search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Undergraduate Studies"

    • இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
    • நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்ப ட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி களில் இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. காரைக்கால் மாவட் டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இள நிலை பட்ட படிப்புக ளான பி.ஏ,. பி.காம், பி.எஸ்.சி ஆகிய வகுப்புகளில் சேருவதற்கா ன முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி யது. இந்த கலந்தாய்வு, இம்மாதம் 27-ந் தேதி வரை, காரைக்கால் நேரு நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தேர்வுக் கூடத்தில் நடை பெறும் என்றும், நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான அனுமதி சான்றிதழை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது ஆசாத் ராசா மற்றும் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் மாணவ ர்களுக்கு வழங்கினார்கள்.

    ×