என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார பஸ்"

    • அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.
    • தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    சென்னை:

    சென்னையில் முதல் முறையாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ் சேவை வருகிற 11-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்து உள்ளாா்.

    டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பஸ்களை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சார பஸ்கள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது.

    முதல்கட்டமாக, சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பஸ்களை கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் கூறியதாவது:-

    வியாசா்பாடி பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்களையும், 80 சாதாரண மின்சார பஸ்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம். வருகிற 11-ந்தேதி முதல் இந்த பஸ்களின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இந்த பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
    • ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. இப்போது முதல் முறையாக மின்சார பஸ்கள் விடப்பட்டுள்ளது.

    சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 தாழ்தள மின்சார பஸ்களை உலக வங்கி உதவியுடன் வாங்க முடிவு செய்யப்பட்டது.

    ரூ.697 கோடி மதிப்பீட்டில் அதில் முதல் கட்டமாக 625 மின்சார பஸ்களுக்கான ஒப்பந்தம் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓம் குளோபல் மொபிலிட்டி நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டது.

    இதில் 400 ஏ.சி. அல்லாத பஸ்களும், 225 ஏ.சி. பஸ்களும் அடங்கும். இந்த மின்சார பஸ்களை இயக்குவதற்காக வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டையில் உள்ள பணிமனைகளை புதுப்பித்து அங்கு பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான சாதனங்களும் அமைக்கப்பட்டு வந்தது.

    இப்போது வியாசர்பாடி பணிமனையில் ரூ.200.40 கோடி மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை இயக்குவதற்கான பராமரிப்பு கூடம், புதிய மின் மாற்றிகள் பொருத்துதல், அலுவலக நிர்வாக கட்டிடம், பணியாளர் அறை ஆகியவை புதுப்பித்து அமைக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவுதல் போன்ற பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வியாசர்பாடி பணிமனையில் இருந்து 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அமைச்சர் சா.கி.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாசர்பாடிக்கு நேரில் சென்று 120 புதிய தாழ்தள மின்சார பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்த பஸ்சில் ஏறி அதில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். முன்னதாக அங்கு ரூ.47.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த பணிமனையையும் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கலாநிதி எம்.பி., மேயர் பிரியா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், அசோக் லேலண்ட் நிறுவன அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த 120 புதிய மின்சார பஸ்கள் 11 வழித்தடங்களில் முதலில் இயக்கப்பட உள்ளது.

    இந்த பஸ்களில் பாதுகாப்பு கருதி 7 சி.சி.டி.வி. கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்யேகமாக இருக்கைகள் உள்ளது. எதிர் எதிரே அமர்ந்து செல்லும் வகையில் இருக்கைகள், லக்கேஜ் வைப்பதற்கான இடம், அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியிடுவதற்கான ஒலி பெருக்கிகள், அவசர காலங்களில் அலாரம் ஒலிக்கக்கூடிய பொத்தான்கள், ஒவ்வொரு இருக்கையின்கீழ் சீட் பெல்டுகள், செல்போன்களுக்கான சார்ஜர் பாயிண்டுகள், எல்.இ.டி. விளக்குகள்.

    டிரைவருக்கு மின்விசிறி வசதி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி என ஏராளமான வசதிகள் இந்த மின்சார பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பஸ்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீட்டர் வரை இயக்கலாம்.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு டிக்கெட் வழங்குவார்கள். இந்த பஸ்களை இயக்கும் தனியார் ஒப்பந்ததாரருக்கு கி.மீ. ஒன்றுக்கு ஏ.சி.வசதி இல்லாத பஸ்களுக்கு 77 ரூபாயும், ஏ.சி. பஸ்களுக்கு 80.86 ரூபாயும் வழங்க மாநகர போக்குவரத்து கழகம் நிர்ணயம் செய்து உள்ளது.

    • பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது.
    • 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.

    புதுச்சேரி:

    சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது.

    இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.

    புதுச்சேரி பஸ் நிலையம் மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.

    ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.

    41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

    • நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
    • விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.

    மும்பை:

    மும்பை குர்லா மேற்கில் எஸ்.ஜி. பார்வே பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி பெஸ்ட் மின்சார பஸ் விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். பஸ் டிரைவர் 3 நாட்கள் பயிற்சிக்கு பிறகு டிசம்பர் 1-ந்தேதி முதல் மின்சார பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. இது விபத்துக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் என தெரிகிறது. மேலும், இந்த விபத்துக்கு மனிதத்தவறும் காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்துக்குப்பிறகு பெஸ்ட் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, மின்சார பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் மின்சார பஸ் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பரில் பெஸ்ட் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டது. பெரும்பாலான மின்சார பஸ்கள் தானியங்கி பரிமாற்றத்தை கொண்டுள்ளன. விபத்துகளை தடுப்பதற்கும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் பஸ் டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    பெஸ்ட் நிறுவனத்திற்கு முறையே 2100 மற்றும் 2400 பஸ்களை வழங்குவதற்கான 2 தனித்தனி ஒப்பந்தங்கள் போடப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, விக்ரோலி மற்றும் காட்கோபர் டெப்போக்களில் 90 புதிய பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும்.

    திருமலை:

    மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் டி.செங்கல் ரெட்டி கூறியதாவது:-

    புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைந்தது. மொத்தம் 100 பஸ்கள் வரும். மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு இடையே 64 பஸ்கள், திருப்பதியில் இருந்து நெல்லூர், மதனப்பள்ளி, கடப்பா பகுதிக்கு 12 பஸ்கள் இயக்கப்படும்.

    ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மலைச் சாலையில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும். வருகிற 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார். அப்போது அவர் மின்சார பஸ்களை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×