search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் எப்போதும் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும்புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தல்
    X

    பயிற்சியினை நிறைவு செய்த பயனாளிகளுக்கு, அமைச்சர் சந்திரபிரியங்கா சான்றிதழ் வழங்கினார்.

    பெண்கள் எப்போதும் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும்புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா அறிவுறுத்தல்

    • ஊர் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.
    • பயிற்சியினை நிறைவு செய்த பயனாளிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில், புதுவை அரசு தொழி லாளர் துறை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் முகாமின் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காகிதப்பை தயாரிக்கும் பயிற்சி முகாம் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பயிற்சியினை நிறைவு செய்த பயனாளிகளுக்கு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கினார். இணை தொழிலாளர் ஆணையர் ராகினி, தொழிலாளர் துறை அதிகாரி மேரி ஜோஸ்பின், மேலாண் இயக்குனர் ஷ்யாம் சுந்தர் மற்றும் துறையின் அதிகாரிகளும் பயிற்சி பெற்ற கைவிணை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள். பயிற்சி பெற்றவர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா சான்றிதழ் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இதுவரை இந்த முகாமில், 130 மகளிர் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளார்கள். நிரவி திரு.ட்டினம் பகுதியிலும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சி வகுப்பில் தினமும் 300 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் புதுவையிலேயே காரைக்கால் பெண்கள்தான் இந்த பயிற்சியில் மிகுந்த ஆர்வமுடன் கற்றுக் கொள்கிறார்கள்.

    தொழிலாளர் துறை மூலம் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் உங்கள் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. இந்த பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்ற 3 பேர் சொந்தமாக கடை வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உங்களுக்கு உதவுவதற்காக மாங்கனி திருவிழாவில் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்து பேசி இவர்களுக்கு ஒரு கடை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்கள் திறமைகளை மற்றவர்களுக்கு கற்றுத் தர முன்வரவேண்டும். முக்கியமாக, பெண்கள் எப்போதும் தங்களது சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×