைச்சர் ரங்கசாமி கூறுகையில்,
"முன்பு இருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருப்பது வேறு. கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களை ஒப்பந்தம் முடிந்ததும் பணியில் இருந்து விடுவிக்கலாம் என அதிகாரிகள் கூறினர். நான் தான் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணி ஒப்பந்தத்தை நீட்டித்து தருகிறேன்.
இங்கு 18 ஆண்டுகளாக பணிபுரிந்தோருக்கே ஏதும் செய்ய முடியவில்லை. உங்களிடம் சொல்வதற்கு சங்கடமாகத்தான் உள்ளது. முதலமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று எண்ணுகிறேன். முதலமைச்சர் சொன்னால் முன்பெல்லாம் நடைபெறும்.
இப்போது அதுபோல் செய்ய முடியாது. விழாவுக்கு சென்றாலே, கல்வெட்டில் பெயர் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியுள்ளது. பல அதிகாரிகள் வி.ஆர்.எஸ். தரக்கூறுகிறார்கள். மின்துறையில் விடுப்பு எடுத்து சென்று விட்டனர்
புதிதாக ஆட்கள் எடுத்தால், கொரோனா காலத்தில் நீங்கள் பணி புரிந்ததற்காக வெயிட்டேஜ் செய்கிறோம். அதுதான் செய்ய முடியும்.
கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு என் கையில் இருந்தால் செய்து விடுவேன். அது முடியவில்லை. இதை புரிந்து காத்திருங்கள்" என்றார்.
- புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது.
- கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர்.
புதுச்சேரி:
நர்சுகள் தேர்வில் தற்காலிக நர்சுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சித்தலைவர் சிவா எம்.எல்.ஏ தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதலமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செயல்பாடு குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இதன்பின் எதிர்கட்சித் தலைவர் சிவா நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை நிரப்ப முடியவில்லை. இதற்கு அதிகாரிகள்தான் தடையாக உள்ளனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளை பணிநிரந்தரம் செய்வதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது புதிதாக ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அரசு செயலர், தலைமை செயலர் நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதை தடுக்கின்றனர்.
முதலமைச்சரிடம் நர்சுகளோடு சென்று கோரிக்கை வைத்தோம். அப்போது முதலமைச்சர், எதையும் செய்ய முடியவில்லை.
தற்காலிக செவிலியர்களுக்கே 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளம் வழங்க முடியவில்லை. இவர்களை ஏன் பணியில் வைத்துள்ளீர்கள்? என அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.என மன உளைச்சலை முதலமைச்சர் கொட்டியுள்ளார். அவர் செய்ய நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை.
பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்த முதலமைச்சர் பின்பக்கமாக போய்விடலாமா? என சொல்லும் அளவுக்கு முதலமைச்சரையும், தேர்வு செய்த அரசையும் மதிக்காமல் தனி அரசு நடத்தி வருகின்றனர். மக்கள் கோரிக்கைகள், சட்டமன்ற அறிப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. செவிலி லயர்களுக்கு ஒரு ஆண்டுக்குகூட பணி வழங்க முடியவில்லை.
முதலமைச்சர் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் எதையும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.
இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், வாக்களித்த மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. புதுவை மக்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இதற்கு நல்ல பதில் கிடைக்கும். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் புதுவையில் எல்லா விஷயத்திலும் தலையிடுகிறார். எல்லா கோப்புகளிலும் அவர் எடுக்கும் முடிவுப்படிதான் நடக்கிறது. பா.ஜனதா அளித்த வாக்குறுதிப்படி புதுவைக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
- ரூ.1500 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மலையன் தெருவில் ராஜேந்திர பிரசாத் நடத்திவரும் கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1500 மதிப்பிலான அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.
- பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
- பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2022-ம் ஆண்டு 131 பெண் மற்றும் 252 ஆண் போலீஸ்காரர்கள் என மொத்தம் 383 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த போலீசார் தற்போது போலீஸ் நிலையங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின்போது பெண் போலீசாருக்கு பயிற்சி கொடுத்த சிலர் பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர், போலீஸ்துறை உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ஆண் போலீசாருக்கு பயிற்சி கொடுக்க நியமிக்கப்பட்ட 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசாரை அணிவகுப்பின்போது தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரும், விசாரிக்கும் நபரும் ஒரே பகுதி(மாகி)யை சேர்ந்தவர்கள் என்பதால் புகார் விசாரிக்கப்படவில்லை.
பயிற்சி காலத்தில் செல்போன் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் 2 உதவி சப்-இன்ஸ்பெக்டர்களும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு செல்போன் வழங்கினர்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் பயிற்சி பள்ளியில் விசாரித்தபோது, பயிற்சி முடித்து சென்ற சிலர் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மொட்டை கடிதம் எழுதி போட்டுள்ளனர்.
பயிற்சி நிறைவு பெறும் முன்பு பெண் போலீசாரிடம் இதுகுறித்து தனித்தனியே விசாரிக்கப்பட்டது. அப்போது யாரும் நேரடியாக புகார் தெரிவிக்க முன்வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் உண்மை தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது.
- 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில் போடப்பட்ட புதிய சாலை, பொது மக்களின் புகாரையடுத்து, ஆய்வு செய்த தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜன், தரம் இல்லையென புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வடகட்டளை கிராமத்தில், அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி அரசு பாட்கோ நிறுவனம் மூலம், சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு, ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணி, நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.
இரவோடு இரவாக பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை, சாலையின் பல பகுதிகள் பெயர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. நாக.தியாகராஜனை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாக.தியாகராஜன், எம்.எல்.ஏ. பொதுமக்கள் முன்னிலையில், புதிய சாலையை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, கையினால் தோண்டும் போதே சாலை தனித்தனியாக பெயர்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில், 4 செ.மீ.அளவிற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் போது, சாலை, 2 செ.மீ. கூட தரம் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. என்றார்.
அதற்கு அங்கிருந்த அதிகாரிகள் 4 செ.மீ. இருப்பதாக கூறியுள்ளனர். இதனால், மேலும் கோபம் அடைந்த எம்.எல்.ஏ., தனது உதவியாளரை வரவழைத்து, அரையடி ஸ்கேல் ஒன்றை வாங்கி, சாலையின் தரத்தை, அதாவது 2 செ.மீ. இருப்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறி, முறையாக 4 செ.மீ தரம் கொண்ட சாலையை போடவில்லையென்றால், சாலைக்கான ஒப்பந்த தொகை வழங்க விடமாட்டேன் என்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
- பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் காரைக்கால் அரசு தொடக்கப்பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
காரைக்காலில் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் புதுவை பிராந்தியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தங்களை மீண்டும் சொந்த பிராந்தியமான புதுவைக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் இவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே, அரசின் கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய பணியிட மாறுதல் கொள்கையை வெளியிட்டது. இதற்கு ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பணி மூப்பு அடிப்படையில் தான் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய இடமாற்றல் கொள்கையில் முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் கல்வித்துறை வளாகத்தில் ஒன்று கூடினர். அப்போது பணியிட மாறுதல் விவகாரத்தில் சம்மேளனமும், கூட்டமைப்பும் இணைந்து, கூட்டாக போராட்டக்குழுவை உருவாக்கி போராடுவது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை கோரிமேட்டில் உள்ள அப்பாபைத்தியசாமி கோவில் வளாகத்தில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்று திரண்டனர். ஆனால் முதலமைச்சர் ரங்கசாமி அங்கு இல்லை.
