search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் திரு.பட்டினத்தில்  புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
    X

    காரைக்கால் திரு.பட்டினத்தில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

    • புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • ரூ.1500 மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மலையன் தெருவில் ராஜேந்திர பிரசாத் நடத்திவரும் கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, திரு.பட்டினம் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி உத்தரவின் பேரில், சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, ரூ.1500 மதிப்பிலான அப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜேந்திரபிரசாத்தை கைது செய்தனர்.

    Next Story
    ×