என் மலர்
புதுச்சேரி
- தங்கசாமி படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
- மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
புதுச்சேரி:
காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ந்தேதி பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது, நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த தங்க சாமி என்பவர், படகில் ஓரம் நின்றிருந்த போது தவறி கடலில் விழுந்து விட்டார்.
சக மீனவர்கள் கடலில் குதித்து தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் பிற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக கூடுதல் படகுகளில் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு தேடும் பணி தொடர்கிறது.
- விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
- விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி:
புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் ஒரு வீட்டை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருந்தது.
அந்த விடுதிக்கு பெண்களும், ஆண்களும் வந்து போவதுமாக இருந்தனர். இதனால் அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர்.
விடுதி அறைகளில் விபசார தொழிலுக்கு பயன்படுத்தும் காண்டங்களும் இருந்தன. இதனால் அந்த விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (62) விடுதி மேலாளராகவும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் என்ற அருண்குமார் விபசார புரோக்கராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுச்சேரி அடுத்த தமிழகப்பகுதியான கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையையொட்டி புதுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரம் செய்யும் மீனவ பெண்கள் புதுச்சேரியில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து கிராமப் பகுதியில் விற்பனை செய்வது வழக்கம்.
அதுபோல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் புதுச்சேரிக்கு மீன் வாங்க அதிகாலை புதுக்குப்பம் மீனவ பெண்கள் லட்சுமி(45), கோவிந்தம்மாள்(50) நாயகம், கமலம், கெங்கையம்மாள்,பிரேமா ஆகிய 6 பேர் ஆட்டோவுக்காக கிழக்கு கடற்கரை சாலையோரம் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பெண்கள் மீது மோதியது.
இதில் லட்சுமி மற்றும் கோவிந்தம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கெங்கையம்மாள் (வயது 45) பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. காயமடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரை ஓட்டிவந்த சென்னையை சேர்ந்த டிரைவர் விக்னேஸ்வரன், மற்றும் காரில் பயணம் செய்த கவுதம், சேது, பிரசாந்த், திரிஷா,ஆகிய 5 பேர் புதுச்சேரி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது.
- 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் ஜிப்மர் உயர்சிகிச்சை மருத்துவக் கல்லூரிக்கான முன்னாள் ஆலோசகர் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் மன்சுக் மாண்டாவியாவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:-
2016-ல் சுமார் 50 மாணவர்களுடன் துவ ங்கப்பட்ட காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கை, 2 ஆண்டுகளுக்கு முன்னர் 62 ஆக உயர்த்த ப்பட்டது. 506 படுக்கைகள் கொண்ட காரைக்கால் மாவட்ட அரசு மருத்துவமனை மாண வர்களின் பயிற்சிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ மற்றும் மாணவியர் விடுதிகள் புதுச்சேரி அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது.
தற்போது ரூ.460 கோடி செலவில் கல்லூரி மற்றும் நிர்வாக வளாக கட்டிடம், மாணவர் விடுதிகள், மாணவியர் விடுதிகள், டீன், பேராசிரியர்கள், மருத்து வர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கான வீடுகள் மற்றும் குடியிருப்புகள், உணவுக்கூடங்கள் மற்றும் சமையல் கூடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு போதுமான அறைகள் கொண்ட மாணவர் விடுதி களும் முழுமையாக உபயோ கப்படுத்தப்பட உள்ளது. காரைக்கால் ஜிப்மரின் மாணவர் சேர்க்கையை எதிர்வரும் கல்வியாண்டிலேயே தற்போதைய 62 லிருந்து, மத்திய அரசின் மற்ற புதிய மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது போல 150 ஆக உயர்த்த ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் காரைக்கால் உட்பட புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட ப்ப்பட்டுள்ளது.
- நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது.
- புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வானூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 35). சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவரது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து புதுவைக்கு சுற்றுலா வந்தார். புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு நேற்று இரவு வானூர் அடுத்த மொரட்டாண்டிக்கு வந்து தனியார் விடுதியில் தங்கினர்.
அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்தபோது பிரபாகரனுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் பிரபாகரனை அவரது நண்பர்கள் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்து போனார்.
இது குறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது.
புதுச்சேரி:
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள பிரஞ்சு துணை துாதரகத்தில் தேசிய தின விழா கொண்டாடப்பட்டது.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரிக்கான பிரான்ஸ் துணை துாதர் லீஸ் தல்போ பரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவைத் தொடர்ந்து, இரவு வாண வெடி நிகழ்ச்சி நடந்தது. கடற்கரையில் 30 நிமிடம் நடந்த வாண வேடிக்கையை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
அப்போது, வாண வெடிகள் குறைந்த உயரத்தில் வெடித்ததால் அதன் தீப்பொறிகள் அருகில் நின்றிருந்த பொது மக்கள் மீது விழுந்தது. அதில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் ஓம்கார் (வயது21) பூர்னடா(22) உப்பளம் நேதாஜி நகர் கணபதி(38) மற்றும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் ஆகிய 4 பேர்மீது வாணவெடி தீப்பொறி விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவத்தினால், கடற்கரை சாலையில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
- இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்
- குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுவை 100 அடி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஓட்டலில், மூலக்குளத்தை சேர்ந்த வாலிபர், தனது காதலியுடன் அறை எடுத்து தங்கினார்.
அப்போது தங்கியிருந்த அறையில் எலக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்ஸில், இன்டர்காம் தொலைபேசியை இணைக்கும் பிளக்பாயிண்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த ரகசிய கேமராவை கழற்றி எடுத்த ஜோடி, உடனடியாக அறையை காலி செய்தது. இது குறித்து ரெசிடென்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, சரியான பதில் கிடைக்காததால் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் ஓட்டல் அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் ரகசிய கேமராவுடன் இணைந்த கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், ஓட்டல் மேலாளர் தேங்காய்த்திட்டு வசந்த்நகரை சேர்ந்த ஆனந்த் (வயது25) மற்றும் ஓட்டல் ஊழியர் அரியாங்குப்பம் ஓடை வெளியை சேர்ந்த ரூம் பாய் ஆப்ரகாம் (22) ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (சி)பெண்களை ஆபாசமாக படம் பிடித்தல், தகவல் தொழில் நுட்ப பிரிவு 66 (இ) ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்தல், கேபிள் மூலம் அனுப்புதல், தடயங்களை மறைத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் ஓட்டல் அறையில் தங்குபவர்களை ஆபாசமாக வீடியோ எடுக்க கேமரா மறைத்து வைத்துள்ளனரா அல்லது ரகசிய கேமரா காட்சிகளை நேரடியாக இணையதளம் வழியாக கண்டு ரசித்து வந்தனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
- மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை நகரத்தின் மைய பகுதியில் உள்ள பெரியமார்க்கெட் என அழைக்கப்படும் குபேர் அங்காடி புதிதாக கட்டப்பட உள்ளது.
50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் பெரியமார்க்கெட்டில் இட நெருக்கடி இருந்து வந்த நிலையில், அடிப்படை வசதிகளும் இல்லாததால் அதை நவீனமுறையில் புதிதாக கட்ட அரசு தீர்மானித்துள்ளது.
இதனால் பெரியமார்க்கெட் வியாபாரிகளை அங்கிருந்து தற்காலிகமாக ரோடியர் மில் திடலுக்கு இடமாறும்படி நகராட்சி அறிவித்திருந்தது.
இதற்கு பெரியமார்க்கெட்டில் உள்ள நிரந்தர மற்றும் அடிக்காசு, மீன் அங்காடி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடைகளை காலி செய்யாமல், தேவையான சீரமைப்பு பணிகளை பகுதி, பகுதியாக நிறைவேற்றித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் 4 மணி நேரம் கடைகளை அடைத்து பெரியமார்க்கெட் அனைத்து வியபாரிகளும் ஒன்றிணைந்து சாய்பாபா திருமண மண்டபத்தில் கூட்டம் நடத்தினர்.