இதனால் போலீசார் அவர்களை காத்திருக்கும்படி கூறினர். அவர்கள் வீட்டின் முன் முற்றுகையிட்டு காத்திருந்தனர். விழா முடிந்து வந்த முதலமைச்சரை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் பணிமூப்பு அடிப்படையில் தான் இடமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு முன்பாக புதிய ஆசிரியர்களை நியமித்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
அதற்கு முதலமைச்சர் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேசும்படி கூறினார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அவர்கள் நாளை கல்வித்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளனர்.
- ஏராளமான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள்.
- காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் நேருநகர் அருகே, வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஏராள மான பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில், வட்டார வளர்ச்சி அளவிலான கூட்ட மைப்பு பெண் ஊழி யர்களிடம், அவர்களின் மேல் அதிகாரியாக, வட்டார வளர்ச்சி அலு வலக இணைப்பு அதிகாரி மகேஸ் குமார் (வயது36) வேலை செய்து வருகிறார். இவர் தனக்கு கீழ் வேலை செய்யும் பெண் ஊழியரு குளை, தனது வீட்டு வேலை களை செய்யச் சொல்வது, ஆபச மாக பேசுவது போன்ற வேலைகளை செய்யச் சொல்வதாக கூறப்படு கிறது. மேலும், முடியாது என மறுக்கும் பெண்கள் குறித்து, மேல் அதிகாரி களிடம் தவறான புகார் களை அளித்து, வேலையை விட்டு நீக்கிவிடு வேன் என மிரட்டியதாக கூறப்படு கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல், 40 வயது திருமணம் ஆன பெண் ஊழியர் ஒருவரை சொந்த வேலைகளை செய்ய சொன்னபோது, அவர் முடியாது என மறுத்தால், அந்த பெண் ஊழியரை கடுமையாக பேசி, உன்னை உடனே வேலையை விட்டு நீக்கு கிறேன் என மிரட்டியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அப்பெண் ஊழியர், அலுவலகத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த ஊழியர்கள், அவரை காரைக் கால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மேலும் காரைக்கால் மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில், காரைக்கால் வட்டார வளர்ச்சி அவலு வக இணைப்பு அதிகாரி மகேஸ்குமார், பெண் ஊழி யர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, சொந்தவேலை செய்ய சொல்லி மிரட்டுவது, ஆபச மாக பேசுவது, கை, கால் களை அமுக்க சொல்வது என தொடர்ந்து இன்னல் கொடுத்து வருகிறார். இது குறித்து அந்த அதிகாரியின் அத்துமீறல் பேச்சு பதிவு செய்யப் பட்டுள்ளது. எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி யுள்ளனர். இது காரைக்கா லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலில் திருநள்ளாறு சாலையில், நகராட்சிக்கு சொந்த மான திடலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த வார சந்தை யில், காரைக்கால் மற்றும் நாகப் பட்டினம், தஞ்சாவூர், கும்ப கோணம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் மற்றும் விவசாயி கள், தங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், காய்கறி, பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மிகப்பெரிய திடலான இங்கு வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் வாரந்தோறும் கூடுகின்றனர். ஆனால், இவர்களில் சுமார் 80 பேர் மட்டும் நிழலில் வியாபாரம் செய்ய நகராட்சி மேற்கூறை போட்டுள்ளது. மற்றவர்கள் சமம் செய்யப்படாத மண்ணில், சேறும்- சகதியிலும், கடும் வெயிலில் வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது.
