என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாணவி"

    • பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
    • போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கதிரவன் மகள் சபிதா(20). சென்னையில் தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி யாண்டு படித்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை 5 மணிக்கு புதுவை டி.ஜி.பி. அலுவலகம் எதிரே அமர்ந்து தர்ணா செய்தார். பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அப்போது 2 ஆண்டுக்கு முன் சின்ன காலாப்பட்டை சேர்ந்த சந்தோஷ்குமார்(22) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, காதலித்தோம். திருமணம் செய்துகொள்வ தாகக்கூறி அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    என்னை சென்னையில் தங்க வைத்து படிப்பு, விடுதி செலவுகளை செய்தார்.

    சில மாதம் முன் இருவரும் தனி வீடு வாடகை எடுத்து தங்கினோம். திருமணத்திற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினேன். திடீரென கடந்த 29-ந் தேதி என்னை திருமணம் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியேறும்படி துரத்தினார்.

    மன உளைச்சலால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று திரும்பினேன். அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தன்னை ஏமாற்றிய காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

    போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைதத்தொடர்ந்து சபிதா, சந்தோஷ்குமார் போலீசார் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு மணமக்களாக வீட்டுக்கு புறப்பட்டனர்.

    ×