இந்த கூட்டத்தில், பெரியமார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது என தீர்மானமும் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பெரியமார்க்கெட்டில் உள்ள கடைகளில் நகராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அந்த அறிவிப்பில், புதுவை நகராட்சிக்கு சொந்தமான குபேர் அங்காடியில் வியாபாரம் செய்யும் அனைத்து வகையான வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கு அறிவிப்பது என்னவென்றால், தற்போது பழுதான நிலையில் உள்ள குபேர் அங்காடி வளாகத்தை புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் தேசிய கட்டிட கட்டுமான கழகத்தால் மறுகட்டுமானம் செய்யும் பணி விரைவில் தொடங்க புதுவை அரசு தீர்மானித்துள்ளது.
அந்த பணி முடிவடைந்தவுடன் தற்போது கடை ஒதுக்கீடு பெறப்பட்ட அனைத்து வகை வியாபாரிகளுக்கும் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு புதிய ககைடள் மறு ஒதுக்கீடு செய்து தரப்படும்.
ஆகவே விரைவில் தொடங்க உள்ள கட்டுமான பணிக்கு ஏதுவாக தற்போது குபேர் அங்காடியில் இயங்கி வரும் அனைத்து வகை கடைகளும் (மீன் அங்காடி தவிர்த்து) புதுவை கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் வளாகத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட அனைத்து வியாபாரிகளும் தங்கள் வியாபாரத்தை ரோடியர் மில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைக்கு மாற்றம் செய்து அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இன்று காலை இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். காலை 10.30 மணியளவில் பெரியமார்க்கெட் வியாபாரிகள் ஒன்றுகூடி கடைகளை அடைத்து நேருவீதி-காந்தி வீதி சந்திப்பில் திரண்டனர்.
இதில் மீன் அங்காடி பெண் வியாபாரிகளும் பங்கேற்றனர். அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.
ஆனால் வியாபாரிகள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேரு வீதி வழியாக காமராஜர் சிலை சந்திப்புக்கு வந்தனர். அங்கு நாலாபுறமும் சாலை சந்திப்புகளில் அமர்ந்து வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
மறியலால் அண்ணாசாலை, காமராஜர் சாலை, நேருவீதி சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வாகனங்களில் வந்தவர்கள் அருகிலிருந்த சாலைகளின் வழியாக சென்றனர். வியாபாரிகள் சாலையின் மைய பகுதியில் அமர்ந்து கோஷம் எழுப்பி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நகராட்சி அறிவிப்பை வாபஸ் பெறும்வரை போராட்டத்தை தொடர்வோம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் சட்டசபையை நோக்கி ஊர்வலமாக சென்றனர் இதனால் புதுவை நகரின் மைய பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
- மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை கலெக்டர் சோதிட்டார்.
- பாதியில் படிப்பை நிறுத்திய 9-ம் வகுப்பு மாணவனிடம் கலெக்டர் குலோத்துங்கன் உருக்கமாக பேசி படிப்பை தொடர வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால்:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், தொடர் நடவடிக்கையை கலெக்டர் குலோத்துங்கன் எடுத்து வருகிறார். அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டுவருகிறார். அதன் ஒரு பகுதியாக, காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தேனூரில் அமைந்துள்ள சண்முகம் அரசு மேல்நிலை பள்ளியில், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பள்ளிவளாகம், வகுப்பறைகள், கழிவறை, விளையாட்டுத்திடல் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை சுத்தமாக இல்லாத காரணத்தினால் அடைப்பு ஏற்பட்டு மாணவர்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருந்ததை அறிந்து,உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து கழிவறை அடைப்பை சரி செய்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி உத்தரவிட்டார்.
மேலும், பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்டிட பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்திடுமாறும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாணவர்களின் பாடபுத்தகங்களை வாங்கி ஒரு சில கேள்விகளை கேட்டு மாணவர்களின் கல்வி அறிவை சோதிட்டார்.
அப்போது, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் 100 சதவீத விழுக்காடு பெற்று இப்பள்ளியின் பெருமையை நிலை நாட்ட வேண்டும். இப்போது படித்தால்தான் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு சென்று நமது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கமுடியும். நாமும் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்றார்.
