search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதியில் இருந்து 27-ந்தேதி முதல் மின்சார பஸ்கள் இயக்கம்: ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்கிறார்
    X

    அலிபிரிக்கு வந்துள்ள மின்சார பஸ்.

    திருப்பதியில் இருந்து 27-ந்தேதி முதல் மின்சார பஸ்கள் இயக்கம்: ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்கிறார்

    • ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும்.

    திருமலை:

    மாவட்ட பொது போக்குவரத்து அலுவலர் டி.செங்கல் ரெட்டி கூறியதாவது:-

    புதிய மின்சார பஸ்கள் 11-ந் தேதி நள்ளிரவு அலிபிரி பணிமனைக்கு வந்தடைந்தது. மொத்தம் 100 பஸ்கள் வரும். மின்சார பஸ்கள் திருமலை-திருப்பதி, திருப்பதியிலிருந்து விமான நிலையத்திற்கு இடையே 64 பஸ்கள், திருப்பதியில் இருந்து நெல்லூர், மதனப்பள்ளி, கடப்பா பகுதிக்கு 12 பஸ்கள் இயக்கப்படும்.

    ஒவ்வொரு பஸ்சும் 50 சீட்டுகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மலைச் சாலையில் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப் பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முழுமையாக மின்சார பஸ்கள் மட்டுமே இருக்கும். வருகிற 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இதில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்கிறார். அப்போது அவர் மின்சார பஸ்களை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×