என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபசாரம் கைது"

    • வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் ஒரு பெண் இருந்தார்.
    • கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சாம்பவர்வடகரை:

    சாம்பவர்வடகரை சுபேதார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 66). இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை அப்பகுதியில் உள்ளது. கடந்த 6 மாத காலமாக பல்வேறு காரணங்களால் கோழிப்பண்ணையை அவர் நடத்தவில்லை.

    இந்நிலையில் கோழிப்பண்ணை கட்டிடத்தில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்வதாக சாம்பவர் வடகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது அங்கு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கும்பிளம்பாடு வேம்படி தெருவை சேர்ந்த செந்தில்குமார்(32) என்பவருடன் ஒரு பெண் இருந்தார். உடனே போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் கோழிப்பண்ணை உரிமையாளரான செல்லப்பா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
    • விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகரில் சமீபத்தில் ஒரு வீட்டை தங்கும் விடுதியாக மாற்றப்பட்டு இருந்தது.

    அந்த விடுதிக்கு பெண்களும், ஆண்களும் வந்து போவதுமாக இருந்தனர். இதனால் அந்த விடுதியில் விபச்சாரம் நடக்கலாம் என அப்பகுதி மக்கள் பெரிய கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர்.

    விடுதி அறைகளில் விபசார தொழிலுக்கு பயன்படுத்தும் காண்டங்களும் இருந்தன. இதனால் அந்த விடுதியில் விபசார தொழில் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவர் திண்டிவனம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (62) விடுதி மேலாளராகவும் மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண் என்ற அருண்குமார் விபசார புரோக்கராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் விபசார தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    • இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் 15 வேலம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அருகே ஜனார்த்தனன் (வயது 25) என்பவர் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். அங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த மசாஜ் சென்டரை கண்காணித்து வந்தனர். இதில் அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மசாஜ் சென்டர் உரிமையாளர் ஜனார்த்தனனை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவலின் பேரில் போலீசார் ஸ்பா சென்டரை சோதனை செய்தனர்.
    • ஜனாப் கான் என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூரில் பாகலூர் சாலையில் நல்லூர் ஜங்ஷன் அருகில் ஸ்பா சென்டர் ஒன்று இயங்கி வருவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடத்தி வருவதாகவும் அட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் போலீசார் அந்த ஸ்பா சென்டரை சோதனை செய்தனர். அதில் அந்த ஸ்பா சென்டரில் இளம் பெண்களை வைத்து விபசார தொழில் செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இளம்பெண்களை மீட்ட போலீசார், ஸ்பா சென்டரை நடத்தி வந்த ஜனாப் கான் (40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். புதுடெல்லி பத்பூரை சேர்ந்த அவர் ஓசூர் நல்லூர் பகுதியில் தங்கி ஸ்பா சென்டர் பெயரில் இளம் பெண்களை விபசார தொழிலை நடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×