இதை தொடர்ந்து, மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்த கலெக்டர், 4 பேர் தொடர் விடுமுறையில் இருப்பதையும், 9-ம் வகுப்பு படித்த மாணவன், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, எதிரே உள்ள ஒரு கடையில் பணி செய்வதாக மாணவர்கள் கூறியதை கேட்ட கலெக்டர், உடனடியாக அந்த மாணவனை அழைத்து, அவரிடம் உருக்கமாக பேசி, மீண்டும் பள்ளி படிப்பை தொடரவேண்டும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.
மேலும் அங்கு இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம், அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து வந்து தன்னை சந்திக்கும்படியும் கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும், வரும் கல்வியாண்டில் 100சதவீத தேர்ச்சி விழுக்காடு பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும். இடைநிறுத்தல் மாணவர்களை அழைத்து கவுன்சிலிங் தரவேண்டும் என்றார்.
- சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
- சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
புதுச்சேரி:
பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது.
தற்போது பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று பிரான்சின் ஜெர்சி நகரத்தில் உள்ள மைய பூங்கா வளாகத்தில் திருவள்ளுவர் சிலை செப்டம்பர் மாதம் நிறுவப்பட உள்ளது.
இந்த சிலையை புதுச்சேரியை சேர்ந்த பத்ம விருது பெற்ற சிற்பக் கலைஞர் முனுசாமி வடிவமைத்துள்ளார்.
வெண்கலத்தில் 7 அடியில் 600 கிலோ எடையில் திருவள்ளுவர் சிலை பிரமாண்டமாக உருவாகியுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு விமானத்தில் திருவள்ளுவர் சிலை பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலை திறப்பு விழாவையொட்டி திருவள்ளுவர் மாநாடும் நடத்தப்படுகிறது.
சிலை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
தமிழ் கலாசார மன்றத்தின் மூலம் பிரான்சில் வாரந்தோறும் தமிழ் மொழி வகுப்புகள், பண்பாட்டு இசை, நடனப்பயிற்சி வகுப்புகளை இளையோருக்கு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- பிரகாஷ் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார்.
- டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
புதுச்சேரி:
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருகொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 41) இவர் காரைக்கால் அடுத்த சேத்தூர் தனியார் அடகு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜான்சிராணி 8 மாத கர்ப்பிணி. காரைக்கால் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தொடர்பாக சிகிச்சையில் உள்ளார். நேற்று இரவு மனைவிக்கு இரவு உணவு வழங்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் பிரகாஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருநள்ளாறு சாலையில் வந்த போது மற்றொரு மோட்டார் சைக்கிள், பிரகாஷ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பிரகாஷ் தலைக்குப்புற சாலையில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் இளங்கோவன் (46) அவரது மனைவி மற்றும் மகன்கள் இருந்தனர்.
இதில் அவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. 4 பேரையும் தனித்தனி வாகனங்களில் ஏற்றி அங்கிருந்தவர்கள் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பிரகாசை சோதித்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பிரகாஷின் சகோதரர் லட்சுமணன் காரைக்கால் போக்குவர த்துக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளங்கோவின் மனைவி மற்றும் மகன்கள் முதலுதவி பெற்று வீடு திரும்பினார். இளங்கோ தொடர் சிகிச்சையில் உள்ளார்.
- மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
- மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் 16 வயது மதிக்கத்தக்க மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினரான 17 வயது நிரம்பிய பிளஸ்-2 படிப்பை பாதியில் கைவிட்ட சிறுவன் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மாணவியுடன், சிறுவன் நெருங்கி பழகிய நிலையில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
சோர்வுடன் காணப்பட்ட சிறுமியை சமீபத்தில் அவரது பெற்றோர் அங்குள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது அந்த மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை அந்த மாணவி கூறினார். உடனடியாக மாணவி மூலமாக சிறுவனிடம் பேசியபோது இச்சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என அவரை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் முறையிட்டனர். விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கர்ப்பமாக்கி மிரட்டல் விடுத்த சிறுவன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.