அதே சமயம், நகராட்சி சார்பில், வியாபாரிகளிடம் ரூ.100 முதல் 400 வரை கடைக்கு ஏற்ப கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், நகராட்சி வியாபாரிகளிடம் வசூல் செய்யும் பணத்தில், அவர்களுக்கு தேவையான நிழல் பந்தல், குடிநீர், கழிவறை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தருவதில்லை. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற னர். கடந்த ஆண்டு மழைக்கா லத்தில் வியா பாரிகள் மற்றும் பொதுமக்கள் சேரும், சகதியுமான சந்தையில் சொல்லமுடியாத இன்னலுக்கு ஆளாகினர். இதனால் அரசியல் கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் எழுப்பியதோடு, பல்வேறு போராட்டஙக்ளும் நடைபெற்றது. இதன் எதிரொலியாக, வாரச்சந்தை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட்டத்திற்கு, சில மாதங்கள் தற்காலிகமாக மாற்றப்பட்டது. பிறகு மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றப்பட்டு, தற்போதுவரை எந்தவித மேம்பாடு இல்லாத திடலில்தான் இயங்கி வருகிறது. இன்னும் சில மாதங்களில் மழைக்காலம் தொடங்கவுள்ளது. அதற்குள், வாரசந்தையை, மேடாக்கி அல்லது, சிமெண்ட் தரை மற்றும் நிழல் பந்தலை ஏற்படுத்தி, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர நகராட்சி நிர்வாகதிற்கு, மாவட்ட நிர்வாகம் அழுத்தம் தரவேண்டும் என்று வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது.
- மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி கிராமம் கடலோரப் பகுதியில் உள்ளது. இங்கு ஏற்கனவே கடல் அரிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் கல் கொட்டும்பணியை அரசு மேற்கொண்டது.
ஆனால், தமிழக பகுதியில் கொட்டப்பட்டுள்ளது போல கடல் நோக்கி தூண்டில் வளைவு அமைக்காமல் சாலை போடுவது போல் கல் கொட்டப்பட்டது.
இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக கல் கொட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக பிள்ளைச்சாவடியின் வடக்குப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும் கடலோர பகுதியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அடித்து செல்லப்பட்டன.
மீன்பிடி வலைகளை பாதுகாக்க வைக்கப்படும் 2 களமும் கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளது. எந்த நேரத்திலும் இந்த 2 களங்களும் கடலுக்குள் விழும் என்ற அபாய நிலையில் உள்ளது.
இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மீனவர்கள் தங்களது மீன் வலை, படகு போன்றவற்றை கடற்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பிள்ளைச்சாவடி மீனவ கிராமம், ஆதிதிராவிடர் பகுதி குடியிருப்பு பஞ்சாயத்தார், பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட திரண்டனர்.
தகவலறிந்த கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசி மறியல் நடத்தவிடாமல் கைவிட செய்தார்.
மேலும் அவர்களோடு, கடல் அரிப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கடல் அரிப்பை தடுப்பதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ராட்சத கற்கள் கொட்டப்படும் மற்றும் தூண்டில் முள் வளைவு போல கற்கள் கொட்டப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதையேற்று பொதுமக்கள் போராட்ட முடிவை கைவிட்டனர். மறியலுக்காக மீனவர்கள், கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டதால் சிறிதுநேரம் பதட்டம் நிலவியது.
- நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
- நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் வேலை முடிந்து தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டன.
அதுவும் கடந்த 14-ந் தேதி ஒரே நாளில் புதுவையில் முதலியார்பேட்டை, உருளையன்பேட்டை, பெரியகடை, முத்திரையர்பாளையம் ஆகிய பகுதிகளில் 4 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகைகளை பறித்து சென்றனர்.
இந்தநிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர்.
அப்போது நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடி வந்து கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,
நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் ரெயில் மூலம் மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்றனர். யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் தனிப்படை போலீசார் காத்திருந்தபோது அங்கு ரெயிலில் வந்த முகமது ஜாபர் குருஷியை மடக்கி பிடித்தனர். மற்றொரு கூட்டாளியான வாரிஷ் கான் கடந்த 2 நாட்களுக்கு முன்பே மும்பைக்கு தப்பி சென்று விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து முகமது ஜாபர் குருஷியை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஜாபர் குருஷி தனது கூட்டாளி வாரிஷ் கானுடன் காவி உடை அணிந்து புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து முகமது ஜாபர் குருஷியை போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மும்பைக்கு தப்பி சென்ற அவனது கூட்டாளி வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.






